*பட்ஜெட் **2019:*
*பெட்ரோல்**, **டீசல் வரி உயர்வு!* பெட்ரோல், டீசலுக்குக் கூடுதலாக லிட்டருக்கு 1 ரூபாய் வரி விதிக்கப்படும்.- நிதி அமைச்சர் *தனி நபர் வரி உச்சவரம்பில் மாற்றமில்லை!* 5 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டும் தனி நபர்களுக்கு வருமான வரி விதிக்கப்படாது என்று முன்னரே இந்த அரசு தெரிவித்திருந்தது. அது தொடரும்- *120 **கோடி இந்தியர்களிடம் ஆதார் கார்டு!* நிதி அமைச்சர்: நாட்டில் 120 கோடி பேரிடம் ஆதார் கார்டு உள்ளது. பான் கார்டுக்கு பதிலாக ஆதார் கார்டு பயன்படுத்திக் கொள்ளலாம். *நேரடி வரி வசூல் அதிகரித்துள்ளது!* "நேரடி வரி வசூலானது 78 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 2013-14 ஆம் ஆண்டில் 6.38 லட்சம் கோடியாக இருந்த நேரடி வரி வசூல், 2018 ஆம் ஆண்டில் 11.37 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது *புதிய நாணங்கள் புழக்கத்துக்கு வரும்!* "பார்வையற்றோரும் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் உள்ள ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10 மற்றும் ரூ.20 ஆகிய நாணயங்களை பிரதமர் நரேந்திர மோடி, மார்ச் 7 ஆம் தேதி அறிமுகம் செய்தார். அவரை விரைவில் மக்கள் பயன்பாட்டுக்குப் புழக்கத்தில் விடப்படும். *மின்சார வாகனங்களுக்கு வரிக் குறைப்பு!* "மின்சார வாகனங்களுக்கு தற்போது இருக்கும் 12 சதவிகித ஜி.எஸ்.டி வரியை, 5 சதவிகிதமாகக் குறைக்கச் சொல்லி அரசு அறிவுறுத்தியுள்ளது. இது மட்டுமல்லாமல், மின்சார வாகனங்களை சுலபமாக வாங்க, கடன் வாங்கும் நபர்களுக்குக் கூடுதலாக 1.5 லட்ச ரூபாய் வருமான வரி குறைக்கப்படும் *கார்ப்பரேட் வரி உயர்த்தப்பட்டது!* நாட்டில் 400 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 25 சதவிகிதமாக வரி உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ச*ர்வதேசக் கடன் குறைவாக உள்ளது!* "இந்தியாவின் சர்வதேசக் கடன், நாட்டின் ஜிடிபி-யில் 5 சதவிகிதம்தான் உள்ளது. இது உலக அளவை ஒப்பிட்டுப் பார்க்கையில் மிகவும் குறைவாகும்"- * என்.ஆர்.ஐ-களுக்கு ஆதார் வழங்குவதில் மாற்றம்* "நாட்டில் வசிக்காத இந்தியர்களுக்கு ஆதார் கார்டு கொடுக்கும் விதத்தில் மாற்றம் செய்யப்படும். அவர்கள் நாட்டுக்குத் திரும்பிய பின்னர் 180 நாட்கள் கழித்து ஆதார் கார்டு வழங்கும் நடைமுறை மாற்றப்படும். உடனடியாக ஆதார் கார்டு வழங்க வழிவகை செய்யப்படும் *‘**பேட் லோன்ஸ்**’ **திரும்பப் பெறுதல்* "வங்கித் துறையில் நிலவும் சுணக்கங்களை சரிசெய்தால், நிதி சார்ந்த பலன்கள் கிடைக்கும் என்பது இப்போது தெளிவாகியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் என்.பி.ஏ கடன்கள் 4 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. அது 1 லட்ச ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இது ஒரு சாதனையாகும்." -நடைமுறையில் இருக்கும் பல்வேறு தொழிலாளர் சட்டங்கள், 4 பிரிவுகளாக முறைபடுத்தப்படும். -உயர்கல்வியை பலப்படுத்த சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் -கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் நாட்டில், விளையாட்டு வீரர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள் -ஸ்டார்ட்-அப்ஸ்களுக்கு தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும். இந்த நிகழ்ச்சியை வடிவமைப்பது மற்றும் நடத்துவதும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களாகவே இருக்கும். *அக்டோபர் **2 **முதல் **‘**திறந்தவெளி மலம் கழித்தல்**’ **இருக்காது!* "வரும் அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி முதல் இந்தியாவில் திறந்தவெளி மலம் கழித்தல் இருக்காது என்பதை மனநிறைவுடனும் மகிழ்ச்சியுடனும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பிரதமரின் கனவாகும் *உயர்கல்வியை பலப்படுத்தல்!