*Aadi Katril Ammiyum Nagarum Meaning :* # 'ஆடிக்காற்றில் அம்மியும் நகரும்' என்பது அனைவரும் அறிந்த ஒரு பழமொழி. ஆனால் ஆடிக்காற்றில் அம்மி நகருமா? ஆடி மாதத்தில் அதிவேகமாக காற்று அடித்தாலும் அம்மி இம்மி அளவுக்கும் நகராது.
# இதற்கு வேறு பொருள் உண்டு. ஆடிக்கும் முன் மாதங்கள் கோடை வெயில் வீசும் மாதங்கள். கூட்டாக சேர்ந்து தம்மடித்த போட்டியாளர்கள், பிக் பாஸ் கொடுத்த தண்டனை - ஷாக்கான பிக் பாஸ் வீடு.! <https://dhunt.in/6yJ5z> # சித்திரை, கத்திரி வெயில் என்பார்கள். அம்மாதங்களில் அடிக்கிற வெயிலின் தாக்கத்தால் பலருக்கு அம்மை நோய் வரும். ஆடியில் வரும் காற்றும், சாரல் மழையும் ,குளிர்ச்சியை ஏற்படுத்தி பூமியின் சூட்டை தணிக்கும். # அதனால் அம்மை கண்டவர்கள் முழுமை அடைந்து குணம் பெறுவார்கள். ஆடிக்கு பின் அம்மை நோய் போய்விடும். # அதனால்தான் 'ஆடிக்காற்றில் அம்மையும் நகரும்' என்கிறார்கள். ஆனால் அச்சொற்றொடர் திரிந்து, 'ஆடிக் காற்றில் அம்மியும் நகரும்' என்றாயிற்று. இனிமேலாவது பழமொழிகளின் சரியான அர்த்தத்தை அறிந்து கொள்வோம். KR IRS 6721 On Tue, 6 Jul 2021 at 14:06, 'venkat giri' via iyer123 < [email protected]> wrote: > *Respected Sir/s* > > *காற்றில் அம்மியும் பறக்கும்"* > *காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.....Make hay while the sun shines* > *காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழியை ஆசிரியர் மாணவர்களிடம் கூறுவதை > புல்புல் பூங்கொடி மரத்தில் அமர்ந்திருந்தபோது கேட்டது.* > *‘ஆகா, நாம் இன்றைக்கு பழமொழியைக் கேட்டுள்ளோம். பழமொழி பற்றி ஆசிரியர் வேறு > ஏதேனும் தகவல்கள் கூறுகிறாரா? என்று பார்ப்போம்’ என்று மனதிற்குள் ஆர்வம்மிக > கூர்ந்து கவனிக்கலானது.* > *ஆசிரியர் மாணவர்களிடம் “இப்பழமொழிக்கான விளக்கம் உங்களில் யாருக்காவது > தெரியுமா?” என்று கேட்டார்.* > *அதற்கு மாணவன் ஒருவன் எழுந்து “வாய்ப்புகள் கிடைக்கும்போது அதனை நாம் நமது > நலனுக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே இதனுடைய பொருள்” என்று > கூறினான்.* > *அதற்கு ஆசிரியர் “நீ சொல்வது சரிதான். சம்பாதிக்கும் காலம் என்பதும் > காரியங்களை சாதிக்கும் காலம் என்பதும் சில குறிப்பிட்ட காலம் மட்டுமே என > எண்ணும் சிலர் இப்பழமொழியைக் கூறுவர்.* > *இப்பழமொழி கூறும் உண்மையான பொருள் குறித்து நான் உங்களுக்கு விளக்கிக் > கூறுகிறேன்.” என்று பழமொழிக்கான விளக்கத்தை ஆசிரியர் கூறுத் தொடங்கினார்.* > *போரடித்தல்* > *வயலில் விளைந்த நெற்பயிரினை அறுவடை செய்யும்போது, நெற்பயிரின் > அடிப்பகுதியில் ஒருசாண் அளவிற்கு விட்டு அறுவடை செய்வர்.* > *பின் களத்து மேடுகளில் அறுத்த நெற்பயிரிலிருந்து நெல்மணிகள் தனியாக > உதிர்ந்து விடுமாறு அடித்து பிரிப்பர். இதற்கு போரடித்தல் என்று பெயர்.