[image: மகத்துவ மூலிகையான கொட்ட பாக்கு… கொழுந்து வெத்தல!]


வெற்றிலை பற்றிய தகவல்களை பார்ப்போம்:

*எங்கு தோன்றியது*

மகத்துவ மூலிகையான வெற்றிலை மலேசியாவில் தோன்றியதாகும், இச்செடி இந்தியா,
இந்தோனேசியா ஆகிய பகுதிகளில் வளர்க்கப்படுகிறது.

தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் சின்னமனூர், கூடலூர் காவேரிக்கரையில் நாமக்கல்
மாவட்டத்தில் பரமத்தி வேலுர் மற்றும் பொத்தனுர் பகுதியிலும், கருர் மாவட்டம்
புகழுர் பகுதியிலும், திருச்சி மாவட்டத்தில் தொட்டியம் பகுதியிலும்
பணப்பயிராகப் பயிரிடப்படுகிறது.

அதுவும் கும்பகோணம் வெற்றிலை என்பது தமிழ்நாட்டில் பெயர் போன ஒன்றாகும்.

கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவில் வெற்றிலை
பயிரப்படுகிறது, கருகருவென கரும்பச்சை நிறத்தில் இருக்கும் வெற்றிலைகள்
ஆண்வெற்றிலைகள் என்றும் இளம்பச்சை வெற்றிலைகள் பெண்வெற்றிலைகள் என
வகைப்படுத்தப்படுகின்றன.

*சுவைப்பதில் இன்பம்*

*ஜீரண சக்திக்கு வெற்றிலை ரொம்ப நல்லது. அதுதவிர நாம் சாப்பிடும்
சாப்பாட்டினால் ஏதும் ஒவ்வாமை வந்தால் அதனை வெற்றிலை நீக்கும்.

*40 வயதிற்கு மேல் மதிய உணவிற்குப் பின் வெற்றிலை, பாக்கு சேர்த்து உண்ணுதல்
மிகவும் அவசியம் ஆகும்.

ஏனென்றால் இந்த வயதிற்குப் பிறகு செரிமான சக்திகள் குறைய தொடங்கும். நாம்
உண்ணும் உணவு முறையாக செரிக்கப்பட்டு சத்துக்கள் உடலில் முழுமையாய்
சேருவதற்கும், உடலின் அனைத்து எலும்புகளுக்கு தேவையான சுண்ணாம்பு[Calcium]
சத்தை சமன் செய்யவும் வெற்றிலை, பாக்கு போடுதல் மிகவும் தேவையாகும்.

*வெற்றிலை, பாக்கு போடும் போது முதலில் பாக்கை மட்டும் போடக் கூடாது, பாக்கை
மட்டும் வாயிலிட்டு மென்று உமிழ்நீரை விழுங்கும் போது இதன் துவர்ப்பினால்
கழுத்துக் குழல் சுருங்கி நெஞ்சு அடைக்கும். மயக்கம், மூர்ச்சை அடைய ஏதுவாகும்.

*வெற்றிலைக்கு நாக இலை என்ற மற்றொரு பெயரும் உண்டு. பாம்பின் விஷத்தைக் கூட
மாற்றும் தன்மை கொண்டதால் இதனை நாக இலை என்றும் அழைக்கின்றனர்.

*வெற்றிலையில் உள்ள சத்துக்கள்*

வெற்றிலையில் 84.4% நீர்ச்சத்தும், 3.1% புரதச் சத்தும், 0.8% கொழுப்புச்
சத்தும் நிறைந்துள்ளது. இதில் கால்சியம், கரோட்டின், தயமின், ரிபோபிளேவின்
மற்றும் வைட்டமின் சி உள்ளது. கலோரி அளவு 44.

தற்போதைய ஆராய்ச்சியில், வெற்றிலையில் மிகவும் வீரியமிக்க நோய் எதிர்ப்புத்
திறன் கொண்ட சவிக்கால்(Chavicol) என்னும் பொருள் இருப்பதாக
கண்டறியப்பட்டுள்ளது.

வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர
வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம்.

*மருத்துவ**ப்** பயன்களை அள்ளித்தரும் வெற்றிலை*

அரைடம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும். இலை நன்கு
சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொரி, சிரங்கு,
படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.

சீதம் நீக்கும், வெப்பம் தரும், அழுகல் அகற்றும், உமிழ்நீர் பெருக்கும், பசி
உண்டாக்கும், பால் சுரக்க வைக்கும், காமத்தைத் தூண்டும். நாடி நரம்பை
உரமாக்கும், வாய் நாற்றம் போக்கும்.

