*வெற்றியைக் காண**ச்** சிறந்த வழிகள் எவை?*
* செயலை விதையுங்கள்; பழக்கம் உருவாகும். பழக்கத்தை விதையுங்கள்; பண்பு
உருவாகும். பண்பை விதையுங்கள்; எதிர்காலம் உருவாகும்.*
*- ஜேம்ஸ் ஆலன்.*
* உன் விதியை வகுப்பவன் நீயே! உனக்குத் தேவையான எல்லா வலிமைகளும் உனக்குள்ளேயே
குடிகொண்டு இருக்கின்றன.*
*- சுவாமி விவேகானந்தர்.*
* தோல்வியைக் கண்டு அஞ்சுபவர்களிடமிருந்து வெற்றி தானாகவே ஒதுங்கிக்
கொள்கிறது.*
*- எமர்சன்.*
* வாழ்க்கையில் வெற்றி அடைய வேண்டுமானால் கஷ்டங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.*
*- நெப்போலியன்.*
* அனுபவம் ஒரு கடுமையான ஆசிரியர். காரணம் அது முதலில் தேர்வை வைக்கிறது.
பின்னர் பாடம் கற்பிக்கிறது.*
*- வெர்ணன்.*
* வசந்தம் ஒரே நாளில் மலர்ந்து விடுவதில்லை. அதுபோலத்தான் வாழ்வில் உயர்வதும்.*
*- ரூசோ.*
* அடுத்தவரின் வாழ்க்கையுடன் ஒப்பிடாமல் தன் வாழ்க்கையை மகிழ்ச்சியாக
நினைப்பவன் புத்திசாலி.*
*- சாணக்கியன்.*
* சுயமரியாதை, சுயபுத்தி, தன்னடக்கம் இம் மூன்று குனங்களே வாழ்க்கையை சிறப்பான
வெற்றிக்கு வழி நடத்திச் செல்லும்.*
*-டென்னிசன்.*
* மனிதனின் கெட்ட குணங்களை வெறுத்துவிடு;மனிதனை வெறுக்காதே.*
*- ஷேக்ஸ்பியர்.*
* எல்லாத் தடைகளையும் தாண்டி, எடுத்த செயலை நன்னெறிப் பாதையில் முடிப்பவனே
உண்மையான மனிதன்.*
*- துளசிதாசர்.*
* நேரம் என்பது செலுத்தப்பட்ட அம்பைப் போன்றது;அது திரும்பிவராது.*
*- ஜேஷி.*
* அறிவு மௌனத்தைக் கற்றுத்தரும். அன்பு பேச்சைக் கற்றுத்தரும்.*
*- ரிக்டர்.*
* உறுதியைப் போல உழைப்பும் இருந்தால் வெற்றி காண்பாய்.*
*- ஷெல்லி.*
* தன்னைக் கட்டுப்படுத்தத் தெரிந்தவந்தான் வலிமையானவன்.*
*- சாணக்கியன்.*
* அறிவின் முதற்பாடம் செல்வத்தை வெறுப்பது;அன்பின் முதற்பாடம் அதை
அனைவருக்கும் செய்வது.*
*- ரஸ்கின்.*
* வெற்றியைக் காண்பதற்கு நம்பிக்கையும் முயற்சியுமே சிறந்த வழிகள்.வேறு
குறுக்கு வழிகள் இல்லை.*
*- எட்மண்ட் பர்க்.*
* பேசப்படும் சொல்லைவிட எழுதப்படும் சொல்லே வலிமை வாய்ந்தது.*
*- ஹிட்லர்.*
* வேலைக்காரனாக இருக்கக் கற்றுக்கொள்.பிறகு எஜமானனாகும் தகுதி தானாக வரும்.*
*- விவேகானந்தர்.*
* மனம் சொர்க்கத்தை நரகமாக்கும்/நரகத்தை சொர்க்கமாக்கும் தன்மையுடையது.*
*- மில்டன்.*
* தீயுள்ள இடத்தில் சூடுண்டு; சூடுள்ள இடத்தில் தீயுண்டு. அறிவுள்ள இடத்தில்
நினைப்புண்டு; நினைப்புள்ள இடத்தில் அறிவுண்டு.*
*- ஜேம்ஸ்ஆலன்.*
* உணர்ச்சிக்கு முதலிடம் கொடுக்காமல் உழைப்புக்கு முதலிடம் கொடுத்தால்,
வாழ்க்கை உன்னதமாக இருக்கும்.*
*- எடிசன்.*
*தொகுப்பு:- கணேஷ் அரவிந்த்.*
--
<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>
*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*
*வாழிய பாரதமணித் திருநாடு!*
*V a n a k k a m ** S u b b u*
--
You received this message because you are subscribed to the Google Groups
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.