Who is nandu sundu ?

On Sun, Jun 16, 2024, 12:19 Narayanaswamy Sekar <[email protected]> wrote:

>
>
> ---------- Forwarded message ---------
> From: N Sekar <[email protected]>
> Date: Sun, Jun 16, 2024 at 10:46 AM
> Subject: Re: Cataract - Nandhu Sundhu
> To: Chittanandam V R <[email protected]>
> Cc: Rangarajan T.N.C. <[email protected]>, Mathangi K. Kumar <
> [email protected]>, Narayanaswamy Sekar <[email protected]>,
> Mani APS <[email protected]>, Srinivasan Sridharan <
> [email protected]>, SRIRAMAJAYAM <[email protected]>, Rama (Iyer
> 123 Group) <[email protected]>, Kerala Iyer <
> [email protected]>, [email protected] <[email protected]>
>
>
> Thanks Sir for your clarification. In my opinion, It was almost a Sujatha
> style write up.
>
> N Sekar
>
>
> On Sunday, June 16, 2024 at 10:31:36 AM GMT+4, Chittanandam V R <
> [email protected]> wrote:
>
>
> I am on your side when you say about Sujatha.
>
> But this piece was not by him. It was authored by நந்து சுந்து.
>
> Chittanandam
>
> On Sun, Jun 16, 2024 at 11:38 AM N Sekar <[email protected]> wrote:
>
> Thanks Sir.
>
> Typical Sujatha writing although you have not mentioned the author. He is
> one of the few who can write about a cataract operation so interestingly
> and humorously.
>
> He can write a story without any real story. Just reading his writings is
> a pleasure.
>
> Fwding to others, so other Sujatha fans can also enjoy reading this as did
> I.
>
> N Sekar
>
> Yahoo Mail: Search, Organize, Conquer
> <https://mail.onelink.me/107872968?pid=NativePlacement&c=Global_Acquisition_YMktg_315_EmailSignatureGrowth_YahooMail:Search,Organize,Conquer&af_sub1=Acquisition&af_sub2=Global_YMktg&af_sub3=&af_sub4=100000945&af_sub5=OrganizeConquer__Static_>
>
> On Sun, Jun 16, 2024 at 7:19 AM, Chittanandam V R
> <[email protected]> wrote:
>
>
> *இரண்டு கண்களிலும் Cataract Surgery செய்து கொண்டேன் எனப் பதிவு
> போட்டிருந்தேன். *
>
> *நகம் வெட்டிக் கொண்டாலே நாலு பக்கத்துக்கு அனுபவக் கட்டுரை எழுதும் ஆசாமி
> நான். சர்ஜரி செய்து கொண்டால் விடுவேனா? இதோ ஓர் அனுபவக் கட்டுரை.*
>
> *************************************************************************
>
> *சும்மா கிழி...*
>
> *நந்து சுந்து*
>
>
> *கொஞ்ச நாட்களாக கண் பார்வை மங்கலாக, கலங்கலாக இருப்பது போல ஒரு பிரமை
> இருந்தது. மினரல் வாட்டரைப் பார்த்தால் கிரைண்டர் கழுவிய தண்ணீர் போல்
> இருந்தது.*
>
> *கேடராக்ட் இருக்குமோ என சந்தேகப்பட்டு பெங்களூரில் இருக்கும் ஒரு பிரபல கண்
> ஆஸ்பத்திரிக்குப் போனேன். *
>
> *அங்கு நல்ல சிகிச்சை கிடைக்கும். ஆனால் கையைக் கடிக்கும். திரையைக் கிழித்து
> திரவியம் தேடும் ஆஸ்பத்திரி அது.*
>
> *முதலில் வழக்கமான பரிசோதனை. W S E J M படிக்க வேண்டும். கடைசி வரிசை படிக்க
> முடியாவிட்டால் நம்மிடம் கறந்து விடுவார்கள். அந்த டெஸ்டில் கடைசி இரண்டு
> வரிசையில் நான் ஃபெயில்.*
>
> *பைனாக்குலர் மாதிரி இருந்த சமாச்சாரத்தில் பார்க்கச் சொன்னார்கள். இரண்டு
> நிமிடத்தில் அவர்கள் ஆவலுடன் தேடிய கேடராக்ட் அவர்களுக்குக் கிடைத்து விட்டது.*
>
> *“உங்களுக்கு கேடராக்ட் இருக்கு. அதனாலதான் கண் மங்கலா இருக்கு”  என்று
> இருள்வாக்கு சொன்னார்கள்.*
>
> *அதன் பிறகு ஒரு Counselling பெண்ணிடம் அனுப்பினார்கள்.*
>
> *கவுன்சிலிங் எனப்படுவது யாதெனில் வரும் ஆட்களை கப்பெனப் பிடித்துப் போடுதல்.*
>
> *ரிப்போர்ட்டுகளைப் பார்த்த கவுன்செல்லர் “எந்த லென்ஸ் வைச்சிக்கறீங்க?”