வெற்றிலைச் சாறு சிறுநீரைப் பெருக்குவதற்கும் பயன்படுகிறது.
வெற்றிலைச்சாற்றுடம் நீர் கலந்த பாலையும், தேவையான அளவு கலந்து பருகி வர சிறு
நீர் நன்கு பிரியும்.

வெற்றிலையை கடுகு எண்ணெயில் போட்டு லேசாக சூடு செய்து மார்பில் வைத்துக்
கட்டிவர மூச்சுத் திணறல் மற்றும் இருமலுக்கு சுகம் தரும்.

குழந்தைகளுக்கு வரும் சுரம், சன்னிக்கு வெற்றிலைச் சாற்றில், கஸ்தூரி,
கோரோசனை, சஞ்சீவி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மத்தித்து தேனுடன் கொடுக்க
குணமாகும். சளி, இருமல், மாந்தம், இழுப்பும் குணமாகும்.

வெற்றிலையை அனலில் வாட்டி அதனுள் ஐந்து துளசி இலையை வைத்துக் கசக்கிப்
பிழிந்து சாறு எடுத்து 10 மாத குழந்தைக்கு 10 துளிகள் காலை, மாலை கொடுக்க சளி,
இருமல் குணமாகும். அனலில் வாட்டிய வெற்றிலையை மார்பிலும் பற்றாகப் போட சளி
குறையும்.

குழந்தைகளுக்கு மலர்ச்சிக்கல் ஏற்பட்டால் வெற்றிலைக் காம்பை ஆமணக்கு எண்ணையில்
தோய்த்து ஆசன வாயில் செலுத்த உடனடியாக மலம் கழியும்.

வெற்றிலையை அரைத்து கீல்வாத வலிகளுக்கும், விதைப்பையில் ஏற்படும் வலி, வீக்கம்
முதலியவைகளுக்கு வைத்துக் கட்ட நல்ல பலன் தரும்.

கம்மாறு வெற்றிலைச் சாறு 15 மி.லி. அளவு வெந்நீரில் கலந்து கோடுக்க வயிற்று
உப்புசம், மந்தம், சன்னி, சீதளரோகம், தலைவலி, நீர் ஏற்றம் வயிற்று வலி
குணமாகும்.

வெற்றிலையில் சிறிது ஆமணக்கு எண்ணெய் தடவி லேசாக வாட்டி கட்டிகளின் மேல்
வைத்துக்கட்டி வர கட்டிகள் உடைந்து சீழ் வெளிப்படும். சிறப்பாக இதை இரவில்
கட்டுவது நல்லது.

சுக்கு, மிளகு, திப்பிலி சம அளவு கலந்த திரிகடுக சூரணத்துடன் வெற்றிலைச் சாறு
தேன் கலந்து சாப்பிட ஆஸ்துமா குணமாகும். 5 கிராம் சூரணம்+10 மி.லி.
வெற்றிலைச்சாறு தேன் 10 கிராம் கலந்து காலை, மாலை நோயிக்குத் தக்க வாறு 48-96
நாள் சாப்பிட வேண்டும்.

குழந்தை பெற்ற பின்னர் தாய்க்கு அதிகமாக பால் சுரக்க வெற்றிலையை சிறிது
ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி மார்பில் வைத்துக் கட்டி வர தாய்பால்
அதிகமாகச்சுரக்கும்.

வெற்றிலையின் வேரை சிறுதளவு எடுத்து வாயிலுட்டு மென்று வர குரல் வளம்
உண்டாகும். எனவே இசைக்கலைஞர்கள் இதனை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

நுரையீரல் சம்பந்தமான நோய்களிக்கு வெற்றிலைச்சாறும், இஞ்சிச் சாறும் சம அளவு
கலந்து அருந்திவர நன்மை ஏற்மடும்.

சிறுவர்களுக்கு அஜீரணத்தைப் போக்கி பசியைத் தூண்ட வெற்றிலையோடு மிளகு சேர்த்து
கஷாயம் செய்து கொடுத்து வரலாம்.

நுண்ணுயிர் தாக்கத்தினை எதிர்க்க வெற்றிலைச்சாறு உதவுகிறது.சைனஸ்
பிரச்சினைக்கு வெற்றிலைச்சாறு தகுந்த நிவாரணம் அளிக்கக்கூடியது.

வயிற்றுக் கோளாறு நீக்க, கோழை இளக, ஜீரண சக்தி அதிகரிக்க வெற்றிலை
பயன்படுகிறது. வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்கும். நன்கு
பசி உண்டாகும். வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும்.

