பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்.   (௰ - 10)

இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க
முடியும். மற்றவர் கடக்க முடியாது  (௰)

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்.   (௨ - 2)

தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால்,
அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன? (௨)

K Rajaram IRS 26326

---------- Forwarded message ---------
From: Chittanandam V R <[email protected]>
Date: Wed, 25 Mar 2026 at 20:29
Subject: Fwd: Indira Priyadarshini -
To:





போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றி யாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்.
(திருவெம்பாவையின் கடைசிப்பாடல்)

பொருள்: சிவபெருமானே! எல்லாவற்றுக்கும் முதலாவதான உன் பாதமலர்களை
வணங்குகிறோம். எல்லாவற்றுக்கும் முடிவாயுள்ள உன் மென்மையான திருவடிகளை
பணிகின்றோம். எல்லா உயிர்களையும் படைக்கின்ற உன் பொற் பாதங்களை சரணடைகின்றோம்.
எல்லா உயிர்களுக்கும் வாழும் காலத்தில் இன்பமான வாழ்வு தரும் மலரடிகளை
பிரார்த்திக்கிறோம். உயிர்களை அழித்து இறுதிக்காலத்தை தருகின்ற இணையற்ற
காலடிகளைப் போற்றுகின்றோம். திருமாலாலும், பிரம்மாவாலும் காண முடியாத தாமரை
பாதங்களைக் காண்பதில் பெருமிதமடைகின்றோம். எங்களுக்கு பிறப்பற்ற நிலை தரும்
பொன் போன்ற திருவடிகளை பற்றுகின்றோம். இவ்வாறு உன்னோடு ஐக்கியமாகி, உன்
நினைவுகளுடன் நீர்நிலைகளில் நீராடி மகிழ்கிறோம்.



இறைவன் பெருமை இதுகாறும் பேசினோம்.  பலவாறும் பேசுகிறோம். பேசுவோம். பாடுவோம்.
ஆனால் அதில் நாம் எப்படி பயன் காண்பது? பலன் பெறுவது?

மாப்பொன்னிலும் காப்பொன் காண்பது தட்டான் குணம் என்றால் இறைக் காரியத்தில்
நாம் மிகவும் கண்ணாயிருக்க வேண்டாமா? மணிவாசகப் பெருமான் நமக்கு புத்தியோடு
பிழைத்துக் கொள்ளும் வழியைக் காட்டி அருள்கிறார். ஒன்றே குறியாய் இரு. இறைவன்
திருவடிப் பெருமை. ஈசனின் ஐந்து தொழில்களை இறைவன் செய்யும் தன்மை அவன்
திருவடிகளுக்கு ஏற்றி, தோற்றமாகவும், போகமாகவும் (இன்ப துன்பங்களை அளித்து
காக்கும் நிலை), ஈறாகவும், மறை பொருளாகவும், உயிர் அனைத்தும் உய்வதற்கான
வழியாகக் கூறுகிறார் இப்பாட்டில்.

அவன் பாத இணைகளை விடாமல் பிடித்துக் கொள். பற்றுக பற்றற்றான் பற்றினை!
தனக்குவமை இல்லாதான் தாள் சேர்! முந்தை வினை முழுதும் ஓய உரைக்க வேண்டாமா?
விழித்துக் கொண்டோர் எல்லாம் பிழைத்துக் கொண்டார். தமிழின் வளமை இப்பாடலில்
நன்கு புலப்படும். பாத மலர்களுக்குத் தான் எத்தனை இணைப்பதங்கள். பதம் என்ற
சொல்லே பல விதம்.

பொதுவாக நம் இந்து சமயத்தில் திருவடியினைத்  தொழுதேத்துதல் மிக அதிகம். பாதாதி
கேசம் தொழுதல் உண்டு. சைவத்தில் இப்பாடல் அதன் சிறப்பை உணர்த்தும். வைணவத்தில்
சிறிய திருவடி, பெரிய திருவடி. ஸ்ரீ  பாதுகா சஹஸ்ரம் ஸ்ரீ வேதாந்த தேசிகர்
சாதித்தது. அங்கு சடாரி சேவித்தல்  உண்டு. ஸ்ரீ யதிராஜர் தாம் பெருமாள்
பாதுகை. இப்பாட்டு ஸ்ரீ துளசி தாஸரின் யமன் கல்யாணி ராகத்தில் அமைந்த புகழ்
பெற்ற ஸ்ரீ ராமசந்த்ர க்ருபாலு பஜ்மன என்ற தாமரை மலர் வர்ணனைப் பாட்டை
நினைவுபடுத்தும்.

நேற்று ஆதிரை நாள். பாரதி ஆதிரை நாள் ஓர்மை வருகிறது. ஸ்ரீ மங்களநாத சுவாமி்
கோவிலில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக இருந்திருக்கும். சடாமுடியுடன் கூடிய ஞானமய
மணிவாசகப் பெருமானை அங்கு மட்டுமே காணலாம். முப்போதும் துளை வழியே நடராசரைத்
தரிசித்தபடியே இருப்பார். யாராவது நம்மை திருவெம்பாவை ஓதினால் என்ன பயன் என்று
கேட்டால் நமக்கு இறை நினைவு எப்போதும் தப்பாது என்று நெஞ்சு நிமிர்த்தி
சொல்லலாம்.

பூழியர் கோன் வெப்பொழித்த புகலியர் கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடி போற்றி!
வாழி திருநாவலூர் வன்தொண்டர் பதம்போற்றி!
ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி!
திருச்சிற்றம்பலம்!

*இந்திராப்ரியதர்ஷிணி *

*************************************************
*சித்தானந்தம் *

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoqiZGSY1nJetk_855Bp7%3D73icu%2Bd_Fs2q%2BDuhHHXSh55A%40mail.gmail.com.

Reply via email to