---------- Forwarded message ---------
From: Chittanandam V R <[email protected]>
Date: Mon, 24 Mar 2025 at 05:01
Subject: Fwd: Tamilnayagam - Kamba Ramayanam - Thaarai, Vaali's Consort (5)
To:

ரூமா (சமஸ்கிருதம்: रूमा) என்பது தாரா என்றும் அழைக்கப்படும் ஒரு வானர மற்றும்
ராமாயண காவியத்தில் குறிப்பிடப்பட்ட கிஷ்கிந்தா ராணி. கிஷ்கிந்தா வானர
ராஜ்ஜியத்தை ஆண்ட சுக்ரீவ மன்னனின் மனைவி.[1]



புராணக்கதை

ராமாயணத்தின் IV புத்தகத்தில் (கிஷ்கிந்தா காண்டா) ரூமா தனது குறிப்பைக்
காண்கிறார். சுக்ரீவன் ரூமாவின் மீது காதல் கொண்டான். ஆனால் ரூமாவின் தந்தை
அதற்கு சம்மதிக்கவில்லை. எனவே, சுக்ரீவன் அனுமனின் உதவியுடன், ரூமாவைக் கடத்தி,
அவர்கள் ஒருவரை ஒருவர் திருமணம் செய்து கொண்டார். இரண்டு அரச வானர சகோதரர்களின்
சண்டையைத் தொடர்ந்து ரூமாவை சுக்ரீவனிடமிருந்து வாலி அழைத்துச் சென்றார்.
பின்னர், ருமாவை வாலி தடுத்துள்ளார் என்ற உண்மை, ராமர் வாலியைக் கொன்றதற்கும்,
சுக்ரீவன் கிஷ்கிந்தாவின் அரசனாவதற்கு உதவியதற்கும் முதன்மையான நியாயமாக
அமைந்தது. ராமனின் அம்பினால் தாழ்வான, துரோக, எதிர்பாராத படுகொலை என்று
வாலியால் குற்றம் சாட்டப்பட்டபோது, ராமர் தனது திருமணமான மனைவியான ருமா அல்லது
தாராவிடம் சுக்ரீவரைக் கொள்ளையடித்து, அவளை தனது மகிழ்ச்சிக்காகப்
பயன்படுத்தியபோது வாலி செய்த பாவத்திற்குத் தான் கொல்லப்பட்டது நியாயமான தண்டனை
என்று கூறுகிறார்.

Vali’s wife Tara prevents Vali from going to this war, but Vali is stubborn
in going out.
தாரை விலக்கலும், வாலி மறுத்துக் கூறலும்

*ஆயிடை**,**தாரை* *என்று* *அமிழ்தின்* *தோன்றிய*
*வேயிடைத்* *தோளினாள்**, **இடை* *விலக்கினாள்*
*; **வாயிடைப்* *புகை* *வர**, **வாலி* *கண்* *வரும்*
*தீயிடை**, **தன்* *நெடுங்* *கூந்தல்* *தீகின்றாள்**. (**கிஷ்கா** 248 / 3956)*

அப்பொழுது தாரை என்று பெயர் கூறப்பட்ட அமுதம் போலக் காணப்படுகின்ற மூங்கிலின்
தன்மையைத் தன்னிடத்தே கொண்ட தோள்களை உடையவள், வாயினின்று சினத்தால் புகை
வருமாறு வாலியின் கண்களிலிருந்து வரும் சினத்தீயிடையே தன் நீண்ட கூந்தல் எரியப்
பெற்றவளாய் இடை நின்று அவனைத் தடுத்து விலக்கினாள்.

Meaning:

At that time when Vali was coming out heroic, his wife Tara, having bamboo
like shoulders, and who had the properties of nectar stopped and prevented
Vali from going the fight. Kamban says, as Tara stood before her husband
Vali, her long hair got burnt because of that fuming fire coming out of
Vali’s mouth which was emanating terrific Fire due to anger.

Comments:

1.   Tara is Vali’s wife. and described as one of the prettiest women in
the world. Both Valmiki and Kamban describe her also as a very intelligent
and diplomatic women with intricate knowledge of Ruling a Kingdom and
related aspects.

2.   Pundits even highlight, being a woman she had gathered adequate
information about Rama Sugreeva friendship, even well before Vali knew
about it.!

3.   Tara had her own spies and emissaries to Govern the kingdom
efficiently.

4.   தன் நெடுங் கூந்தல் தீகின்றாள்.: It is the height of imagination that
the wife Hairdo caught fire because of husband’s anguish

5.   Pundits further say it is also an advanced indication by Kamban about
the inauspicious event that would occur to Tara subsequently.

கருத்துகள்:

1. தாரா வாலியின் மனைவி. மற்றும் உலகின் மிக அழகான பெண்களில் ஒருவராக
விவரிக்கப்பட்டது. வால்மீகி மற்றும் கம்பன் இருவரும் அவளை மிகவும் புத்திசாலி
மற்றும் இராஜதந்திரப் பெண்கள் என்றும் ஒரு ராஜ்ஜியத்தை ஆளுவது மற்றும்
தொடர்புடைய அம்சங்களைப் பற்றிய நுணுக்கமான அறிவைக் கொண்டவர் என்றும்
விவரிக்கின்றனர்.

2. பண்டிதர்கள் கூட, ஒரு பெண்ணாக இருந்ததால், ராம சுக்ரீவ நட்பை வாலி அறிவதற்கு
முன்பே, அவள் போதுமான தகவல்களைச் சேகரித்திருந்தாள்.!