* "5 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவிலிருக்கும் ஒரு உயர்கல்வி நிறுவனங்கள் கூட, உலகின் டாப் 200 கல்வி நிறுவனங்களின் பட்டியலில் இடம் பெறவில்லை. ஆனால், தொடர் முயற்சியால் தற்போது 3 கல்வி நிறுவனங்கள் அதில் இடம் பிடித்துள்ளன. வெளிநாட்டு மாணவர்களை இந்தியாவுக்கு வரவழைக்கும் வகையில் 'இந்தியாவில் படியுங்கள்' என்ற திட்டத்தை முன்மொழிகிறேன் * ‘**தூய்மை இந்தியா**’ **திட்டம் விரிவுபடுத்தல்* "2014, அக்டோபர் 2 ஆம் தேதி முதல் 9.6 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. 5.6 லட்சம் கிராமங்களில் திறந்தெவெளி மலம் கழித்தல் ஒழிக்கப்பட்டுள்ளது. இந்த வெற்றியானது தொடர வேண்டும். எனவே, தூய்மை இந்தியா திட்டத்தை விரிவுபடுத்த கூடுதல் நிதி ஒதுக்கப்படும் *2022 **ஆம் ஆண்டுக்குள் கிராமப்புறங்களில் அனைவருக்கும் மின்சாரம்.* வரும் 2022 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் கிராமப்புறங்களில் வசிக்கும் அனைவருக்கும் மின்சார வசதி செய்து தரப்படும். 2024 ஆம் ஆண்டுக்குள் தண்ணீர் வசதி செய்து தரப்படும்- *விண்வெளித் துறையில் புதிய நிறுவனம்!* விண்வெளித் துறையில் இந்திய முன்னிலையில் இருக்கிறது. அதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய இடத்தில் இருக்கிறோம். அதற்கென்று என்.எஸ்.ஐ.எல் (நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட்) என்று நிறுவனம் ஆரம்பிக்கப்படும். *ஊடகம் மற்றும் விமானத் துறையில் எப்.டி.ஐ அதிகரிப்பு!* "ஊடகம் மற்றும் விமானத் துறையில் வெளிநாட்டு முதலீடு வரம்பு அதிகரிக்கப்படும். உட்கட்டமைப்புத் துறையில் 100 சதவிகித வெளிநாட்டு முதலீடுக்கு அனுமதி அளிக்கப்படும். உலக அளவில் வெளிநாட்டு முதலீடு தொடர்ந்து சரிந்து வந்தாலும், இந்தியாவில் ஏற்றம் கண்டுள்ளது *வாடகை வீடுகளுக்கான சிறப்புத் திட்டங்கள்* "தற்போது வாடகைக்காக விடப்படும் இடங்கள் குறித்து நடைமுறையில் இருக்கும் சட்டங்கள் பழமையானவை. விரைவில் இதற்கான புதிய சட்டம் வகுக்கப்படும். இந்த விஷயத்தில் பல சீர்திருத்தங்கள் செய்யப்படும் *பெரும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த அரசு நடவடிக்கை* "இந்திய நாட்டு மக்கள் நம் நாட்டின் எதிர்காலத்துக்காக இரண்டு விஷயங்களை முன்னிருத்தியுள்ளார்கள். தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியே அவை. 657 கிலோ மீட்டர் அளவிலான மெட்ரோ ரயில் நெட்வோர்க் செயல்பாட்டில் உள்ளது இந்த ஆண்டு 3 ட்ரில்லியன் டாலர் பொருளாதரத்தை இந்தியா அடையும் 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய இந்தியாவிற்கு 55 ஆண்டுகள் ஆகின. நாங்கள் 5 ஆண்டுகளில் 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய செய்தோம். 'புது இந்தியாவிற்கான துவக்கம் இந்த பட்ஜெட்' பிரதமர் மோடி பாராளுமன்றத்தை வந்தடைந்தார். அவரது தலைமையில் அமைக்கப்பட்ட இரண்டாவது அரசின் முதல் பட்ஜெட் இதுவாகும் *Jul 05, 2019* *11:02 (IST)* நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் <http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/> *வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!* *வாழிய பாரதமணித் திருநாடு!* *வணக்கம்* *சுப்பு* [image: oEYIwho5P65TiFULlri0IGP98yjfF3i_Pu6P9Rip2BHdReujIr3MmDnJ9Yn8411O.png] -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAPC%3Dj%2Bq4vVk4S%2BazK1HJb2kpjYmtnYJDymJzqcxmGrHb3HYTBg%40mail.gmail.com. For more options, visit https://groups.google.com/d/optout.