வெற்றிலைக்கு நாக இலை என்ற மற்றொரு பெயரும் உண்டு. பாம்பின் விஷத்தைக் கூட
மாற்றும் தன்மை கொண்டதால் இதனை நாக இலை என்றும் அழைக்கின்றனர்.

வெற்றிலையை எண்ணெயில் நனைத்து விளக்கில் வாட்டி மார்பின்மேல் ஒட்டி வைக்க
இருமல், மூச்சுத் திணறல், கடினமான சுவாசம், குழந்தைகளுக்கு இருமல் நீங்கும்.

வெற்றிலைச் சாறுடன் சுண்ணாம்பு கலந்து தொண்டையில் தடவினால் தொண்டைக்கட்டு
நீங்கும்.

இரண்டு அல்லது மூன்று வெற்றிலையை எடுத்து சாறு பிழிந்து, அதில் 1 டீஸ்பூன்
தேன் கலந்து தினமும் அருந்தினால் நரம்புகள் பலப்படும்.

புற்றுநோயைக் குணப்படுத்தும் மருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்குண்டு.

வெற்றிலையை கற்ப முறைப்படி உபயோகித்து வந்தால் நல்ல ஆரோக்கியத்தைப் பெறலாம்.
 17 குணங்கள் கொண்ட‌ வெற்றிலை

*1. இருமல்-சளி நீங்க*

*இருமல், சளி தொல்லை உள்ளவர்களுக்கு வெற்றிலை சிறந்த மருந்து. *

*2 வெற்றிலை, நடுநரம்பு நீக்கிய 5 ஆடாதொடா இலையுடன் 10 மிளகு, ஒரு பிடி துளசி
இலைகளை சேர்த்து ஒன்றிரண்டாக இடித்துக் கொள்ள வேண்டு ம். அதனுடன் 300 மில்லி
நீர்விட்டு மூடிய பாத்திரத் தில் நன்றாக**க்** கொதிக்க வைத்து 75 மில்லி ஆனவுட
ன் வடிகட்டி**க் ** குடிக்க வேண்டும். இதே போல் தினமும் 2 அல்லது 3 வேளை சளி,
இருமல் இருக்கும்வரை குடிக்கலாம். இப்படி செய்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.*

*2. ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலர்ஜி*

*சித்த மருந்துகடைகளில் கிடைக்கும் சுவாசகுடோரி மாத்திரை இரண்டுடன் 2 மிளகும்
சேர்த்து, அதை ஒரு வெற்றிலையில் வைத்து வாயில்போட்டு நன்கு மெல்லவேண்டும்.
தினம் 2 வேளை இவ்வாறு மென்றால் ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலர்ஜி படிப்படியாக**க்*
* குணமாகும்.*


*3. காணாக்கடிக்கு*

*எந்த**ப்** பூச்சி கடித்தது என்று தெரியாமல் ஏற்படும் பாதிப்பான காணாக்*
*கடிக்கு நடுநரம்பு நீக்கிய வெற்றிலை 5, மிளகு 10 ஆகியவற்றை ஒன்றாக**ச்** சேர்த்து
இடித்து, 200 மில்லி நீர் விட்டு**க் ** கொதிக்க வைக்க வேண்டும். அது 50
மில்லியாக ஆனவுடன் தினமும் 2 வேளை சாப்பிட்டு வர**க்** காணாக்கடி விரைவில்
குணமாகும்.*

*4. உற்சாக உணர்விற்கு*

*வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு மெல்லும் போது உமிழ்நீர் சுரப்பு,
தூண்டப்படுகிறது. அத்துடன், ஒருவித உற்சாக உணர்வும் கிடைக்கிறது.*

*5. வாத நோய் நீங்க*

*வாத நோய்களை**க்** குணமாக்கும் “வாத நாராயணா” எண்ணெய் தயாரிப்பில் வெற்றிலை*
*ச்** சாறும் ஒரு முக்கிய மூலப் பொருளாகும்.*

*6. தீப்புண் குணமாக*

*தீப்புண் குணமாக வெற்றிலையில் நெய் தடவி லேசாக வதக்கி**ப்** புண்ணின் மீது
பற்றாக**ப் **போட வேண்டும். விரைவில் அந்த**ப்** புண் குணமாகும்.*

*7. நுரையீரல் பலப்பட*

*வெற்றிலைச்சாறு 5 மி.லி. யுடன் இஞ்சிச் சாறு 5 மி.லி. கலந்து தினமும் காலை
வேளையில் வெறும் வயிற் றில் அருந்தி வந்தால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய் கள்
அணுகாது. இவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம் அருந்தி வருவது நல்லது.*


