*நினைவூட்டும் பதிவு* *15.05.2026 _ மங்களகரமான ஶ்ரீ பராபவ வருடம் வைகாசி மாதம் முதல் நாள் - விஷ்ணுபதி புண்ய காலம்*
*விஷ்ணுபதி புண்ய காலம் என்றால் என்ன?* சூரிய பகவான் ஸ்திர ராசிகளான ரிஷபம், சிம்மம், விருச்சிகம் மற்றும் கும்பம் ஆகிய 4 ராசிகளில் பிரவேசிக்கும் முதல் நாள் ***விஷ்ணுபதி புண்ய காலம்*** என்று அழைக்கப்படும். ஶ்ரீ பராபவ வருடம் - வைகாசி மாதம் மாதம் 01 ஆம் தேதி, 15.05.2026, வெள்ளிக்கிழமை அதிகாலை சூரிய பகவான் காலை சரியாக 06.22 am மணிக்கு மேஷம் ராசியில் இருந்து ரிஷபம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். (*பெயர்ச்சி நேரம் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையை மையமாக வைத்து ஸ்ரீநிவாசன் திருக்கணித பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ளபடி தெரிவிக்கப்பட்டுள்ளது*) இது ஒவ்வொரு தமிழ் வருடத்திலும் 4 நாட்கள் மட்டுமே வரும் தனித்தன்மை வாய்ந்த ஒரு நன்னாளாகும். இந்த விஷ்ணுபதி புண்யகாலத்தில் அதாவது 15.05.2026 அன்று வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் பகல் 12.00 மணி வரை தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று மூலவர் பிரகாரத்தை 27 முறை வலம் வந்த பின்னர் ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயார் மற்றும் ஸ்ரீ மஹாவிஷ்ணு வழிபாடு மேற்கொண்டால் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ஆரோக்கியத்தையும், ஐஸ்வர்யத்தையும் அள்ளி வழங்கும் ஒரு உன்னதமான திருநாளாக இந்த நாள் விளங்கும். மேலும் அன்றைய நாளன்று காலை சூரியன் வழிபாடு மேற்கொள்வதும், முன்னோர்களுக்கு உண்டான திதி - தர்ப்பணம் அளிக்கவும் அதனுடன் சேர்ந்து உங்களால் இயன்ற தான - தர்மங்களும் செய்தால் அனைத்து விதமான விஷங்களிலும் சாதகமான நிலை உண்டாக வழி பிறக்கும். மேலும் அன்றைய தினம் மாலையில் குல தெய்வ வழிபாடு மேற்கொள்ள இந்த நாள் இன்னமும் சிறப்பான நற்பலன்களை நிச்சயம் அளிக்கும். எனவே இந்த நாளன்று அனைவரும் தவறாது வழிப� -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdsdVV69fKedUMXaSQUm3ZHWJYrhvGhf2viwECMwk%2BzTpg%40mail.gmail.com.
