Date: Sun, 5 Jun 2011 16:49:24 -0700










செடியைக் கூட வாழ்த்துங்கள்


* உண்மையில் எதிரி உனக்கு உண்டு என்று சொன்னால், உள்ளத்தில் எழும்
ஒழுங்கற்ற எண்ணமே. உண்ணும் உணவு கூட நம் உடல் மட்டும் தான் பாய்கிறது.
ஆனால், எண்ணங்களோ பிரபஞ்சத்தின் எங்கும் பாயக்கூடியது.
* தேவைகளைப் பெருக்கிக் கொண்டே போனால், போகத்திலேயே மனம் நாட்டம்
கொண்டிருக்கும். அதனால் பிறவித்தொடர் நம்மை விட்டு என்றும் நீங்காது.
தேவைகளை முடிந்தவரை சுருக்கமாகவே வைத்துக் கொள்ளுங்கள்.
*எல்லாப் பொருள்களிடத்தும், எல்லா உயிர்களிடத்தும் இறைநிலையைக் காண
வேண்டும். அப்படி காணக்கூடிய அளவு அறிவிலும் உயர்வு உண்டாகும்.
* எந்தச் சூழ்நிலையிலும் ஒருவனைச் சினம் அணுகவில்லை என்றால் அவன் ஞானம்
பெற்றுவிட்டான் என்று உறுதியாகச் சொல்லலாம்.
* தேவையான இடத்தில் சினம் கொண்டது போல நடிக்கலாமே தவிர, எப்போதும்
சினத்தோடு இருப்பது முறையல்ல. போலியாகக் கோபம் கொள்ளும்போது, மனதில்
சிறிதும் சலனம் கூடாது. எதிராளியைத் திருத்துவது மட்டுமே அதன்
நோக்கமாகும்.
* ஒரு செடியைப் பார்த்தால் கூட வாழ்க வளமுடன் என்று உளப்பூர்வமாக
வாழ்த்துங்கள். உலகத்திற்கு நன்மையான செயல்களைச் செய்து அதனால் அனைவரும்
மனநிறைவு பெற வேண்டும் எப்போதும் வாழ்த்துங்கள்.
* உடையில் ஒழுக்கம், உள்ளத்தில் கருணை, நடையிலே கண்ணியம் என்று இருப்பதே
நல்லோர்களின் பண்பாகும்.

-வேதாத்ரி மகரிஷி.



-- 
V.K.RAGHUNATHAN

Reply via email to