Pranam  KR

---------- Forwarded message ---------
From: Srinivasan Sridharan <[email protected]>
Date: Sun, 19 Oct 2025 at 06:39
Subject: Fwd: KAMAL KUMARI
To: Rajaram Krishnamurthy <[email protected]>, N Sekar <
[email protected]>



*Date:* October 18, 2025
*From :* sridharan <[email protected]>
*Subject:* *KAMAL KUMARI*


ஒரு அணு ஆயுத போரை நிறுத்திய பெண் கான்ஸ்டபில் காவல் தெய்வம்...

பாரளுமன்ற நுழைவு வாயிலில் Home Ministry என்று பெயர் பலகையுடன் ஒரு கார்
பார்லிமெண்ட் கேட்டில் உள்ளே நுழைகிறது. செக் போஸ்டை தாண்டியதும் அதன் வேகம்
அதிகரிக்கிறது, அது எதார்த்திற்கு மாறாக, தவறாக மனதில் தோன்ற, அங்கே இருந்த
பெண் கான்ஸ்டபில் அதை அவசரமாக தொடர்கிறார். அது பார்லிமெண்ட் கேட் 11 க்கு
அருகில் நிற்கிறது. அந்த 11 எண் கேட் என்பது பிரதமர் போன்ற முக்கியமானவர்கள்
நுழையும் வழி. அதில் உள்ளே சென்றால், எளிதில் மைய மண்டபத்தை அடைய முடியும்..

அதிலிருந்து வெளியே வருகிறவன் ஆயுதத்துடன் வருகிறான். அவன் யூனிஃபார்மில்
இருந்தாலும் தீவிரவாதி என்று அடையாளம் காண அவருக்கு  நேரம் பிடிக்கவில்லை.
தன்னிடம் ஒரு கைத்துப்பாக்கி கூட இல்லை, வெறும் வாக்கி டாக்கி மட்டுமே.. அதில்
11 கேட்டில் தீவிரவாதி நுழைந்ததை உடனே விரையச்சொல்லி அலர்ட் செய்கிறார்.
அப்போது தனக்கு குடும்பம் இருக்கிறது, தனக்காக தன் குழந்தைகள் வீட்டில்
காத்திருக்கிறது என்று நினைத்திருந்தால் அவர் வாங்கிய சம்பளத்திற்கு அத்தோடு
அவரின் கடமை முடிந்துவிட்டிருக்கும்..

ஆனால் 11 எண் கேட்டில் ஒரே ஒரு காவலர் மட்டும் ஆயுதத்துடன் நிற்கிறார், அவரின்
கவனம் வேறு திசையில் இருக்கிறது.  அதன் ஆபத்தை புரிந்துகொண்டவர், வாக்கி
டாக்கியில் கத்திக்கொண்டு, அந்த தீவிரவாதியை நோக்கி நிராயுதபாணியாக ஓடுகிறாள்,
அவன் அவரை கொல்லப்போகிறான் என்று தெரிந்தும். அதுபோலவே சத்தம் கேட்ட அந்த
தீவிரவத்திக்கு தெரிய, அவனிடம் இருக்கும் துப்பாக்கியால், அந்த பெண் தெய்வத்தை
27 இடங்களில் சுடுகிறான், திருப்பூர் கொடிகாத்த குமரன் போல, கடைசி வரை வாக்கி
டாக்கியில் கத்திக்கொண்டு சரிகிறது அந்த தெய்வம்..

அதன் மூலம் அலர்ட் ஆன கேட் காவலாளி, அந்த தீவிரவாதியை  சுடுகிறார், அதில்
அவனிடம் இருந்த மனித வெடிகுண்டு மிகப்பெரிய சத்தத்துடன் வெடித்து சாகிறான்.
அதன் பின்னர் நடந்ததை நாம் அறிவோம்..

அந்த பெண் தெய்வத்தின் பெயரை நமக்கு தெரியுமா என்று கேட்டபோது எனக்கு
தெரியவில்லை? ஆனால் அந்த அட்டாக்கிற்கு உதவிய அப்சல் குரு முதல் ஆட்டோ சங்கர்
வரை எல்லா பெயரும் தெரியும் என்பது எனக்கு அசிங்கமாக இருந்தது... ஏனெனில் நாம்
ஒரு  கேடுகெட்ட சமுதாயத்தில் பிறந்து, வளர்ந்து, கெட்டவர்களால் ஆளப்பட்டால்,
நாமும் கெட்டுப்போனவர்களே? என்று ஆயிரம் சமாதானம் செய்தாலும் ஒரு புழு
ஊர்வதைப்போல அசிங்கமாக ஒரு மூளை முதல் முறையாக அவஸ்தை பட்டது?

அந்த காவல் தெய்வத்தின்  பெயர் "கம்லேஷ் குமாரி". அந்த பெண் தெய்வத்தின்
மகத்தான பணி என்பது ஆயிரம் காந்திகளுக்கு, மன்னிக்கவும் சந்திர போஷுக்கு
நிகரானது.. அவரின் பணியை பாராட்டி இந்தியாவின் மிக உயரிய விருதான அசோக சக்ரா
விருது வழங்கப்பட்டது. அத்தோடு, அதில் முக்கிய பணியாற்றிய பலருக்கு விருதுகள்
வழங்கப்பட்டது.

