I liked it KR On Wed, 2 Oct 2024 at 18:43, Narayanaswamy Sekar <[email protected]> wrote:
> > > ---------- Forwarded message --------- > From: N Sekar <[email protected]> > Date: Wed, Oct 2, 2024, 6:42 PM > Subject: Fwd - Sri Rangam Temple > To: Kerala Iyer <[email protected]>, Rangarajan T.N.C. < > [email protected]>, Chittanandam V. R. <[email protected]>, > Narayanaswamy Sekar <[email protected]>, Mathangi K. Kumar < > [email protected]>, Suryanarayana Ambadipudi < > [email protected]>, Srinivasan Sridharan <[email protected]>, > Rama (Iyer 123 Group) <[email protected]> > > > Mno 2434 > ஒரு அருமையான அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய பதிவு. > > ஸ்ரீரங்கம் போயிருந்தபொழுது அங்கு பெருமாள் புறப்பாடு நடப்பதைக் காண > வாய்த்தது. > > புறப்பாட்டில் பல்லக்கை தூக்கிவந்த இளைஞர்கள் வழியெங்கும் தங்கள் நடையை > விசித்திரமான ஒரு நடனத்தைப்போல ஆடித் தூக்கி வந்தது, ஏதோ ஸ்ரீரங்கத்து பிராமண > இளைஞர்களின் மனம்போன போக்கிலான ஒரு குதியாட்டம் என்று மட்டுமே அப்போது நான் > எண்ணிக் கொண்டேன். > > வேளுக்குடி சொன்னபிறகுதான் அதற்கெல்லாம் சரியான சம்பிரதாயப் பெயர்களும் > அதற்கான விதிமுறைகளும் இருக்கின்றன என்று அறிந்து ஆச்சரியப்பட்டேன். > > ஒரு விஷயத்தை அறிந்துகொண்டு பார்த்து அனுபவிக்கும்பொழுது அதிலுள்ள சுவாரஸ்யமே > தனிதான்! > > உங்களில் பலர் அவற்றை ஏற்கனவே அறிந்திருக்கக்கூடும். > > இருந்தாலும் அதைப்பற்றி அதிகம் அறிந்திராத > மற்றவர்களுக்காக ஓரிரு வார்த்தைகள். > > சுவாமியின் பல்லக்குக்கு *'#தோளுக்கினியான்'* என்ற பெயர் இருப்பதும், > பல்லக்குத் தூக்கிகளுக்கு > *'#ஸ்ரீபாதம் தாங்கிகள்'* என்று பெயர் என்பதும் எனக்கு இத்தனைநாளாகத் > தெரியாது! > > பெருமாள் புறப்பாட்டின் ஆரம்பம், ஒரு கருடன் எப்படி சட்டென தன் சிறகை > விரித்துப் பறக்குமோ அப்படி புறப்படுமாம். > > அப்பாங்கை *கருடகதி* என அழைப்பார்களாம்! > > அதையடுத்து குகையில் இருந்து வெளியே வரும் ஒரு சிங்கம் எப்படி தன் > இடப்பக்கமும், வலப்பக்கமும் தலையை லேசாகத் திருப்பி, ஏதாவது அபாயம் உண்டா > எனப்பார்த்துவிட்டுப் பின் சிங்கநடை போடுமோ அதுபோல ஸ்ரீபாதம் தாங்கிகள் > நம்பெருமாளை கர்பக்கிரகத்திலிருந்து வெளியே தோளுக்கினியானில் தூக்கிப் > புறப்படுவது *சிம்மகதியாம்!* > > இதைத்தொடர்ந்து புலிபோல இரண்டுமூன்று அடிஎடுத்து வைப்பது, பின் நிறுத்துவது, > மீண்டும் இரண்டு மூன்று அடியெடுத்து வைத்துப் போவதை *வியாக்ரகதி* என்கிறார்கள். > > அதையடுத்து காளைமாடு போல மணியோசையுடன் நடப்பதை *ரிஷபகதி* என்றும் > > ஆண்யானைபோல நடப்பதை *கஜகதி* என்றும் சொல்கிறார்கள். > > புறப்பாடு முடிந்து திரும்பி வந்து கர்ப்பகிரகத்தில் நுழையும்போது எப்படி ஒரு > பாம்பு தன் புற்றுக்குள் நுழையும் முன்பு தன் தலையை சற்று தூக்கிப் > பார்த்துவிட்டு பின் சட்டென கடிதில் உள்ளே நுழையுமோ அவ்விதம் நுழைவதை > *சர்பகதி* என்கிறார்கள். > > கடைசியாக, எப்படி ஒரு அன்னப் பறவை தன் சிறகை சட்டென மடித்துக்கொண்டு > உட்காருமோ அப்படி உள்ளே நுழைந்த பெருமாளை சட்டென அமர வைப்பதை *ஹம்சகதி* என்று > பெயரிட்டு வைத்திருக்கிறார்கள் என்பதையெல்லாம் > அறிந்து மகிழ்ந்தேன் இன்று நான். > > 'ஏன் ஸ்ரீபாதம்தாங்கிகள் வழியில் வெறுமே நிற்கும்போதுகூட, > > சற்றே இடதுபுறமும் வலதுபுறமும் சாய்ந்து சாய்ந்து பெருமாளை தாலாட்டிக் கொண்டே > இருக்கிறார்கள்!! > > ஆயக்கால் போட்டு நிறுத்திவிட வேண்டியதுதானே!!' > > என்று நான் பலநாள் நினைத்ததுண்டு. > > அப்படி ஆயக்கால் போட்டு நிறுத்துவது பெருமாள் கோயில்களில் வழக்கமில்லையாம்! > > *பெருமாள் பாரத்தை ஒரு பாரமாக நினைப்பது தவறாம்.