Wonderful. Thanks N Sekar On Mon, Jun 19, 2023, 9:41 AM Venkatachalam Subramanian < [email protected]> wrote:
> நடவாவிக் கிணறு,,,,,,,,,,,,,, > அய்யங்கார் குளம் என்றழைக்கப்படும் தாத்தாச்சாரியார் வெட்டிய குளமும், > சஞ்சீவிராயர் கோவில் எனும் வடக்கு நோக்கிய அனுமன் கோவிலும் அமைந்துள்ள > இடத்தின் வட பகுதியில் சற்று தொலைவில் அமைந்துள்ள நீர் நிலை ! > > சாதாரணமாக நீர் நிலை என்றால்,,,,,? > சுற்றிலும் கரைகள் இருக்கும் ! > கரையினைச் சுற்ரி தண்ணீர் தேங்கி நிற்கும்,,, > > இது அதன் அளவினைப் பொறுத்து > குளம் > ஏரி > ஊருணி > பொய்கை > மடு > கேணி > மோட்டை > அள்ளல் > கிணறு > துரவு > தடாகம் > வாவி > ஓடை > அளக்கர் > அசம்பு > அள்ளல் > அகழி > அயம் > ஆழிக்கிணறு > இலஞ்சி > கயம் > கழி > சுனை > மடு > குட்டை > கூவல் > தருவை ,,,,,, என நீளும்,,, > > இது மட்டும் தானா ? > தமிழ்* நிகண்டு* காட்டும் சொற்கள் இன்னொரு பக்கம் அணி வகுக்கிறது,,,, > *இலைஞ்சி, பண்ணை, ஏல்வை, குண்டம், அலந்தை, பொய்கை, வலயம், சுனை, சிறை, > பட்டம், உடுவை, பயம்பு, படுகர், குட்டம், தாங்கல், கோட்டகம், ஏரி, உவளகம், > மடு, ஓடை, படு, தடம், வாவி, தடாகம், ஆவி, சூழி, கிடங்கு, சலதரம், கேணி, பணை, > கயம், பல்வலம், நளினி, இலந்தை, மூழி, குழி, குளம்.* > > இத்தனையும்,,, தாண்டி நடவாவிக்கிணறு என்றால்,,,,? > என்னவென்று விளக்கம் சொல்ல,,,,? > > ‘’செறுவும் வாவியும், மயங்கி, நீர் அற்று,’’ என்று கரிகால மன்னனைப் பாடிய > உருத்திரங்கண்ணனார் தன் *பட்டினப்பாலையில்*,,,, வாவி என்றொரு சொல்லினைச் > சொல்கிறார்,,, > > இதையெல்லாம்,,,விடுத்து,,, > நடவாவிக் கிணறு என்றால்,,,,,? > > நீரற்று வறண்ட காலத்திலும்,,, > நடை பயணம் செய்கின்ற மக்களுக்காக,,,,, > தன் குடிநீர் தேவையினைத் தீர்க்க,,, > தாகசாந்தி செய்ய,,, > தண்ணீர் பந்தலைப் போல,,,,, > அன்று இப்பகுதியினை அரசாண்ட மன்னனின், நிலப்பிரபுவின் தாராள குணம்,,, இந்த > நடவாவிக் கிணறாக உருப்பெற்றது என்றே நினைக்கிறேன். > > சாதாரணமாக,,,, > கிணறு என்றால்,,, சட்டென்று கண்னில் படும்,,, ! > ஆனால்,,, > இதுவோ,,,? > > சுற்றிலும்,,, > ஆள் அரவமற்றுக் கிடக்கிற பகுதியில்,,,, > > இந்த நீர் நிலையின் தொடக்கத்தில்,, > இருபுறமும்,,,யாழிகள் அணிவகுக்க,,, > யாழித்தூண்களின் மேல் இருபுறமும், யானைகள் நீர்ச் சொரிய நடுவே திருமகள் ! > > வெற்றியின் அடையாளமாக,,, > மங்கலத்தின் அடையாளமாக,,, > கஜலட்சுமி வீற்றிருக்க,,, > அவளை வியந்தபடியே,,,, > வணங்கியபடியே அந்த தோரண வாயிலைக் கடந்தால்,,, ஒரு பத்தடி நீளத்தில் > சமதளப்பரப்பு,,, > > சட்டென்று மண் நோக்கிய,,, > பாதாளம் நோக்கியபடிச் செல்லும் படிக்கட்டுகள்,,,, > > அந்தப் படிக்கட்டுகளின் இருபுறம் கனத்த