👃👃 On Fri, Oct 18, 2024, 19:58 Rajaram Krishnamurthy <[email protected]> wrote:
> > PLEASE FIND ATTACHED WORD DOC ATTACHMENT FOR READING ON UTTARAKANDA KR > IRS 181024 > > > ---------- Forwarded message --------- > From: Chittanandam V R <[email protected]> > Date: Fri, 18 Oct 2024 at 18:54 > Subject: Fwd: Kulasekara Aalvar by Sujatha > To: > > > > *குலசேகர ஆழ்வார் - சுஜாதா* > > 'பெருமாள் திருமொழி'யில் 'ஆலை நீள்கரும்பு' என்று துவங்கும் ஏழாம் பத்தில் > அற்புதமான பாடல்களைக் குலசேகர ஆழ்வார் பாடியிருக்கிறார். > > அதில் ஒரு பாடலில் நான் யசோதையாக இல்லையே என்று ஒரு தாய் ஏங்குவதாகப் > பாடியிருக்கும் பாட்டு அதிசயமானது. > > *"மருவு நின்திரு நெற்றியில் சுட்டி* > > *அசைதர மணி வாயிடை முத்தம்* > *தருதலும் உன்றன் தாதையைப் போலும்* > *வடிவுகண்டு கொண்டு உள்ளம் உள்குளிர* > *விரலைச் செஞ்சிறு வாயிடைச் சேர்த்து * > *வெகுளியாய் நின்று உரைக்கும் அவ்வுரையும்* > *திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன், எல்லாம்* > *தெய்வ நங்கை யசோதை பெற்றாளே."* > > நெற்றியில் சுட்டி அசைய, வாயில் முத்தம் தருவதும், விரலை வாயில் வைத்துப் > பேசும் வெகுளிப் பேச்சும் எதுவும் நான் பெறும் பாக்கியமில்லாமல் இவையெல்லாம் > யசோதை பெற்றாளே... > > இவ்வாறு கிருஷ்ணாவதாரத்தின் பல செயல்களைச் சொல்லி அவைகளைப் பார்க்கும் > பாக்கியம் நாங்கள் பெறவில்லையே என்று எங்கும் பாடல்கள் இப்பத்தில் உள்ளன. > குலசேகரரின் 'மன்னுபுகழ் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே' என்ற பாசுரத்தை > நீலாம்பரி ராகத்தில் கேட்காதவர்கள் சொற்பமே. > > அந்தப் பத்தில் உள்ள அதிகம் மேற்கோளிடப்படாத ராமாவதாரப் பாடல்கள் இரண்டு இவை: > > *"மலையதனால் அணைகட்டி மதில் இலங்கை அழித்தவனே! * > *அலைக்கடலைக் கடைந்து அமரர்க்கு அமுதருளிச் செய்தவனே! * > *கலைவலவர்தாம் வாழும் கணபுரத்து என் கருமணியே! * > *சிலைவலவா! சேவகனே! சீராமா! தாலேலோ"* > > மலையால் அணை கட்டி இலங்கையை வென்றவனே! கடலைக் கடைந்து தேவர்களுக்கு அமுதம் > அளித்தவனே! பல்வேறு கலைகளில் வல்லவர்கள் வாழும் திருக்கண்ணபுரத்துப் பெருமானே! > வில் திறமையுள்ளவனே! உலகத்தைக் காப்பவனே!இராமனே! தாலேலோ! > > குலசேகர ஆழ்வாரின் எட்டாம் நூற்றாண்டுக் காலத்திலிருந்து திருக்கண்ணபுரக் > கோயில் இருந்திருக்கிறது என்பதை நிரூபிக்கிறது. 'முகுந்த மாலை' என்னும் > சமஸ்க்ருத நூலை எழுதியவரும் குலசேகர ஆழ்வார்தான் என்று நம்பப்படுகிறது. ஆனால், > திவ்யசூரிய சரிதம் இதைக் குறிப்பிடவில்லை. ஆகவே பண்டிதரும் திருமாலடியாரும் > குலசேகரர் என்ற பெயர் படைத்த பிற்காலத்துக் கேரள வேந்தர் ஒருவர் 'முகுந்த > மாலை'யைச் செய்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். > > *"தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே! * > *யாவரும் வந்து அடி வணங்க அரங்க நகர்த் துயின்றவனே! * > *காவிரி நல்நதி பாயும் கணபுரத்து என் கருமணியே! * > *ஏவரி