> என்று கேட்டார்.*
>
> *“கைரேகை ஜோசியம் பாக்கற லென்ஸ் வைச்சிடாதீங்க. அதுல பிடி இருக்கும். மூக்கு
> வரைக்கும் தொங்கும்” என்றேன்.*
>
> *“உங்களுக்கு Trifocal Toric லென்ஸ் வைச்சிடலாம்” என Trigonometric equation
> மாதிரி டெக்னிக்கலாக ஏதோ சொன்னார். *
>
> *அந்த லென்ஸ் வைத்துக் கொண்டால் தூரத்தில் இருப்பது, பக்கத்தில் இருப்பது,
> நடுப் பக்கத்தில் இருப்பது எல்லாமே தெரியுமாம்.*
>
> *“நீங்க Reading glass யூஸ் செய்யறீங்களா?”என்றார்.*
>
> *“Writing glass யூஸ் செய்யறேன்”*
>
> *“இந்த லென்ஸ் வைச்சிகிட்டா....”*
>
> *“இனிமே எழுதவே மாட்டேனா?”*
>
> *“நோ. இனிமே நீங்க கண்ணாடியே போட வேணாம்” என்றவர்  லென்ஸின்  விலையை
> சொன்னார். ஒரு Eye க்கு அவர் சொன்ன விலையில் இரண்டு ஐ போன் வாங்கலாம்.
> இருந்தாலும் சரியென்றேன். *
>
> *அவருக்கு மிகுந்த சந்தோஷம் .ஆஸ்பத்திரியில் இரண்டு நாள் அடுப்பெரியும்.*
>
> *அடுத்த விஷயத்தை ஆரம்பித்தார்.*
>
> *“சாதா ஆபரேஷனா? லேசர் ஆபரேஷனா?”*
>
> *லேசர் ஆபரேஷன் என்றால் டாக்டர் கண்ணில் கையே வைக்க மாட்டார். லேசரே
> எல்லாவற்றையும் கிழித்து விடும். நீட் பாஸ் செய்த லேசர்.*
>
> *சாதா ஆபரேஷனில் தோசைக் கரண்டி கொண்டு கண்களில் இருக்கும் திரையை
> சுரண்டுவார்களோ!*
>
> *“லேசரே  செஞ்சிடுங்க” என்றேன். அதற்குக் கூடுதல் கட்டணம். ஒரு Split A.C
> விலை.*
>
> *“திங்கட்கிழமை கார்த்தால எட்டு மணிக்கு வந்துடுங்க” என்றார். திங்கட் கிழமை
> 7:30 முதல் 9:00 வரை ராகு காலம். ராகு காலத்தை ஏமாற்ற ஒரு உபாயம் செய்வார்கள்.
