இந்து மதம் பற்றிய 200 பழமொழிகள்- Part 2 *
ராம ராம ராம* இராம பாணம் பட்டு உருவினாற்போல இராமர் இருக்கும் இடம் அயோத்தி இராம லெட்சுமணரைப் போல இசைந்திருக்கிறது இராம வாக்குக்கு இரண்டு உண்டோ? அனுமார் வால் போல நீளுகிறதே இராமனைப் போல ராசா இருந்தால் அனுமாரைப் போல சேவகனும் இருப்பான் இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன? இராமன் மங்கையோடு இணங்கியது அவம் இராமாமிர்தமே சீவனம் என்று பட்டினியாய் இருக்கலாமா? இரா முழுதும் இராமாயண்ம் கேட்டு சீதைக்கு ராமன் என்ன வேண்டும் என்ற கதை (சீதைக்கு ராமன் சித்தப்பன் என்ற கதை) இராமேசுரத்துக்கும் காசிக்கும் போயும் என்னைப் பிடித்த சநீசுரன் தொலையல்ல தம்பி உடையான் படைக்கஞ்சான் ( லெட்சுமணன் பற்றிய மொழி) இராவண சந்யாசி போல இருக்கான் இராவணன் குடிக்கு மஹோதரன் போலும், சுயோதனன் குடிக்கு சகுனி சுக்கிரீவ ஆக்கினையாய் இருக்கிறது போலும் *சந்நியாசி புராணம் * சந்நியாசி கோவணத்துக்கு இச்சித்து சமுசாரம் மேலிட்டது போல சந்நியாசி கோவணம் கட்டினது போல சந்நியாசம் சகல நாசம் சந்நியாசிக்குப் பழைய குணம் போகாது சந்நியாசிக்கு சாதி மானம் போகாது சந்நியாசி பயணம் திண்ணையை விட்டுக் குதிப்பது தான் சந்நியாசி பூனை வளர்த்தது போல சந்நியாசியைக் கடித்த நாய்க்கு பின்னாலெ நரகமாம், சந்நியாசிக்கு முன்னாலெ மரணமாம் சந்நியாசியை நிந்தித்தவனுக்கு பின்னாலெ நரகமாம் சந்நியாசி வீடு திண்ணைல சபையிலெ நக்கீரன் அரசிலே விற்சேரன் சப்தப் பிரம்மத்திலே அசப்த பிரம்மம் பிரகாசிக்கிறது சப்தப் பிரம்மம் பரப் பிரம்மம் இரண்டையும் அறிய வேண்டியது *பழமொழிகளில் அவதாரம் * கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பக் கூடாது (வாமன அவதாரம்) தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் (நரசிம்ம அவதாரம்) வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் (காகாசுரன் கதை-ராமாவதாரம்) சாத்திரம் கற்றவன் தானே காசு சாத்திரம் பாராத வீடு சமுத்திரம், பார்த்த வீடு தரித்திரம் சாத்திரம் பார்த்துப் பெண்ணைக் கொள், கோத்திரம் பார்த்துப் பெண்ணைக் கொடு சாத்திரம் பொய் என்றால் கிரகணத்தைப் பார் சாபமிட்டருண்டோ? தலையில் திரு எழுத்தோ? வேக விட்டருண்டோ? எழுத்தின்படி தானோ? சுவர்க்கத்திலே தோட்டியும் சரி, தொண்டமானும் சரி சுவர்க்கத்துக்குப் போகிறபோது கக்கதிலே கூத்தியரா? சுவர்க்கத்துக்குப் போகிறபோது கக்கதிலே ஒரு பிள்ளை ஏன்? சுவர்க்கத்துக்குப் போனாலும் கக்கதிலே அட்சய பாத்திரமா? சுவாமி வரங் கொடுத்தாலும் முன்னடியான் வரங் கொடான் சூட்சுமத்தில இருக்குது மோட்சம் சூட்சுமம் அறியாதவனுக்கு மோட்சம் இல்லை *14 லோகங்கள்* கீழேழு லோகமும் மேலேழு லோகமும் கண்ட காட்சியா? குபேர பட்டணம் கொள்ளை போனாலும் கொடுத்து வையாத பாவிக்கு ஒன்றுமில்லை ஒண்டவந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டியதாம் ஒண்டவந்த பிடாரி ஊர்ப் பிடாரி ஆனது போல நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் ஒன்று தெரிந்தவனுக்கு எல்லாம் தெரியாது ஒன்றைத் தொடினும் நன்றைத் தொடு காவியுடுத்தவர் எல்லாம் விவேகானந்தரா? *ஏகாதசி மஹிமை * ஏகாதசிக்கு மா இடித்தாற் போல ஏகாதசித் திருடியை ஏற்றடா ரததின் மேலே ஏகாதசி மரணம் துவாதசி தகனம் ஏகாதசி மரணம் நல்லதென்று நாக்கைப் பிடுங்கிக் கொள்வார்களா? எறும்பு முதல் எண்ணாயிரம் கோடிக்கும் தெரியும் நாராயணன் என்னை காப்பாற்ற மாட்டானா? ஓமப் பிண்டத்தை நாய் இச்சித்தாற் போல வடக்கே போன வாலியும் வரக் காணோம் அவன் தம்பி அங்கதன் ரிஷிப் பண்டம் ராத்தங்காது ஆண்டியே அன்னத்துக்கு அலையறச்சே லிங்கம் பால் சோற்றுக்கு அழுகிறதாம் ஆதி முதல்வனே பாய்ந்தோடும் போது ஐயர் மணி ஆட்டுவாரா? ஆத்தாள் அம்மணம், அன்றாடம் கோ தானம் ஆயிரம் உளிவாய்ப் பட்டுத்தான் ஒரு லிங்கம் ஆகவேண்டும் சரியான சாப்பாட்டு ராமன் அண்டத்தை சுமக்கிறவனுக்கு சுண்டைக்காய் பாரமா? அண்ணாமலையாருக்கு 64 பூசை, ஆண்டிகளுக்கு 74 பூசை அண்ணாமலையார் அருள் உண்டானால் மன்னார்சாமி மயிர் பிடுங்குமா? வசிட்டர் வாயால் பிரம்ம ரிஷி பகீரதப் பிரயத்தனம் செய்தான் அகாரியத்திலே பகீரதப் பிரயத்தனம் ஆகாது அகோர தபசி, விபரீத நிபுணன் அக்கிரகாரத்தில் பிறந்தாலும் நாய் வேதம் அறியுமா? அக்கினி தேவனுக்கு அபிடேகம் செய்தது போல இருக்கிறது அங்காளம்மைத் தெய்வம் அகப்பைக் கூறு வழியாக வரும் அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது வீட்டுக்கு வந்த வரலெட்சுமி லெட்சுமி இருக்கும் இடத்தில சரசுவதி இருக்க மாட்டாள் பெருங்காயம் இருந்த பாண்டம் வாசனை போகாது (பாவம் செய்தவர்கள் நிலை) பிறவிக் குருடனுக்குத் தெய்வம் கண் கொடுத்தாற் போல வைகுண்டம் என்பது திரு மாநகரம் குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்தில் *வேத மகிமை * வேதியர்க்கு அழகு வேதம் ஓதுதல் வேதத்தில் நாலு விதம் உண்டு வேதத்திற்கு உலகம் பகை, உலகத்திற்கு ஞானம் பகை வேதத்திற்கும் விக்ரகபக்திக்கும் பகை வேதத்தை அறியாத கிழவன் வீண் வேதம் ஆய்ந்து ஓதல் போதகர் முறைமை வேதம் ஏன், நியாயம் ஏன், வித்தாரம் கள்ளருக்கு வேதம் ஒத்த மித்திரன் வேதம் கேடவரை, வேதம் கேடவர் என்பான் ஏன்? வேதம் பொய்த்தாலும் வியாழம் பொய்யாது உருத்திராக்கப் பூனை உபதேசம் பண்ணினது போல ஐயப்பன் குதிரையை வையாளி விட்ட கதை ஐயர் ஒன்றே கால் சேர் அவர் அணியும் லிங்கம் அரை சேர் ஐயானாரே வாரும், கடாவைக் கொள்ளும் ஐயனார் கோவிலிலே ஆனை பிடிக்க வேண்டும் ஐயனார் கோவில் செங்கல் அத்தனையும் தங்கம் ஐயனார் கோவில் மண்ணை மிதித்தவர் அத்தனை பேரும் பத்திரகாளி கஞ்சி வரதப்பா என்றால் வாயில் வாரப்பா என்றானாம் காசிக்குப் போனால் காலாட்டிப் பிழைக்கலாம் கண்ணைக் கெடுத்த தெய்வம் மதியைக் கொடுக்கும் சுடலை ஞானம் திரும்பி வரும் மட்டும்தான் (ஸ்மசான வைராக்யம்) தவசிச்சிக்கு தயிரும் சோறும் விசுவாசிக்கு வென்னீரும் பருக்கையும் தவசிப்பிள்ளை நமசிவாயம் கையாசாரம் தவசுக்குத் தனிமையும் தமிழுக்குத் துணையும் தவசே அணிகலன், தாழ்மையே மேன்மை தவத்திலிருதால் தலைவனைக் காணலாம் தவத்துக்கொருவர் கல்விக்கிருவர் உன்னையே நீ அறிவாய் எல்லாம் தலை விதி (கர்ம வினைக் கொள்கை) உடலில் உள்ள அழுக்கைப் போக்கிடலாம் உள்ளத்திலுள்ள அழுக்கைப் போக்குவது கஷ்டம் ஆடி கழிஞ்ச அஞ்சாம் நாள் கோழி அடிச்சுக் கும்பிட்டானாம் மலையத்தனை சுவாமிக்கு கடுகத்தனை கற்பூரம்/ சாம்பிராணி *பெருமாள் * பெருமாளைச் சேர்ந்தோருக்குப் பிறப்பில்லை, பிச்சைச் சோற்றுக்கு எச்சல் இல்லை பெருமாள் இருக்கிற வரையில் திருநாள் உண்டு பெருமாள் இருந்தால் அல்லவோ திருநாள் நடக்கப் போகிறது? பெருமாள் என்கிற பெயரை மாற்றி பெத்த பெருமாள் ஆச்சு பெருமாள் செல்கிற வழியில் புல்லாய் முளைத்தாலும் போதும் பெருமாள் நினைத்தால் வாழ்வு குறைவா? பிரம்மா நினைத்தால் ஆயுசு குறைவா? பெருமாள் புளிச்ச தண்ணீருக்கு அலைகிறான், அனுமார் ததியோதனம் கேட்கிறார் பிச்சை எடுக்கிறதாம் அதைப் பிடுங்குகிறதாம் அனுமார் பிள்ளையாரைப் பிடிச்ச சனி அரசமரத்தையும் பிடிச்சதாம் -- * * **** **** <http://www.tagged.com/photo_view.html?photoId=261938212&uid=7258224307> *V a n a k k a m S u b b u * <http://www.tagged.com/photo_view.html?photoId=261938212&uid=7258224307> **** <http://groups.yahoo.com/group/sometimeonthenet/join> ** *வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! **வாழிய பாரதமணித் திருநாடு! *<http://www.incredimail.com/?id=620786&did=10501&ppd=2743,201201221300,9,[TypeID],[IM_UPN2]&rui=115371018>