வெஞ்சிலை வலவா! இராகவனே! தாலேலோ" * > > தேவாசுரர்களையும் திசைகளையும் படைத்தோனே, எல்லோரும் வந்து வணங்கும் > திருவரங்கத்தில் பள்ளிகொண்டிருப்பவனே, வில்வித்தையில் சிறந்தவனே, ராகவனே, > தாலேலோ. > > குலசேகரர் கம்பர் அளவுக்கு உருக்கமாக ராமாயணக் கதையில் அயோத்தியில் நடந்த > சம்பவங்களைப் பாடியிருக்கிறார். கம்பரின் முன்னோடி என்றுகூட இவரைச் சொல்லலாம். > > தசரதன் புலம்புவதாக அமைந்தது இந்தப் பாட்டு: > > *"வெவ்வாயேன் வெவ்வுரை கேட்டு இருநிலத்தை * > > *வேண்டாதே விரைந்து வென்றி * > *மைவாய களிறொழிந்து தேரொழிந்து * > *மாவொழிந்து வனமே மேவி * > *நெய்வாய வேல் நெடுங்கண் நேரிழையும் * > *இளங்கோவும் பின்பு போக * > *எவ்வாறு நடந்தனை? எம் இராமாவோ! * > *எம்பெருமான்!என் செய்கேனே?" * > > என்னுடைய கொடுமையான ஆணையைக் கேட்டு ராச்சியத்தைத் துறந்து, யானை, தேர், > குதிரைகளையெல்லாம் துறந்து,வேல் போன்ற கண்ணுடைய மனைவியுடனும் தம்பியுடனும் > எவ்வாறு நடந்தாயோ? இராமனே! எம்பெருமானே! நான் என்ன செய்துவிட்டேன்! > > தசரதன் இறந்துபோவதன் முன் சாசனமாக இருக்கிறது இந்தப் பாடல்: > > *"தேனகு மாமலர்க்கூந்தல் கௌசலையும் * > *சுமித்திரையும் சிந்தை நோவ * > *கூனுருவில் கொடுந்தொழுத்தை சொற்கேட்ட * > *கொடியவள்தன் சொற்கொண்டு இன்று * > *கானகமே மிக விரும்பி நீ துறந்த * > *வளநகரைத் துறந்து நானும் * > *வானகமே மிக விரும்பிப் போகின்றேன் * > *மனுகுலத்தார் தங்கள் கோவே!" * > > கௌசலையும் சுமித்திரையும் வருந்தத்தக்க 'கூனி' சொல்லைக் கேட்டுக் கொடிய > கைகேயியின் ஆணையை மேற்கொண்டு காட்டுக்கு விருப்பத்துடன் இந்த நகரத்தைத் > துறந்து சென்றாய். இதே நகரத்தைத் துறந்து நானும் சாவை விரும்பிப் போகிறேன். > > சிதம்பரத்தில் நடராசர் சன்னதிக்கு எதிரே உள்ள விஷ்ணு கோயில் ஆழ்வார் > பாடல்களில் தில்லைச் சித்திரகூடம் என்று அழைக்கப்படுகிறது. இராமாயணத்தின் > சித்ரகூடத்திலிருந்து வந்த பெயர். சுருக்கமாக ராமாயண சம்பவங்கள் முழுவதையும் > பத்தாம் பத்தில் சொல்லிவிடுகிறார். > > முழு இராமாயணமே உத்தர காண்டத்தையும் சேர்த்து இருக்கிறது. > > *-- சுஜாதா* > > ************************************ > > > > -- > You received this message because you are subscribed to the Google Groups > "Thatha_Patty" group. > To unsubscribe from this group and stop receiving emails from it, send an > email to [email protected]. > To view this discussion on the web visit > https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZooPtpncCHEZNjuOM%3DjV%3DwNXio%2B5oJSNAYJEi3L%3Dme3m8g%40mail.gmail.com > <https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZooPtpncCHEZNjuOM%3DjV%3DwNXio%2B5oJSNAYJEi3L%3Dme3m8g%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer> > . > -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJiWWoLHxStYPFKKxuCX5OyT-Q1wZn%2BzvK%3DFWQSE5jD1LP%3DwFg%40mail.gmail.com.
