1.லிங்கமூர்த்தி
லிங்கம் விளக்கம்: நம்முடைய புராணங்களும், வேதங்களும் பரசிவத்தை கீழ்கண்டவாறு
விவரிக்கின்றது. மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்புலன்களும் இல்லாதது.
மனம்,சொல்,செயல் இவற்றிற்கு மேல் வேறொரு உயர்வான நிலை இல்லை எனுமளவிற்கு
உயர்ந்தது. உருவமற்றது. ஆகவே இன்னதென நம்மால் சுட்டிக்காட்ட இயலாதது. அதுவே
அனைத்துமானது, பற்பல குணாதிசயங்களைக் கொண்டது. நிறமில்லாதது, அழிவென்பதே
இல்லாதது, ஈரேழு உலகங்களும் தோன்ற, அழியக் காரணமாயிருப்பது, இது தான் எனக்
குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய நிலையை நமக்குக் கொடுக்காதது. இத்தகைய நம்
அனைவரையும் இயக்க வைக்கும் சக்தியை நாம் பரமசிவம் என்றால் எல்லோரும் அறிந்தது
எனப் பொருள் படும்.
மேற் சொன்னவாறு ஐம்புலனில்லாத எட்டாத நிலையைக் கொண்ட, இதற்கு மேல் வேறொரு
உயர்ந்த நிலையினைச் சுட்டிக்காட்ட முடியாத, உலகம் தோன்ற, அழியக்  காரணமான இதனை
உருவம் உள்ளது, அதாவது சகளம் என்றும், உருவமற்றது அதாவது நிட்களம் என்றும்
பிரிக்கலாம். மேற்சொன்ன சகலநிட்கள நிலையையே நாம் லிங்கம் என்போம். லிங்கம்
சிவரூபம் அதாவது மேலேயுள்ளது. அது பொருந்தியிருக்கும் பீடம் சக்தி வடிவமாகும்.
பொதுவாக லிங்கத்தை ஞான சக்தியின் மறுவடிவமாகக்  கொள்ளலாம். இத்தகைய ஞான
சக்தியின் மறுவடிவமான லிங்க உருவமே சிவபெருமானின் உடலாகும். லிங்கம்
மூவகைப்படும் . அவ்வியக்தம், வியக்தம், வியக்தாவியக்கம். இதில் கை, முகம்
வெளிப்படாமல் இருப்பது அவ்வியக்தம், வெளிப்படுவது வியக்தம். அருவுருவத்
திருமேனியுடையது வியக்தாவியக்தம்.

சிவலிங்கத்தின் உருண்டையாக இருக்கும் பகுதி ருத்ரபாகம் என்றழைக்கப்படும்.
பீடத்தின் கீழாக உள்ள நான்கு மூலையும் பிரம்ம பாகம் என்றழைக்கப்படும்.
பீடத்தில் லிங்கம் பொருந்தியுள்ள எட்டு மூலையும் திருமால் பாகம்
என்றழைக்கப்படும். ருத்ரபாகம் ஆணாகவும், திருமால் பாகம் பெண்ணாகவும் பிரமபாகம்
பேடு எனவும் குறிக்கப்படும்.

கன்ம சாதாக்கியம் என்பதற்கேற்ப லிங்கத்தின் நடுவே சதாசிவனும், மேற்கே ஈசனும்,
வடக்கே பிரம்மனும், தெற்கே திருமாலும், கிழக்கே ஈசனும் அமைந்திருக்கின்றனர்.
இத்தகைய சிறப்பு பெற்ற லிங்கத்தைப் பற்றி மகாலிங்கத் தலம் எனும் சிறப்புப்
பெற்ற ஊர் மயிலாடுதுறை அருகே உள்ள இடைமருதூர் ஆகும். இங்கு சிவபெருமான் தானே
லிங்கம் அமைத்து, தானே பூஜித்து, பூஜைக்குறிய வழிமுறைகளை வகுத்தும்
தந்துள்ளார். இங்கு காவிரி நதி வில்வத்தால் சிவனைப் பூஜித்தாள். நம்மிடமுள்ள
மும்மலங்களை அகற்றும் வல்லமையுடையவர் இவர். பிரமஹத்தி தோஷ பரிகார தலமாகும்.
வில்வார்ச்சனையும், தயிர் அன்ன நைவேத்தியமும் செய்தால் மூளை, மனம்
சம்மந்தப்பட்டவை தீரும். அக உடல் தூய்மையடையும்.

இறைவன் பெயர் மகாலிங்கேஸ்வரர் -இறைவி பெயர் பெருநலமுலையம்மையார் என்பதாகும்.



*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! *

*வாழிய பாரதமணித் திருநாடு!   *

*வணக்கம்* *சுப்பு*

* [image:
oEYIwho5P65TiFULlri0IGP98yjfF3i_Pu6P9Rip2BHdReujIr3MmDnJ9Yn8411O.png]*

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAPC%3Dj%2BpH%2BfDbB%2BNi24OPrbeZq_ATYf7hkLz8tx5dGsuxFoi0vQ%40mail.gmail.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to