> ஊருக்குக் கிளம்புபவர்கள் ராகு காலத்துக்கு முன்பாகவே பெட்டியை வீட்டுக்கு
> வெளியே வைத்து விடுவார்கள். ராகு நம்மை விட்டு விலகி பெட்டியை வெளியே வைக்காத
> மக்குப் பயல் யாரையாவது தேடிப் போய் விடும்*
>
> *அது போல பக்கத்து வீட்டு பாட்டி சொன்னார். *
>
> *“நீங்க ஏழரை  மணிக்கு முன்னால கண்ணை எடுத்து வீட்டு வாசல்ல வைச்சிடுங்க” *
>
> *ஏழே காலுக்கே புறப்பட்டு எட்டு மணிக்கு ஆஸ்பத்திரியில் இருந்தோம்.
> ரிசப்ஷனில் ஒரு பெண் ‘வாவ்’ எனச் சொல்லும் வகையில் இருந்தாள். அவள் வாவென
> அழைத்தாள். என்னுடைய ஃபைல் பார்த்தாள்.*
>
> *கண் மாற்றி ஆபரேஷன் செய்து விடக் கூடாதல்லவா! அதனால் என் இடது கையில் ஒரு
> Band கட்டினாள். அது சத்தியமாக ராக்கி இல்லை. அதில் என் பெயர் இருந்தது.
> போதாதற்கு என் இடது கண்ணின் மேல் ஒரு பெருக்கல் குறி போட்டாள். இது தான்
> நொள்ளைக் கண் என்பதற்கு அடையாளமாக. *
>
> *சில Declaration form களில் கையெழுத்து போடச் சொன்னாள். Software download
> செய்யும்போது படித்துப் பார்க்காமல் I agree என்று டிக் அடிப்போமே அது போல
> டிக் செய்தேன்.*
>
> *அதன் பிறகு அடுத்த அறைக்குக் கூட்டிப் போனார்கள். இங்கு இரண்டு பெண்கள்
> இருந்தார்கள். கேடராக்டையும் மீறி அவர்கள் பளிச்செனத் தெரிந்தார்கள். ஒருவர்
> B.P யும்  Oxygen ம் பார்த்தார். இன்னொருவர் ஒரு மாத்திரை கொடுத்தார்.*
>
> *அந்த மாத்திரை Anxiety வராமல் இருப்பதற்கு என்று சொன்னாள்.  ‘உங்க
> டாக்டருக்கு பத்து கொடுங்க’ என்று நினைத்துக் கொண்டேன்.*
>
> *தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசன் ஆபீஸ் போகும் போது கே.ஆர் .விஜயா
> பின்னாலிருந்து  கோட்  மாட்டி விட்டு மாலையில் கன்னத்தில் அறை வாங்கிக்
> கொள்வார். அது போல ஒரு கன்னடத்து விஜயா பின்னாலிருந்து எனக்கு கவுன் மாட்டி
> விட்டார். நாம் சும்மா நின்று கொண்டிருக்க இன்னொருவர் கவுன் மாட்டி விட்டால்
> அந்த சோம்பேறித்தன சுகத்துக்கு ஈடு இணை வேறு எதுவுமே இல்லை.*
>
> *தலையில் துணியினால் ஆன ஒரு தொப்பியை கட்டி விட்டாள். இதிலும் இடது பக்கம்
> செல்லோ டேப் ஒட்டினார். அதாவது இடது கண்தான் என்பதற்கான மூன்றவது கட்ட
> எச்சரிக்கை. இதையும் மீறி வலது கண்ணில் ஆபரேஷன் நடந்தால் நமக்குக் கட்டம்
> சரியில்லை என்று அர்த்தம்.*
>
> *இன்னும் சில சுவாரசியம் இல்லாத ஃபார்மாலிடிக்கள் முடிந்த பிறகு இரண்டாவது
> நபராக ஆபரேஷன் தியேட்டருக்குள் அனுப்பினார்கள்.  *
>
> *தியேட்டரில் ஒரு ஸ்ட்ரெச்சரில் ஏறிப் படுக்கச் சொன்னார்கள். *
>
> *ஆபரேஷன் தியேட்டரில் மெலிதாக ஏதோ ஹிந்திப் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தது.
