மழ மழலையாய் உன் முகம்.
வெயில் தோற்றிடும் ஒரு குணம்.
சிறு பிழையில்லா உந்தன் மனம்.
உன் இசை அரவணைப்பில் மகிழ்ந்தோம்
தினம் தினம்..
உன் அன்னை செய்த தவமோ
நீ பிள்ளையாக பிறந்தாய்.
நிலத்தன்னை செய்த தவமோ
நீ இந்த மண்ணில் பிறந்தாய்.
நீ வாழும் இந்த உலகில்
யாம் வாழ பெருமை கண்டோம்
உந்தன் ரசிகன் என்று சொல்ல
வேறு பெருமை இல்லை என்றோம்.
உன்னை படித்து நாங்கள் வாழ
அந்த இறையையை யாசிக்கின்றோம்.
துன்பம் என்னும் கடலை
மூழ்கி திளைத்த போதும்.
இறையை மறக்கவில்லை
அது தானே உந்தன் ஞானம்.
புகழில் கொடியில் இருந்தும்
துட்சம் என்ற எண்ணம்.
மனிதன் மீது கொண்ட அன்பு
மாறவில்லை இன்னும்.மழ மழலையாய் உன் முகம்..
ஆஸ்கார் நாயகன் A.R.ரஹ்மான் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்சில
நாட்கள் முன்பே..
என்றும் அன்புடன் 'தமிழ்கவி'௧விசதீஷ்
The INTERNET now has a personality. YOURS! See your Yahoo! Homepage.
http://in.yahoo.com/