யாக்கை நிலையாமை இளமை மற்றும் யாக்கை நிலையாமை குறித்த பாடல் இங்குக் குறிப்பிடத்தக்கது. ‘நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் செத்துச் செத்துப் பிழைக்கிறோம். அதற்கெல்லாம் அழுது புலம்பாத நாம், இவ்வுடலை விட்டு உயிர் பிரிகிறபோது மட்டும் அழுவது ஏன்’ என்று கேட்கிறார் ஆசிரியர்.
*பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும்காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும்மீளும் இவ் இயல்பும் இன்னே மேல்வரும் மூப்பும் ஆகிநாளும் நாள் சாகின்றாமால் நமக்குநாம் அழாதது என்னோ* (*பாளையாம் = *இளமை; *நாளும் நாள் சாகின்றாமால் = *தினம் தினம் செத்துக் கொண்டிருக்கிறோம்) 5.2.2 அறிவுடையார் செயல் எது நிகழ்ந்தாலும் அதை விருப்பு வெறுப்பில்லாமல் ஏற்றுக் கொள்வார்கள் அறிவுடையார் என்று அறிவுடையாரின் செயல் இந்நூலில் கூறப்பட்டுள்ளது. ‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது; எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது’ என்ற கீதையின் வார்த்தைகளை நினைவுகூரச் செய்கிறது பின்வரும் பாடல். *மறிப மறியும் மலிர்ப மலிரும்பெறுப பெறும் பெற்றுஇழப்ப இழக்கும்அறிவது அறிவார் அழுங்கார் உவவார்உறுவதும் உறும் என்று உரைப்பது நன்று* *(மறிப மறியும் = *நடப்பது நடந்தே தீரும்; *மலிர்ப மலிரும் = *நடக்க இருப்பது நடந்தே ஆகவேண்டும்; *பெறுப பெறும் = *நமக்குக் கிடைக்க வேண்டியது கிடைத்தே தீரும்) *பொருள்:* நடப்பது நடந்தே தீரும். நடக்க இருப்பது நடந்தே ஆகவேண்டும். நமக்குக் கிடைக்க வேண்டியது கிடைத்தே தீரும். நாம் பெற்றதை இழக்க நேரிடும்போது இழந்தே தீர வேண்டும், இதனை யாரும் தடுக்க முடியாது. இதற்காக அழுவதோ, உவப்பதோ செய்யார் அறிவுடையார். K Rajaram IRS 201224 ---------- Forwarded message --------- From: Chittanandam V R <[email protected]> Date: Fri, 20 Dec 2024 at 07:13 Subject: Fwd: Tamilnayagam - Kundalagesi To: ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று குண்டலகேசி. இதனை இயற்றிய நாதகுத்தனார் பத்தாம் நூற்றாண்டைச் *சேர்ந்தவர். பெரும் காப்பியம் என்று கூறப்பட்டாலும் நமக்குக் கிடைத்திருப்பது 19 பாடல்களே. தன்னைக் கொல்ல* *முயன்ற கணவனைக் கொன்றுவிட்டு புத்த பிக்குணியான குண்டலகேசியின் கதையே இக்காப்பியம்.* குண்டலகேசி - நமக்குநாம் அழாதது என்னோ? *தமிழ்நாயகம் * மற்றவர்களுக்குத் துன்பம் வந்தால் அழுகிறோம். நெருங்கிய சொந்தத்தில், உறவில், நட்பில் யாராவது இறந்து போனால் அழுகிறோம். மற்றவர் துன்பத்துக்கு வருந்தும் அதே நேரத்தில் நமக்கு அந்த அளவு துன்பம் இல்லை என்ற சின்ன ஆறுதலும் இருக்கிறது. தினமும் செய்தித்தாள், தொலைக்காட்சி போன்றவற்றைப் பார்க்கும் போது, "ஆண்டவா, என் நிலை அவ்வளவு மோசம் இல்லை" என்று ஒரு ஆறுதல் பிறக்கிறது. இல்லை என்றால் செய்தித்தாள்களும், தொலைக்காட்சிகளும் நல்ல செய்திகளை மட்டும்தான் போடும். எனக்கு சில சமயம் தோன்றும், மற்றவர்கள் துன்பங்களை பார்க்கும்போது