2011/3/9 ramanujam thiruvenktasamy <[email protected]>

>
>  [image: 
> PDF]<http://savukku.net/index.php?view=article&catid=10%3A2010-10-16-14-42-56&id=506%3A2011-03-09-02-56-53&format=pdf&option=com_content&Itemid=2>
>   [image:
> அச்சிடுக]<http://savukku.net/index.php?view=article&catid=10%3A2010-10-16-14-42-56&id=506%3A2011-03-09-02-56-53&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=2>
>   [image:
> மின்-அஞ்சல்]<http://savukku.net/index.php?option=com_mailto&tmpl=component&link=aHR0cDovL3NhdnVra3UubmV0L2luZGV4LnBocD9vcHRpb249Y29tX2NvbnRlbnQmdmlldz1hcnRpY2xlJmlkPTUwNiUzQTIwMTEtMDMtMDktMDItNTYtNTMmY2F0aWQ9MTAlM0EyMDEwLTEwLTE2LTE0LTQyLTU2Jkl0ZW1pZD0y>
>    புதன்கிழமை, 09 மார்ச் 2011
> இனி எந்தக் காரணத்துக்காகவும் இணைந்து செயல்படுவது சாத்தியமில்லை என்று நான்கு
> நாள்களுக்கு முன்பு பிரிந்த தி.மு.க.வுடனான காங்கிரஸ் உறவு இப்போது மீண்டும்
> சமரசமாகிக் "கை' கோத்திருக்கிறது. ""நியாயமில்லாத கோரிக்கைகளைக் காங்கிரஸ் முன்
> வைப்பதால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து விலகுவதாகவும், தங்களது ஆறு
> அமைச்சர்களும் மத்திய அமைச்சரவையிலிருந்து ராஜிநாமா செய்யப் போவதாகவும்
> அறிவித்த தி.மு.க. தலைமை, இப்போது காங்கிரஸ் முன் வைத்த கோரிக்கைகள்
> அனைத்தையும் ஏற்றுக் கொண்டு சமரசம் செய்து கொண்டிருப்பது, காங்கிரஸôர்
> மத்தியில் மகிழ்ச்சியையும், தி.மு.க.வினர் மத்தியில் எரிச்சலையும் ஏற்படுத்தி
> இருப்பதில் ஆச்சரியம் இல்லை.
>
>
> ""காங்கிரஸ்காரர்களை பூதக் கண்ணாடி வைத்துத்தான் தேடிப் பார்க்க வேண்டும்''
> என்று வெளிப்படையாகவே விமர்சித்த தி.மு.க.வைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினரான
> இ.ஏ.பி. சிவாஜியில் தொடங்கிப் பெருவாரியான தி.மு.க.வினர் காங்கிரஸ் கட்சி
> தங்களுக்கு ஒரு சுமை என்று கருதும் நிலையில், தி.மு.க. தலைமை எப்பாடுபட்டாவது
> காங்கிரஸ் உறவைத் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டது ஏன் என்பதுதான்
> பலருக்கும் புதிராக இருக்கிறது.
>
>
> ""கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகுவதற்குத் தொகுதிப் பிரச்னைதான் காரணமா?''
> என்று முதல்வரிடம் கேட்டதற்கு, "அதுவும் ஒரு காரணம்' என்று முதல்வர்
> பதிலளித்தது முதலே, காங்கிரஸ் - தி.மு.க. உறவில் விரிசல் விழுந்ததற்கான உண்மைக்
> காரணம், தொகுதிப் பிரச்னை அல்ல என்பதும், முதல்வரின் குடும்பம் சம்பந்தப்பட்ட
> விசாரணைதான் என்றும் தில்லி வட்டாரங்களில் பரவலாகவே பேசப்பட்டது.