> நல்ல வேளையாக ‘கண்ணாளனே உனது கண்ணை இன்றோடு காணவில்லை’ என்ற பாட்டு
> ஒலிக்கவில்லை.*
>
> *கண்ணைத் திறந்து ஒரு சொட்டு மருந்தை ஊற்றினார் ஒருவர். அதுதான் மயக்க
> மருந்தாம். இவ்வளவு பணம் வாங்கிவிட்டு ஒரே ஒரு சொட்டா? ஐந்து லிட்டர் கேன்
> கொண்டு ஊற்றியிருக்கலாம்.*
>
> *இரண்டே நிமிடத்தில் கிழி பீடத்துக்கு அழைத்துச் சென்றார்கள். ‘மேலே இருக்கற
> லைட்டைப் பாருங்க. மூணு  லைட் தெரியுதா?’ என்று கேட்டார்கள்.*
>
> *ஆமாம் என்று தெரிந்ததைச் சொன்னேன்.*
>
> *‘அந்த லைட்டையே பாருங்க’ என்றார்கள். அது தான் லேசர் லைட்டா? ஒவ்வொரு
> லைட்டையும் பார்த்ததில் என் பேங்க் பேலன்ஸ் கணிசமாகக் குறைந்தது.*
>
> *பிறகு போஸ்ட் ஆபீசில் கவரின் மீது ஐந்து ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டுவது போல
> கண்ணுக்குள் எதையோ ஒட்டினார்கள். அநேகமாக அது லென்ஸ் ஆக இருக்கக் கூடும்*
>
> *மொத்தமே ஐந்து நிமிடம் கூட ஆகியிருக்காது. “உங்க ஆபரேஷன் முடிஞ்சது” என்றார்
> டாக்டர்.*
>
> *பெருமாள் கோவிலில் பக்தர்கள் தலையில் சடாரி வைக்கும் அர்ச்சகர் போல அடுத்த
> ஆளுக்குப் போய் விட்டார் டாக்டர். *
>
> *ஒரு ஆள் வந்து என்னைக் கீழே இறக்கி விட்டார். ஒரு கருப்புக் கண்ணாடியைக்
> கண்ணில் மாட்டி விட்டார்.*
>
> *“நீங்க நடந்து போகலாம்” என்று வெளியே அனுப்பி விட்டார். *
>
> *ஒரு வீல் சேர்கூடக் கொடுக்கவில்லை வீணர்கள். நடந்து போகச் சொல்லி
> விட்டார்கள். நடந்து வெளியே போனால் ஆபரேஷன் செய்து கொண்டதாக இந்த சமூகம்
> நம்பாதே!*
>
> *வெளியே வந்தேன். முன்னர் பார்த்த அதே பெண் வந்தார். நலம், நலமறிய ஆவல் என
> விசாரித்தார். பிறகு தாம்பூலப் பை மாதிரி எதையோ கொடுத்தார். அதனுள்ளே
> ரவிக்கைத் துணி இருக்கவில்லை. ஒரு ஜூஸ் இருந்தது. ஒரு குடை இருந்தது. இந்தக்
> குடைக்காக நான் கொடுத்த விலை மிகவும் அதிகம்.*
>
> *Dos and Don’ts சொன்னார்.*
>
> *பணத்தைக் கட்டி விட்டு வெளியே வந்தோம். கருப்புக் கண்ணாடி போட்டுக்
> கொண்டதில் பசு மாடு எருமை மாடு  மாதிரி தெரிந்தது. எருமை மாடு தெரியவே இல்லை.*
>
> *முருகன் இட்லிக் கடையில் நான்கு விதமான சட்னிகள் வைப்பது போல நான்கு விதமான
> ஐ டிராப்ஸ் கொடுத்திருந்தார்கள். *
>
> *சரியாக கண்ணுக்குள் விழுவது போல அதைப் போட்டுக் கொள்வது ஒரு அவஸ்தை. வட
> இந்திய கோவில்களில் சிவலிங்கம் மேல் ஒரு சொம்பு இருக்கும். அதிலிருந்து நீர்
> சொட்டு சொட்டாக விழும். அது போல ஒரு சொம்பு இருந்தால் வசதியாக இருக்கும்.