3. தாரா தனது சொந்த உளவாளிகளையும், தூதர்களையும் ராஜ்யத்தை திறமையாக ஆள்வதற்காக
வைத்திருந்தார்.

4. தன் நெடுங் கூந்தல் தீகின்றாள்.: கணவனின் வேதனையால் மனைவி ஹேர்டோ
தீக்குளித்தாள் என்பது கற்பனையின் உச்சம்.

5. பண்டிதர்கள் மேலும் கூறுவது இது தாராவிற்கு பின்னர் ஏற்படப்போகும் அசுப
நிகழ்வைப் பற்றி கம்பன் கூறிய முன்னுரையாகும்.

K RAJARAM IRS 24325

இராமாயணம் - தாரையின் ஆளுமை - பாகம் 5 - கண்ணியர் காதல் நீர்

*தமிழ்நாயகம் *

தன் முன்னால் நிற்கும் குரங்குக் கூட்டத்தைப் பார்த்து மேலும் தாரை சொல்கிறாள்.

"மனைவியை பிரிந்த அந்த தேவர்களின் மேலோன், உயிர் பிரிந்த மாதிரி சோர்வடைவான்.
அதை நீங்கள் நினைத்துப் பார்க்காமல், கருங்குவளை மலர் போன்ற கண்களை கொண்ட
உங்கள் மனைவியருடன் காதல் நீரைப் பருகிக் கொண்டு இருக்கிறீர்கள்"

பாடல்

தேவி நீங்க, அத் தேவரின் சீரியோன்
ஆவி நீங்கினன்போல் அயர்வான்; அது
பாவியாது, பருகுதிர் போலும், நும்
காவி நாள்மலர்க் கண்ணியர் காதல் நீர்.

பொருள்:  சீதை நீங்க  தேவர்களை விட சிறந்தவனான அவன்   உயிர் பிரிந்ததைப் போல
சோர்வடைவான்.   அதனை  நினைத்துப் பார்க்காமல்  உங்கள்  அன்று பூத்த குவளை மலர்
போன்ற  கண்களை கொண்டவர்களின் காதல் நீர் சுவைப்பீர்கள் போலும்!

காதல் நீர் என்பதற்கு என்ன அர்த்தமாக இருக்கும் என்ற ஆராய்ச்சியை உங்களிடமே
விட்டு விடுகிறேன்....

ஒரு பெண், முன்னால் நிற்கும் பெரிய ஆண்கள் கூட்டத்தைப் பார்த்து இவ்வளவு
 உரிமையோடு கண்டித்துத்  திட்டுகிறாள் என்றால் அவளின் ஆளுமை எந்த அளவுக்கு
இருந்திருக்க வேண்டும். முன்ன பின்ன தெரியாத ஒரு கூட்டத்தைப் பார்த்து ஒரு
பெண் இப்படி பேச முடியுமா .....

அது மட்டும் அல்ல, இந்தப் பகுதியைக் கம்பன் ஏன் வைத்து இருக்கிறான் ?

சுக்ரீவன் தண்ணி அடித்துவிட்டு சொன்ன வாக்கை மறந்து விட்டான். இலக்குவன்
 கோபித்து வந்தான். தாரை சமாதானப்படுத்தினாள். எல்லாம் சரியாகி விட்டது. இந்த
பகுதி இல்லாவிட்டால் , காப்பியம் என்ன ஆகி இருக்கும்? ஒன்றும் ஆகி இருக்காது.
கதையின் ஓட்டத்திற்கு இந்த பகுதி தேவை இல்லைதான். குறித்த காலத்தில் சுக்ரீவன்
வந்தான் என்று ஒரு வரியில் சொல்லிவிட்டுப் போயிருக்கலாம். மாறாக, இவ்வளவு
நீட்டி கம்பன் சொல்லக் காரணம் என்ன....?

காரணம் இருக்கிறது.

முதலாவது, ஒரு தலைவன் ஒழுங்காக இல்லை என்றால் அவன் அமைச்சர்களும், குடிகளும்
ஒழுங்காக இருக்க மாட்டார்கள். சுக்ரீவன் இன்பத்தில் மூழ்கி சொன்ன சொல்லை
மறந்தான். அரசன் எவ்வழி, குடிகள் அவ்வழி  என்று மற்றவர்களும் அப்படியே இருந்து
விட்டார்கள்.

இது ஒரு முதல் பாடம் - தலைவன் ஒழுங்காக இல்லை என்றால் அவனுக்கு கீழே
உள்ளவர்களும்  ஒழுங்காக இருக்க மாட்டார்கள்.

அதை விட முக்கியமான பாடம் என்ன என்றால், மனிதன் ஏன் கடமை தவறுகிறான் ?

முதல் காரணம் போதை. போதைக்கு அடிமையானதால் சுக்ரீவன் தன் நிலை மறந்தான்.
இரண்டாவது,
காமம். கண்ணியர் காதல் நீர் பருகிக் கிடந்ததால் மற்றவர்களும் சொன்ன சொல்லை
காக்கத் தவறினார்கள்.

மதுவும் மாதுவும் மனிதனை தடம் புரளச் செய்யும்.

மேலும் சிந்திப்போம்.

*தமிழ்நாயகம் *
*******************************
*சித்தானந்தம் *

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoonwHQmzx98%3DYpVSL%3DU0x9tT4DchwddkfweV5nT-qOrvw%40mail.gmail.com.

Reply via email to