>
>
> அமைச்சர்கள் ராஜிநாமா, ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்குப் பிரச்னைகள்
> அடிப்படையிலான ஆதரவு என்று தி.மு.க. அறிவித்தவுடன், காங்கிரஸ் தலைமை பயந்து
> போய் சமரசம் பேச சென்னைக்குத் தனது தூதுவரை அனுப்பும் என்று எதிர்பார்த்த
> தி.மு.க. தலைமைக்கு ஒரே அதிர்ச்சி. காங்கிரஸ் தலைமையிடமிருந்து எந்தவித
> சமிக்ஞையும் வரவில்லை என்பது மட்டுமல்ல, கிணற்றில் போட்ட கல்லாகப் பிரதமர்
> அலுவலகம் கூட இதைப் பற்றிக் கருத்து எதுவும் தெரிவிக்காமல் மெüனம்
> சாதித்துவிட்டது.
>
>
> தங்களது அறிவிப்பு வெளியானவுடன் பிரதமர் அலுவலகத்திலிருந்தோ, சோனியா
> காந்தியிடமிருந்தோ தொலைபேசி வரும் என்று காத்திருந்த முதல்வருக்கும், அவரது
> குடும்பத்தினருக்கும் பெருத்த ஏமாற்றம். வேறு வழியே இல்லாமல் மத்திய நிதித்
> துறை இணையமைச்சர் பழனிமாணிக்கம் மூலமாக, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியைத்
> தொடர்பு கொண்டு, ஏதாவது சமரசத்துக்கு வழி தேடும் முயற்சியில் ஈடுபட்டது
> தி.மு.க. தலைமை.
>
>
> இந்த நிலையில்தான், தங்களது குடும்பத் தொலைக்காட்சிச் சேனல்களின் நிருபர்கள்
> மூலம் பிரணாப் முகர்ஜியிடம் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி பற்றிக் கேள்வி
> எழுப்பப்பட்டு, அவரும் பிரச்னைக்குத் தீர்வு காணப்படும் என்று பதிலும்
> அளித்தார். பிரணாப் முகர்ஜியின் பதில், நீரில் மூழ்குபவனுக்கு நாணல் கிடைத்தது
> போலத் தி.மு.க. தலைமைக்குத் தெம்பை அளித்தது. அதற்குப் பிறகுதான் தி.மு.க.
> தலைமையிடம் காணப்பட்ட இறுக்கம் குறைந்தது என்று கூறப்படுகிறது.
>
>
> எந்தக் காரணம் கொண்டும் தி.மு.க. - காங்கிரஸ் உறவு துண்டிக்கப்பட்டு விடக்
> கூடாது என்பதில் மிகவும் முனைப்புக் காட்டியது மத்திய உர, ரசாயன அமைச்சர் மு.க.
> அழகிரியும், பா.ம.க.வைச் சேர்ந்த டாக்டர் அன்புமணி ராமதாஸூம்தான் என்கிறார்கள்
> விவரம் தெரிந்தவர்கள்.
>
>
> ""துணை முதல்வர் மு.க. ஸ்டாலினைப் பொறுத்தவரை, தங்களது குடும்பத்தைச்
> சூழ்ந்திருக்கும் "ஸ்பெக்ட்ரம்' மேகத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள
> மத்திய அரசின் ஆதரவும், அமைச்சர் பதவிகளும் தேவை என்கிற அளவில் மட்டும்தான்
> காங்கிரஸ் உறவைப் பார்க்கிறார். ஆனால் மு.க. அழகிரியின் பிரச்னை அதுமட்டுமல்ல.
> அ.தி.மு.க., தே.மு.தி.க.வுடனான கூட்டணி அமைத்தது முதலே, தென் மாவட்டங்களில்
> தி.மு.க. கூட்டணியின் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாகி விட்டிருக்கிறது.
> போதாக்குறைக்கு, நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியும் அ.தி.மு.க.
> அணியில் இடம்பெறுமானால், தி.மு.க. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி
> மாவட்டங்களில் காங்கிரஸ் இல்லாமல் போட்டியிடாமல் இருப்பதுதான் நல்லது என்கிற
> நிலைமை. அதனால்தான் அவர் எப்படியும் காங்கிரஸூடன் சமரசம் செய்து கொள்ள வேண்டும்
> என்று தலைமையை வற்புறுத்தினார்'' என்கிறார்கள்.
