*< * *:
* *   *
*                      வைஷ்னவன் என்போன் யார்? *
*-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=- *
*                            (நாமக்கல் கவிஞர்) *
*                             பல்லவி *
*வைஷ்ணவன் என்போன் யாரெனக் கேட்பின் வகுப்பேன் அதனைக் கேட்பீரே!........(வை) *
**
*                              சரணங்கள் *
*பிறருடைய துன்பம் தனதென எண்ணும் *
*      பெருங் குணத்தவனே வைஷ்ணவனாம்*
*உறுதுயர் தீர்த்ததில் கர்வங்கொள்ளான்*
*      உண்மை வைஷ்னவன் அவனாகும்*
*உறவென மனிதர்கள் உலகுள யாரையும்*
*      வணங்குவன் உடல் மனம் சொல் இவற்றால்*
*அறமெனத் தூய்மை காப்பவன் வைஷ்ணவன்*
*     அவனைப் பெற்றவள் அருந்தவத்தாள்.........1*
**
*விருப்பும் வெறுப்பும் விலக்கிய நடுநிலை*
*      விளங்கிட ஆசைகள் விட்டவனாய்*
*ஒருப்புடன் அன்னிய மாதரைத் தாயென*
*      உணர்வான் வைஷ்ணவன் தன் நாவால்*
*உரைப்பதில் பொய்யிலன் ஒருபோதும் அவன்*
*      ஊரார் உடைமையைத் தொடமாட்டான்*
*வரைப்புள குணமிவை வகிப்பவன் எவனோ*
*    அவனே உண்மை வைஷ்ணவனாம்......2*
**
*மாயையும் மோகமும் அணுகாத வனாய்*
*      மனதினில் திடமுள வைராக்யன்*
*நாயகனாகிய ஸ்ரீ ராமன் திரு*
*      நாமம் கேட்டதும் மெய்ம்மறந்து*
*போயதில் பரவசம் அடைகிற அவனுடை*
*      பொன்னுடல் புண்ணிய தீர்த்தங்கள்*
*ஆயன யாவையும் அடக்கிய க்ஷேத்திரம்*
*      ஆகும் அவனே வைஷ்ணவனாம்....................3*
**
*கபடமும் லோபமும் இல்லாதவனாய்*
*      காம க்ரோதம் களைந்தவனாய்*
*தபசுடை அவனே வைஷ்ணவன் அவனைத்*
*      தரிசிப்பவரின் சந்ததிகள்*
*சுபமடைவார்கள் எழுபத்தோராம்*
*      தலைமுறை வரையில் சுகமுறுவர்*
*அபமறப் புனிதம் அடைகுவர் பிறப்பெனும்*
*     அலைகடல் நீநதிக் கரைசேர்வார்..................4*
*                                         (வை)*
**
*

வெ.சுப்பிரமணியன் ஓம்

*
**
அன்புடன் வெ.சுப்பிரமணியன் ஓம்.

  **
* *

Reply via email to