* > > அடேங்கப்ப்ப்பா......!!! > > இதில் ஆச்சரியம் என்னவென்றால், முன்னே செல்லும் அறையர்சாமி ஸ்ரீபாதம் > தாங்கிகளுடைய ஆட்டத்திற்கு ஏற்றதுபோல் இசைத்துக் கொண்டும் , > பாடிக் கொண்டும் செல்ல, > > தீப்பந்தம் பிடிப்போர் குடைபிடிப்போர் வெள்ளித்தடி ஏந்துவோர் ஆளவட்டப் > பரிகாரகர் போன்றோரும் > > அதேகதியில் ஆடிக்கொண்டு செல்லவேண்டுமாம்! > > அது என்ன > ஆளவட்டப் பரிகாரரர் என்கிறீர்களா? > > பெருமாளுக்கு விசிறி வீசுபவர்! > > தவிர, பெருமாள் > > #சேஷவாகனம் > > #கற்பகவிருட்ச வாகனம் > > #யானை பசுவையாளிவாகம் > > ஆகியவற்றில் பயணிக்கும்பொழுது அதற்கு ஏற்றதுபோல எல்லா கதிகளும் > மாற்றப்படுமாம். > > உதாரணமாக வையாளி வாகனத்தின் பொழுது > > அதாவது குதிரை வாகனத்தின்பொழுது இரண்டுநடை வேகமாகச் சென்றுவிட்டு, பின் > ஒருமுறை இடப்புறமாக சுற்றிவிட்டு அடுத்து ஒருமுறை வலப்பக்கமாக சுற்றிவிட்டு > > மீண்டும் இரண்டுநடை தோளுக்கினியானைத் தூக்கி நடப்பார்களாம். > > சரி, எப்படி இந்த இளைஞர்களால் இப்படி தேர்ந்த நடனக் கலைஞர்களைப்போல இந்த > அளவுக்கு அப்படி தாளம் தப்பாமல் ஆடிக்கொண்டே பல்லக்கைத் தூக்கிச் செல்ல > முடிகிறது? > > இந்தப் பணிக்கு அத்தனை எளிதில் ஆளை நியமித்து விடமாட்டார்களாம். > > முதலில் சில இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இடதுதோள் பழக்கமா வலதுதோள் > பழக்கமா என்ன உயரம் என்பதையெல்லாம் கவனித்து, அதன்பிறகு அவர்களுக்கு வெறும் > தோளுக்கினியானைத் தூக்கிக்கொண்டு காவிரி மணலில் பல மாதங்கள் பயிற்சி எடுக்கச் > சொல்வார்களாம். > > அவர்கள் தேர்ந்த ஸ்ரீபாதம்தாங்கிகளாக ஆகிவிட்டார்கள் என்று நிர்வாகத்திற்கு > சமாதானம் உண்டானால்தான் அவர்கள் அந்தப் பணிக்கு அமர்த்தப்படுவார்களாம். > > ஆச்சரியமாக இல்லை!!! > > ஸ்ரீரங்கத்தைப் பற்றிய செய்திகள் எடுக்க எடுக்க வற்றாத அமுதசுரபியைப் போல > வந்துகொண்டே இருக்கின்றன. > > கேட்பதற்கு சில இனிமையாகயும் > > பல ஆச்சர்யமாகவும் இருக்கிறது, எனக்கு. > > நான் இத்தனைமுறை அங்கு சென்றிருந்தும் இதுவரை நான் பார்த்தும், பார்க்காத > கேட்டும் கேட்காத விஷயங்களை இன்னொருமுறை சரியாகப் பார்த்து, கேட்டு > மகிழவேண்டும் என என் சிந்தை மிக விழைகிறது இப்போது. > சிறப்பாக வாழத்தகுந்த பெரியகோவில் எனப்படும் மதில்சூழ் திருவரங்கத்துக்கு > போய்ச்சேராமல் ஏன் இப்படி காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறீர்?' என்று. > > 'மருவிய பெரியகோயில் மதிள்திருவரங்கம் என்னா கருவிலே திருவிலாதீர் காலத்தைக் > கழிக்கின்றீரே?' > > இவ்வளவு விஷயம் இருக்கிறதா!!! > 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 > > Yahoo Mail: Search, Organize, Conquer > <https://mail.onelink.me/107872968?pid=NativePlacement&c=Global_Acquisition_YMktg_315_EmailSignatureGrowth_YahooMail:Search,Organize,Conquer&af_sub1=Acquisition&af_sub2=Global_YMktg&af_sub3=&af_sub4=100000945&af_sub5=OrganizeConquer__Static_> > > -- > You received this message because you are subscribed to the Google Groups > "Thatha_Patty" group. > To unsubscribe from this group and stop receiving emails from it, send an > email to [email protected]. > To view this discussion on the web visit > https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81ZcCG7qOtU56FW6d5UK1O94UzeEHw_apO-vD%3DTAfGgxGtA%40mail.gmail.com > <https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81ZcCG7qOtU56FW6d5UK1O94UzeEHw_apO-vD%3DTAfGgxGtA%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer> > . > -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZorjxzLZcpVT5cHzdykXn-9%3D3Kg5nJtbONbaS%2BaMwvnoWA%40mail.gmail.com.