*8. வயிற்றுவலி நீங்க*

*2 தேக்கரண்டி சீரகத்தை மூன்று தேக்கரண்டி வெண்ணெய் விட்டு நன்கு மை போல்
 அரைத்து, 5 வெற்றிலை எடுத்து**க்** காம்பு, நுனி, நடு நரம்பு நீக்கி
வெற்றிலையின் பின்புறத்தில்அந்த**க்** கலவையைத் தடவி**ச் **  சட்டியிலிட்டு
வதக்கி**ப்** பின்பு 100 மிலி நீர்விட்டு நன்றாக**க்** கொதிக்க வைத்து ஆறிய
பின்பு வடிகட்டி**க்** கசாயத்தை அருந்தி வந்தால் வயிற்றுவலி நீங்கும். மந்தம்
குறையும்.*

*9. சர்க்கரையின் அளவு கட்டுப்பட*

*வெற்றிலை–4, வேப்பிலை – ஒரு கைப்பிடி , அருகம் புல் – ஒரு கைப்பிடி. சிறிது
சிறிதாக நறுக்கி 500 மி.லி. தண்ணீர் விட்டு நன்றாக**க்** கொதிக்க வைத்து 150
மி.லி.யாக வற்றவைத்து ஆறியவுடன் வடிகட்டி**த் ** தினமும் மூன்று வேளை உணவுக்கு
முன் 50 மி.லி. குடித்து வந்தால் சர்க்கரையின் அளவு சீராகும்.*

*10. விஷக்கடி குணமாக*

*உடலில் உள்ள விஷத்தன்மையை மாற்ற வெற்றிலை சிறந்த மருந்தாகும். சாதாரணமான
வண்டு கடி, பூச்சிக்கடி இருந்தால் வெற்றிலையில் நல்ல மிளகு வைத்து மென்று சாறு
இறக்கினால் விஷம் எளிதில் இறங்கும்.*

*11. இருமல் குறைய*

*வெற்றிலைச் சாறுடன் கோரோசனை சேர்த்து**ச்** சாப்பிட்டு வந்தால் தொண்டையில்
சளிக்கட்டு,  இருமல்,   மூச்சுத்  திணறல் குணமாகும்.*




*12. அஜீரணக் கோளாறு அகல*

*வெற்றிலை 2 அல்லது மூன்று எடுத்து அதனுடன் 5 நல்ல மிளகு சேர்த்து நீர்விட்டு*
*க்**  காய்ச்சி**க்** குழந்தை களுக்கு**க் ** கொடுத்து வந்தால்
சிறுவர்களுக்கு உண்டாகும் செரியாமை நீங்கும். வெற்றிலை இரண்டு எடுத்து நன்றாக*
*க்** கழுவி அதில் சிறிது சீரகத்தையும், உப்பையும் சேர்த்து  நன்கு மென்று
விழுங்கி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.*

*13. தோல் வியாதிக்கு*

*100 மி.லி. தேங்காய் எண்ணெயில் 5 வெற்றி லையை போட்டு**ச் ** சூடாக்கி
வெற்றிலை சிவந்தவுடன் வடிகட்டி**ப்** பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு
சொறி, சிரங்கு படை இவைகளுக்கு**த் ** தடவி வந்தால், எளிதில் குணமாகும்.*


*14. தலைவலி நீங்க*

*வெற்றிலைக்கு மயக்கத்தைப் போக்கும் குணமுண்டு. மூன்று வெற்றிலைகளை எடுத்து
அதைக் கசக்கி**ச்** சாறு எடுத்து**க்** கிடைக்கும் சாறில் கொஞ்சம்
கற்பூரத்தைப் போட்டு நன்றாக**க்** குழைத்து, நெற்றிப்பகுதியில் பற்று**ப்**
போட்டால் தலைவலி பறந்து போகும்.*

*15. தீப்புண் ஆற*

*தீப்புண்ணின் மீது வெற்றிலையை வைத்து**க்** கட்டலாம்.*

*16. அல்சர்*

*அல்சர் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலை யுடன் அத்தி இலை 1 கைப் பிடி வேப்பிலை 5
ஆகியவற்றை மேலே உள்ள முறைப்படி கசாயம் தயாரித்து மூன்று வேளை அருந்தி வரவும்.
முற்றின வெற்றிலையைச் சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்ஸ் சாற்றுடன் 3 மிளகு
அதே அளவு சுக்கு ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு
மூச்சுத் திணறல் குணமாகும்.*


*17. தேள் விஷம்*

*இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக
மென்று விழுங்கி தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள்
விஷம் உடனே முறி யும்.*
{ { { இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம் } } }


     <http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>


[image: Nerissa D]

*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*



 *v **a n a k k a m**  S u b b u*

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to