அந்த பாராளுமன்ற தாக்குதலில் மூளையால செய்ல்பட்டவன் பெயர்தான் அப்சல் குரு.
அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவன் சிறுபான்மை என்ற ஒரே
காரணத்திற்காக இத்தாலி மாஃபியவால் ஆளப்பட்ட அடுத்த ஆட்சியில் அவனுக்கு
ஜெயிலில் எல்லா வசதிகளும் கிடைத்தது. தன் தந்தையை கொன்றவளை சந்தித்து அரசியல்
செய்யும் அநாகரீக கும்பத்திற்கு அது ஒன்றும் புதிதல்ல!

அது மட்டுமல்ல, அவன் -------- சமுதாயம் என்பதால், கேடுகெட்ட அரசியல் வியாதிகள்
அவனுக்கு ஜனாதிபதியின் கருணை மனு என்ற பெயரில் விபரீதத்தையும்  செய்தார்கள்.

இப்போது நமக்கே ரத்தம்  கொதிக்கும்போது, அதற்காக உயிர்கொடுத்த அந்த காவல்
தெய்வத்தின் குடும்பத்திற்கு, அதில் உயிரிழந்து, உடல் இழந்தவர்களுக்கு?

அவனுக்கு மன்னிப்பு என்ற வார்த்தை, அசிங்கப்படுத்தியது கோபப்படுத்தியது? அந்த
அசோக சக்ரா மற்றும் அனைத்து விருதுகளுக்கு அர்த்தமில்லை என்று, அதை திருப்பி
கொடுத்தார்கள். 12 வருடம் அந்த நாடகம் ஜனாதிபதி மாளிகையில் முடிய, பிரனாப்
முகர்ஜி என்றதொரு நாட்டுப்பற்றுள்ள ஜனாதிபதி வர வேண்டியதாக இருந்தது. அதன்
பின்னர் 2013 அந்த மிருகம் தூக்கில் போடப்பட்ட பின்பு அந்த அசோக சக்ரா
விருதுக்கு உயிர் வந்தது, அதை திரும்ப பெற்றார்கள்.

அன்று அந்த காவல் தெய்வம் அதை தடுக்காமல் விட்டிருந்தால், பார்லிமெண்டில்
பிரதமர் வாஜ்பாய் முதல் பலர் அங்கிருந்தார்கள். (ஆனால் இது போன்ற முக்கியமான
நேரங்ளில் அந்த இத்தாலி மாஃபியா குடும்பம் மட்டும் அங்கிருக்காது என்பது
ஆச்சரியமே?). அப்படியொரு தாக்குதல் நடந்திருந்தால் இந்தியாவால், பாகிஸ்தான்
தாக்கப்பட்டிருக்கும். அந்த நாடு நம் தாக்குதலை தாங்க முடியாமல், அணு ஆய்தத்தை
பிரயோகிப்பதை தவிர அதற்கு மாற்று இல்லை.

அந்த அணு ஆயுத போரை தடுக்க போகிறோம் என்று அதை செய்யவில்லை. தன்னை விட
குடும்பம் பெரிது, குடும்பத்தை விட நாடு பெரிது என்று வாழ்ந்த அந்த காவல்
தெய்வம்தான் கம்லேஷ் குமாரி..  உண்மையில் அவருக்குத்தான் கோயில் கட்டியிருக்க
வேண்டும், ஆனால் நடிகைகளுக்கு கோயிலும், நாதாறிகளுக்கு ஊரெல்லாம் சிலையும்
வைத்து கொண்டாடுகிறோம்...

அப்படிப்பட்ட வெறி நாய்களுக்கு ஆதரவு தரும்  நாதாரிகளையும், காங்கிரஸ்
வியாதிகளையும், சீன கம்யூனிஷ அடிவருடிகளையும் பார்க்கிறபோதெல்லாம் ஒரு
எரிச்சல் என்னுள் வரும்.. அந்த எரிச்சல் அந்த காவல் தெய்வம் யாரென்று
தெரியாதபோது என் மீதே வந்தது.

அதற்கு எனக்கு மன்னிப்பே கிடையாது, அதுபோன்றதொரு நிலை அடுத்த தலைமுறைக்கு
வந்துவிடக்கூடாது என்பதற்காக எழுதப்பட்ட ஒரு சிறு பரிகாரம்தான் இந்த பதிவு.
உங்களுக்கும் தோன்றினால், இதுபோன்ற தேசத்தை காத்தவர்கள் பற்றி படியுங்கள்,
கண்டிப்பாக குழந்தைகளிடம் பேசுங்கள், எழுதுங்கள், முடியாவிட்டால் குறைந்தது
இதுபோன்றதை பகிருங்கள்.

இவரைப்போன்ற ஆயிரமாயிரம்  வீரர்கள் எல்லையில் நமக்காக தினமும். உயிர்
கொடுத்துக் கொண்டிருப்பதால்தான் நாம் இங்கே சுகபோகங்களை அனுபவிக்கிறோம் என்று
அந்த வீரர்களை பற்றி குழந்தைகளிடம் சொல்லுங்கள். பள்ளி பாடத்தில் இதை
சேருங்கள்.

வீழ்வது நாமாக இருக்கலாம், உயர்வது நாடாக இருக்கட்டும்!

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZooiwDOzTO%3DwDgZVGse7yE3fVBTyhe523F%2BfDhESYsNafw%40mail.gmail.com.

Reply via email to