Great stunned K Rajaram IRS 27326 On Fri, 27 Mar 2026 at 08:06, Venkatachalam Subramanian < [email protected]> wrote:
> மதிப்பிற்குரிய இலந்தை ராமசாமி அவர்களின் படைப்பினை நாமும் அனுபவிப்போம் > என்று கண்டிருக்கிறேன். > > ---------- Forwarded message --------- > From: Subbaier Ramasami <[email protected]> > Date: Thu, 26 Mar, 2026, 7:53 pm > Subject: இராமன் > To: santhavasantham <[email protected]> > > > பல ஆண்டுகட்கு முன்பு தேரழுந்தூரிலே ஒரு கவியரங்கம். என் தலைப்பு இராமன். > இராமன் தன்னைப்பற்றித் தான் பேசும் தனிமொழியாக அமைத்திருந்தேன். அதற்கு முன் > கவிக்கூற்றாக நான் இராமனை அறிமுகம் செய்தேன். அந்தப் பகுதி இதோ: > கோசலை பெற்ற குமரன், குணக்குன்று > பேசரும் பண்புப் பெரியவன், தெய்வமே > பாரில் மனிதனாய்ப் பாவனைகள் செய்திடவே > நேரில் இறங்கிவந்த நித்தியம், தந்தைசொல் > காத்திட வேண்டியே, காட்டுக்குச் சென்ற மகன் > பூத்திடும் நெஞ்சில் புனிதங்கள் தேக்கியவன், > சத்தியத்தின் நேர்பிறவி, சாந்தத் திருவுருவம், > இத்தரையின் வாழ்வில் எடுத்துக்காட் டாகியவன் > செத்த தடத்துள்ளும் ஜீவன் வரவாக்கும் > உத்தமன், கல்லில் உயிர்தூவி வைத்தமகன், > அண்ணல், அறத்தின் அவதாரம், அஞ்சன > வண்ணன், ,கமல மலர்க்கண்ணன், வில்லேந்து > வீரன், விவேகி, வேடன்குகன் அண்ணன், > தீரன், அபயச் சிகாமணி, கண்ணசைவின் > சின்னத் திருப்பத்தில் தெய்வம் ஒளிவீச > என்னவெனத் தேறாத ஏதோவோர் இன்பத்தின் > மின்னல் கனிச்சூட்டின் விந்தை விளைக்கிறவன் > உன்னதத்தின் உன்னதத்தின் உன்னதத்தின் உச்சமவன் > தன்மனத்தி லே பகைமைத் தன்மை அறியாதான் > இன்னபடி என்றே இலக்கணமாய்க் காட்டுதற்கே > சொன்னபடி தான்நின்ற சுந்தரன், மற்றொருவர் > துன்பத்தைக் கண்டால் துடிக்கிறவன், மண்ணாளும் > பாக்கியத்தைக் கூடப் பரவசமாய் எண்ணாதான் > வாக்கினிலே தூய்மை, வடிவத்தில் பேரழகு, > வானத் தமுதம் வடிவெடுத்து வந்ததுபோல் > போன இடமெல்லாம் புத்துணர்ச்சி ஊட்டியவன் > சற்றே விழிசிவந்தால் தாவும் கடல்வற்றும் > பற்றும் பெருங்கனலில் பாரே சிவப்பாகும் > ஆனால் சினம் கொள்ளான், அன்பே அவன் மூச்சு > தானாக வந்து சரணம் அடைபவரின் > கோத்திரம் பாரான், குலம்பாரான், ஒன்றாவான் > தீத்திறத்து மாற்றாரைத் தீய்க்கின்ற வெம்மைநிலா > கங்கு குளிர்ந்த கதிராவான் அன்பர்க்கே, > பொங்குமவன் புன்னகையில் போது மலராகும் > கங்குல் வெளிப்பூச்சு, காப்பதுவோ வெள்ளைமனம் > தங்கும் வனமுமிவன் சன்னதியி லேசொர்க்கம் > கங்கை புனிதமவன் காலடியிலே கொள்ளும் > பொங்கி வெடிக்கின்ற பூவில் அவன்சுகந்தம் > ஓர்சொல்லில் ஓர் இல்லில் ஓர்வில்லில் நிற்கிறவன் > நேர்பாதை செல்லும் நெறியின் வழிகாட்டி > போதன், புனிதன், புகழின் பொருளாளன், > வேதன், வினயன், விரிஞான நீதிமகன், > அல்லழகன், நல்லறிஞன், ஆனந்தன் அற்புதன் > சொல்லழகன், ஆண்களையும் சொக்கிவிடச் செய்கிறவன் > சீதை கணவன், திறல்மறவன், செம்மனத்தன் > ஆதி, அநாதி, அறத்தை அணிகிறவன் > என்றெல்லாம் பல்லோரும் ஏற்றும் இராமபிரான் > தன்கதையை இவ்வரங்கில் சாற்றுகிறான் கேட்போமா? > > -- > You received this message because you are subscribed to the Google Groups > "சந்தவசந்தம்" group. > To unsubscribe from this group and stop receiving emails from it, send an > email to [email protected]. > To view this discussion visit > https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBCJ0aAKRb9U9kR6KYv52wVBuBj8-zgq1RAfqQ9BteGuJw%40mail.gmail.com > <https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBCJ0aAKRb9U9kR6KYv52wVBuBj8-zgq1RAfqQ9BteGuJw%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer> > . > > -- > You received this message because you are subscribed to the Google Groups > "Thatha_Patty" group. > To unsubscribe from this group and stop receiving emails from it, send an > email to [email protected]. > To view this discussion visit > https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdsRKBD7VoHD%2BkNH0nQS2kTQ0nXDKsfUiu1CeX9sRoe%2BTA%40mail.gmail.com > <https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdsRKBD7VoHD%2BkNH0nQS2kTQ0nXDKsfUiu1CeX9sRoe%2BTA%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer> > . > -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZooE8kQnFFtaXHWqx7%2B521ygGThDObD%2BfywSf3Kn_O62DQ%40mail.gmail.com.