நமக்குள் ஒரு சந்தோஷம்கூடப் பிறக்கிறதோ என்று. நம்மால் பெரிதாக ஒன்றையும் சாதிக்க முடியாது. நம் சந்தோஷம் என்பது மற்றவர்களின் நிலை நம்மைவிட கீழே இருப்பதை பார்ப்பதில் வருகிறது. இந்த உலகில் எல்லோரும் நம்மை விட உயர்வாக இருக்கிறார்கள் என்று இருந்தால் நம்மால் சந்தோஷமாக இருக்க முடியுமா? குண்டலகேசி கேட்கிறது, "நீ எத்தனை முறை இறந்திருக்கிறாய். எப்பவாவது அதற்காக அழுதிருக்கிறாயா?" கருவறையில் இருந்தாய்? அந்த நிலை தொடர்ந்ததா? அது மறைந்து பிள்ளையாய் பிறந்தாய். பிள்ளையாகவே இருந்தாயா என்றால் அதுவும் இல்லை. கொஞ்ச நாளில் அந்த பிள்ளைப் பருவம் மறைந்து விட்டது குமரனானாய். அதுவும் நீடிக்கவில்லை. அது இறந்து காமம் கொள்ளும் இளைஞனானாய். பின் அந்த நிலையும் மாறியது. வயதாகி கிழவனானாய். இப்படி எத்தனை முறை இறந்து இறந்து பிறப்பாய்? இப்படி ஒவ்வொன்றாக இழந்ததற்கு எப்போதாவது அழுதிருக்கிறாயா? எவ்வளவு அருமையான இளமை போய் விட்டதே. ஒரு வருத்தம் இருக்கிறதா? முதலில் உன்னைப் பற்றி வருத்தம் கொள். எல்லாம் போய்விடும். அதற்குள் ஏதாவது செய்ய வேண்டும் என்றால் செய்து கொள். சும்மா மற்றவர்களுக்காக துயரப்பட்டுக் கொண்டிருக்காதே. அது வெட்டி வேலை. உன் துயரே பெரும் துயராக இருக்கிறது. யோசித்துப் பார்த்தால் இதில் உள்ள உண்மை விளங்கும். வீட்டில் பல பெரியவர்களுக்கு மகன் என்ன செய்கிறாள், மருமகள் என்ன செய்கிறாள், பேரன் பேத்திகள் என்ன செய்கிறார்கள், மகள் எப்படி இருக்கிறாள் என்று எந்நேரமும் மற்றவர்களைப் பற்றியே சிந்தனை. தேவையில்லாமல் அவர்கள் வாழ்வில் மூக்கை நுழைக்க வேண்டியது. அவர்கள் கேட்கவில்லை என்றால் வருந்த வேண்டியது. காரணம் என்ன? தனக்குள் ஒன்றும் இல்லை. தன்னைப் பற்றி சிந்திக்க ஒன்றும் இல்லை. அதை மறைக்க மற்றவர்களைப் பற்றியே எந்நேரமும் சிந்திக்க வேண்டியது. குண்டலகேசி அதை மாற்றச் சொல்கிறது. உன்னைப் பற்றி சிந்தி என்று சொல்கிறது. சிந்தித்துத்தான் பார்ப்போமே. பாடல் *பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும்* *காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும்* *மீளும் இவ் இயல்பும் இன்னே மேல்வரும் மூப்பும் ஆகி* *நாளும் நாள் சாகின்றாமால் நமக்குநாம் அழாதது என்னோ* பொருள் கருவறையில் உள்ள குழவியாய் இருந்த நிலை செத்தும், பாலகனாய் இருந்த நிலைமை செத்தும், காளைப் பருவமும் செத்தும் காமம் கொள்ளும் அந்த நிலை செத்தும், மீண்டும் மீண்டும் இந்த காரியங்களேஇது போலவே நாள் ஆகி நாள் ஆகி மூப்பு வந்த பின் ஒவ்வொரு நாளும் நாம் இறந்து கொண்டே இருக்கின்றோம். நமக்கு நாமே அழாமல் இருப்பது எதனால் ? மரணம் நமக்கு வராது என்று எப்படி நினைக்கக்கூட முடிகிறது. நம் நிலை நோக்கி வருந்தி, அதில் இருந்து மீள வழி பார்ப்போம். மற்றவர்கள் அவர்கள் வாழ்க்கையைப் பார்த்துக் கொள்வார்கள். *தமிழ்நாயகம் * **************************** *சித்தானந்தம் * -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoqm2-_2kGVrxKpVEZW5fD%2Bg9DQ7xYkf-5OhuJppEDsh4A%40mail.gmail.com.