* > *போரடித்து பிரிக்கப்படும் நெல்மணிகளுடன் தூசு, குறைந்த விளைச்சல் கொண்ட > நெல்மணிகளான சாவி போன்றவையும் சேர்ந்து இருக்கும்.* > *போரடித்து வரும் நெல்லை காற்று வீசும்போது அள்ளி தூற்றுவர். இவ்வாறு > தூற்றும்போது நல்ல நெல்கள் நேராக கீழேயும், தூசு, பதர் என்று சொல்லப்படும் > விளைச்சல் குறைந்த நெல்கள் காற்றின் பிடியில் சிக்கி சற்றுத் தள்ளியும் > விழும்.* > *நல்ல நெல்லினை இம்முறையில் எளிதில் பிரித்து எடுக்கலாம். இதுவே > இப்பழமொழிக்கான நேடியான பொருளாகும். ஆனால் இந்தப் பழமொழிக்கு மறைமுகப் பொருள் > ஒன்றும் உள்ளது.* > *உயிர் உள்ள போதே* > *‘காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா’ என்ற பாடல் வரிகளைக் > கேட்டிருப்பீர்கள். * > *காற்று என்ற ஒன்று இல்லாதிருந்தால் உயிர்கள் உயிர்வாழ இயலாது.* > *எனவே காற்று என்பது உயிர்களுக்கு மிகவும் அவசியம். இந்தக் காற்று உடலில் > உட்சென்று வெளிவந்து தன் பணியை செய்யும் வரையே உடலில் உயிர் நிலைத்து > நிற்கும். மாறாக உடலில் காற்று செல்லாத நிலை ஏற்பட்டால் அவ்வுடலைவிட்டு உயிர் > நீங்கி விடும்.* > *உடலில் காற்று உள்ள வரையே மட்டுமே ஒரு மனிதனுக்கு வாழ்வு உள்ளது. > அதற்குள்ளாக தான் தூற்றிக் கொள்ள வேண்டும்.* > *மனிதன் தேவையில்லாத கெட்டவற்றை ஒதுக்கிவிட்டு, தேவையான நல்லவற்றை மட்டுமே > கடைப்பிடித்து வாழ வேண்டும்.* > *இந்த உடலில் மூச்சுக் காற்று இருக்கும்போதே* > *மனதில் உள்ள தேவையற்ற தீய எண்ணங்களை* > *,நச்சுப்பொருட்களை நீக்கிகொள்ளவேண்டும்* > *.மூச்சுக் காற்று நின்றுவிட்டால்* > *எதையும் செய்யமுடியாமல் போய்விடும்* > *உடலில் உயிர் இருக்கும்போதே* > *நல்ல செயல்களை செய்யவேண்டும்.* > * அன்பு செய்ய வேண்டும். .* > *அதனால்தான் மூச்சுக்காற்றாக இயங்கும்* > *இறைவனை அது உடலில் வந்து போகும்போதே* > *அவனை துதித்தூய்ய வேண்டும்* > *என்பதே அதன் உண்மையான பொருள்.* > *----------உங்கள் அன்புள்ள * > *ஸ்ரீதரன்* > * திருச்த்திரப்பள்ளி* > > -- > You received this message because you are subscribed to the Google Groups > "iyer123" group. > To unsubscribe from this group and stop receiving emails from it, send an > email to [email protected]. > To view this discussion on the web visit > https://groups.google.com/d/msgid/iyer123/702021270.5937352.1625560556157%40mail.yahoo.com > <https://groups.google.com/d/msgid/iyer123/702021270.5937352.1625560556157%40mail.yahoo.com?utm_medium=email&utm_source=footer> > . > -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZor9d9kG0s1iUn_o8Bj0bMTVBRR7JR6d_GcN-NxTu9_Cjw%40mail.gmail.com.