கற்சுவர்கள்,,, > கற்சுவர்களைப் பிடித்தபடியே படிக்கட்டுகளில் இறங்க,,,, > > சட்டென்று சுற்றிலும் எட்டடி அகல நடைபாதையுடன் பன்னிரு கால் மண்டபம்,,, ! > > பன்னிருகால் மண்டபத்தின் தூண்களில் வைணவச் சிற்பங்கள் ! > அதன் நடுவே தெள்ளிய தண்ணீர்,,, ! > > ஒரு தண்ணீர் கிணற்றுக்கா ? இத்தனைப் பாதுகாப்பு,,,, ? > என்ற எண்ணம் எழமாலில்லை,,, > ஆனால்,,, > நான் சென்றிருந்த நேரம் கோடைக்காலம்,,, என்பதால்,, இப்படித்தான் > காட்சியளித்தது ! > > இதுவே மழைக்காலம் என்றால்,,,,? > தரைப்பரப்பு வரை தண்ணீர் அலையடித்துக் கொண்டிருக்கும்.... > > திருக்கச்சி எனும் > நகரங்களில் சிறந்த காஞ்சி மாநகரில்,, > இத்தகைய நடவாவிக் கிணறு நான்கு உண்டு என்கிறது,, > நூலொன்றும்,சான்றோர்களும்.... > > இக்கிணற்றினைப் பெருமைப்படுத்தும் விதமாக,,, > சித்திரை முழு நிலா நாளன்று காஞ்சி தேவராசப் பெருமாள் இந்த நடவாவிக் > கிணற்றுக்கு எழுந்தருளுகிறார்... > > அவர் வரும் வேளையில்,,, > நடவாவிக் கிணற்றின் உள்ளிருக்கும் பன்னிருகால் மண்டபத்தில் அமர்ந்து > திருமஞ்சனம் சார்த்திக் கொள்கிறார்.. > > அந்நேரத்தில்,,, > அந்த உற்சவத்திற்காக,,,, > நீர் நிரம்பி இருக்கும் அந்த கிணற்றிலுள்ள நீர் இறைக்கப்பட்டு பன்னிருகால் > மண்டபம் சுத்தம் செய்விக்கப்படுகிறது,,, > > > இன்று மின்மோட்டார் மூலமாக தண்ணீர் இறைக்கப்பட்டாலும்,,, > அன்று நீர் இறைப்பதற்கான கமலைத் தூண்கள்,, > அதிலும்,,கல்லினால் அமைக்கபட்ட கமலைத் தூண்கள் இப்பொழுதும்,,, ஒரு நீண்ட > நெடிய பண்பாட்டிற்கு சாட்சி சொல்லிக் கொண்டிருக்கிறது,,, ! > > > வாய்ப்பிருப்போர்,,, > ஒருமுறை இந்த நடவாவிக் கிணற்றினையும் கண்டு வாருங்கள். > பார்த்தும்! கேட்டும்!..... > > முனைவர் ஸ்ரீமதி ஸ்ரீவித்யா.சு > M.A;B.Ed;M.Phil;P.h.D; > இந்து மேல்நிலைப்பள்ளி ,இந்திரா நகர் ,அடையாறு ,சென்னை 20. > தமிழ்த்துறை. > > -- > You received this message because you are subscribed to the Google Groups > "Thatha_Patty" group. > To unsubscribe from this group and stop receiving emails from it, send an > email to [email protected]. > To view this discussion on the web visit > https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdtcXBrv56n2Wz39dwncgs1wr_f-T9XJJQ%2BKqH2N8Enj2A%40mail.gmail.com > <https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdtcXBrv56n2Wz39dwncgs1wr_f-T9XJJQ%2BKqH2N8Enj2A%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer> > . > -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81ZdJRzCuDeEioOjdjFpzXii8vV4%2BMHDRxgzw2XjhamytSw%40mail.gmail.com.
