I think Sujatha and Kamalakhassan had a kind of bent of mind that it is man
made and God could have been there etc; so too here that sujatha mention
"AAGI" appears as "AAKKI" IS A MISCHIEF. Akkalum azhithalum,
"Tamulavakkalum" etc are seen in Tamil which render only a direct meaning
as created by the Brahmam. I do not think Sujatha does not know it; so I
think he wrote a mischief. KR IRS 14 9 23

---------- Forwarded message ---------
From: Chittanandam V R <[email protected]>
Date: Wed, 13 Sept 2023 at 19:41
Subject: Fwd: Nammaalvar's Thiruviruththam by Sujatha
To:



*"நம்மாழ்வார் திருமாலின் திருவடியின் அம்சம் என்று நம்புவதும் உண்டு. அதனால்
பெருமாள் சந்நிதிகளில் வணங்கும்போது வைக்கும் 'சடாரி'யைச் சடகோபம் என்று
சொல்கிறார்கள்."*

*நம்மாழ்வாரின் திருவிருத்தம் *

*கட்டளைக் கலித்துறை என்னும் கடினமான யாப்பில் இந்தப் பாடல்கள் சங்க காலத்தின்
அகத்துறைக் கருத்துகளை கடவுளுக்குப் பயன்படுத்திய முதல் முயற்சிகளுள்
ஒன்று. **மற்றது
திருமங்கை ஆழ்வார். *

*ஆழ்வார்களின் காலத்தில் பக்தி பெருக்கெடுத்தோடினாலும் அகத்துறைக்
கருத்துகளின் அழகுணர்ச்சியைக் கைவிடாமலிருப்பதற்கு அவர்கள் செய்த
சாமர்த்தியமான மாற்றம் இது என்று சொல்லலாம். தலைவனைத்
தெய்வமாக்கிவிட்டால் **அகத்துறைக்
கருத்துகளில் உள்ள விரசங்கள் தெய்வீகம் பெற்று மன்னிக்கப்படுகின்றன.
அவைகளுக்கு மரியாதை கிடைத்துவிடுகிறது. *

*முதல் பாட்டில் ஒரு விண்ணப்பம் செய்கிறார். *

*"பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா அழுக்கும்  **அழுக்குடம்பும் *
*இந்நின்ற நீர்மை இனியாம் உறாமை அளிப்பான் *
*எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய்! இமையோர் தலைவா!*
*மெய்ந்நின்று கேட்டருளாய் அடியோன் செய்யும் விண்ணப்பமே."  (நா.தி.பி. 2478)*

*"பொய்யான அறிவும் தவறான ஒழுக்கங்களும் அழுக்கான உடம்பும் போன்ற குணங்கள் இனி
எமக்கு வேண்டாமல் உயிர் தருவாய். எப்போதும் நின்று பிறக்காமல் பிறந்த வானவர்
தலைவனே, நான் செய்யும் இந்த விண்ணப்பத்தைக் கேள்!" *

*அகத்துறைப் பாடல்கள் உள்ள திருவிருத்தத்தில் அவ்வப்போது ஆழ்வாரின்
பிரம்மாண்டமான தெய்வத் கருத்துகள் ஒளிரும்.*

*"வணங்கும் துறைகள் பலபலவாக்கி, மதிவிகற்பால் *
*பிணங்கும் சமயம் பலபலவாக்கி, அவைஅவைதோறும்*
*அணங்கும் பலபலவாக்கி நின்மூர்த்தி பரப்பி வைத்தாய் *
*இணங்கும் நின்னோரையில்லாய்! நின்கண் வேட்கை எழுவிப்பனே!"  (நா.தி.பி. 2573)*

*வணங்கும் துறைகள் பலவற்றையும், எதிர்க் கருத்துகளால் வேறுபடும் (பிணங்கும்)
சமயங்கள் பலவற்றையும் அவைகள் உண்டாக்கும் தெய்வங்கள் பலவற்றையும் நீயே ஆக்கி
உன் உருவத்தையே பரவ வைத்திருக்கிறாய். உனக்கு இணை (இணங்கு) யாரும் இல்லை.
உன்மேல் எனக்கு வேட்கை எழுகிறது.*

*இந்தப் பாடலில் 'ஆகி' என்பதற்குப் பதில் 'ஆக்கி' என்று சொல்லியிருப்பது
சிந்திக்கவைக்கிறது.*

*எல்லாத்  தெய்வங்களிலும் செய்தவன், விரவியவன் திருமாலே என்னும்போது யாரைத்
தொழுதாலும் திருமாலையே போய்ச் சேர்ந்துவிடுகிறது. *

*- சுஜாதா *

*******************************************


*சித்தானந்தம் *

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZooK3QX%3DpDgep_LOOjU%2BCOBL_uaN3WFQ9ZTaPGYKFi3SJg%40mail.gmail.com.

Reply via email to