> அதற்குக் கீழே படுத்துக் கொள்ளலாம்.*
>
> *இரண்டு நாட்களில் கண் நன்றாகத் தெரிய ஆரம்பித்தது. இது வரை தெரியாதது
> எல்லாம் தெரிந்தன. கிச்சன் சுவற்றில் எறும்பு ஊர்வது தெரிந்தது. அந்த எறும்பு
> கர்ப்பமாய் இருந்ததுகூடத் தெரிந்தது.*
>
> *அடுத்த திங்கட்கிழமை வலது கண்ணுக்கு ஆபரேஷன். மேலே கூறியது அனைத்தும்
> இன்னொரு முறை நடந்தன. பெண்கள்கூட மாறவில்லை. அதே கண்கள். அதே பெண்கள். அதே
> குடை.*
>
> *ஒரு வாரம் கழித்து செக் அப் போனேன். சில சந்தேகங்கள் கேட்டேன்.*
>
> *“தும்மினா லென்ஸ் கீழே விழுமா?”*
>
> *“எச்சில்தான் விழும்” என்றார் அந்த பெண் டாக்டர்.*
>
> *இந்த ஆஸ்பத்திரியில் எல்லா கண் டாக்டர்களும் இளம் கன்னிகளாகவே இருந்தார்கள்.
> ரின் போட்டுத் துவைத்த வெள்ளைக் கோட் போட்டிருந்தார்கள்.*
>
> *“கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் பார்த்தா கொஞ்சம் Discomfort இருக்கு” என்றேன்.*
>
> *“அந்த மாதிரி சமயத்துல கண்ணை சிமிட்டுங்க”*
>
> *“இந்த மாதிரியா?” என்று அவளைப் பார்த்துக் கண் சிமிட்டியிருக்கலாம். போக்ஸோ
> சட்டத்தில் உள்ளே தள்ளி விடுவார்கள் என்ற பயத்தில் சிமிட்டல் கொஸ்டினை
> சாய்ஸில் விட்டு விட்டேன்.*
>
> *மறுபடியும் பயாஸ்கோப்பில் தாடையை வைத்து டெஸ்ட்.*
>
> *“உங்க லென்ஸ் எல்லாம் சரியான இடத்துல பத்திரமா இருக்கு. கொஞ்ச நாள்ல லென்ஸ்
> பவர் செட் ஆகி பழகிடும்” என்றார்.*
>
> *பழகிக் கொண்டிருக்கிறேன். *
>
> *நகைச்சுவைக்காக கலாய்த்திருந்தாலும் இந்த மருத்துவமனையில் சிகிச்சை
> சிறப்பாகவே இருந்தது. Systems, பணியாளர்களின் பணிவு, கனிவு, நீல நிறத்தில்
> மஞ்சள் பூ போட்ட புடவை யுனிஃபார்ம் எல்லாமே முதல் தரம். கண்ணைத் திறந்து
> கொண்டு Five Star Rating கொடுக்கலாம்.*
>
> *டாக்டர்களுக்கும், பணியாளர்களுக்கும் ஜே!*
>
> *************************************************************************
>
> *சித்தானந்தம் *
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "Thatha_Patty" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion on the web visit
> https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81ZcacsfS_DM_8%2B5T1R7S2j1xi2Wm54ufnRoi_Rqxt1%2BVOg%40mail.gmail.com
> <https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81ZcacsfS_DM_8%2B5T1R7S2j1xi2Wm54ufnRoi_Rqxt1%2BVOg%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer>
> .
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJiWWo%2B_VpoWCwTAn45Vx7nPOVki5cQvruu%2BWqtdM6xMTPxb0g%40mail.gmail.com.

Reply via email to