>
>
> காங்கிரûஸப் பகைத்துக் கொள்வதால் தேவையில்லாமல் பல ஊழல் குற்றச்சாட்டுகளில்
> சிக்கக் கூடும் என்கிற பயம் மு.க. அழகிரிக்கு இருப்பதாகக் கூறுகிறார்கள்.
> அதேபோல, டாக்டர் அன்புமணி ராமதாஸூம் கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற வேண்டும்
> என்பதில் குறியாக இருந்ததாகத் தெரிகிறது. அதனால்தான், அவர் சோனியா காந்தியை
> நேரில் சென்று சந்தித்தார் என்றும் கூறப்படுகிறது.
>
>
> சோனியா காந்தியுடனான சந்திப்பு தி.மு.க.வுக்கு மகிழ்ச்சியான ஒன்றாக
> அமையவில்லை. சோனியா காந்தி கேட்ட பல கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் தயாநிதி
> மாறனும், மு.க. அழகிரியும் தடுமாறியதாகக் கூறப்படுகிறது. தி.மு.க.வைக்
> கூட்டணியில் சேர்த்துக் கொண்டதால், காங்கிரஸூக்கு தேசிய அளவில் தர்ம சங்கடம்
> ஏற்பட்டிருப்பதாக சோனியா கடிந்து கொண்டதாகக் கூறுகிறார்கள்.
>
>
> ""வேடிக்கை என்னவென்றால், சமரசம் நடைபெறும்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்
> தலைவர் கே.வீ. தங்கபாலு தில்லியில் இருக்கவில்லை. அவர் சென்னை திரும்பி
> விட்டிருந்தார். சாதாரணமாக, இது போன்ற சமரசப் பேச்சுவார்த்தைகளில் தி.மு.க.
> சார்பில் அனுப்பப்படும் கனிமொழியும் தில்லியில் இருந்தும் சோனியாவை சந்திக்கச்
> செல்லவில்லை. தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டதற்கு முழுக்க
> முழுக்க மு.க. அழகிரியும், உள்துறை அமைச்சர் ப. சிதம்பரமும்தான் காரணம்''
> என்கிறார்கள் தில்லி பத்திரிகையாளர்கள்.
>
>
> சென்னையில் வீர வசனம் பேசிய தி.மு.க., தில்லியில் தலைகுனிந்தபடி காங்கிரஸ்
> போட்ட நிபந்தனைகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு சமரசம் செய்து கொண்டதற்குப்
> பின்னணி இருக்கிறது. 63 இடங்கள் கேட்பது நியாயமா என்று கேட்டு, அமைச்சர்கள்
> ராஜிநாமா செய்யப் போவதாக பயமுறுத்திய தி.மு.க. இப்போது அதே 63 இடங்களைக்
> காங்கிரஸூக்கு ஒதுக்கிக் "கை' குலுக்கிக் கொண்டதற்குக் காரணம் இருக்கிறது.
> ஆனால், காங்கிரஸ் ஏன் இதற்கு ஒத்துக் கொண்டது?
>
>
> ""தி.மு.க. கூட்டணியில் வெற்றி பெறப் போகும் தொகுதிகளை நாங்கள் தனியாகப்
> போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியும் என்பதுதான் இன்றைய நிலைமை. ஆனால்,
> நாங்கள் 234 தொகுதிகளில் தனியாகப் போட்டியிட்டு, அதிகபட்சம் 30 தொகுதிகளில்
> வெற்றி பெறுகிறோம் என்றே வைத்துக் கொள்வோம். ஏனைய 204 தொகுதிகளிலும் "டெபாசிட்'
> இழக்க நேரிடும். இப்போது 63 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு சில தொகுதிகளில்
> வெற்றி பெற்றாலும், மத்தியில் ஆளும் கட்சியான காங்கிரஸ் "டெபாசிட்' இழந்தது
> என்கிற அவமானம் ஏற்படாது''- இதுதான் காங்கிரஸ் தலைமை போட்ட ராஜதந்திரக் கணக்கு.
>
>
>
> தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 118 இடங்கள் வென்றாக வேண்டும். 121
> தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் தி.மு.க. 118 தொகுதிகளில் வெற்றி பெறுவது
> என்பது கனவிலும் நடக்காத ஒன்று. ஒருவேளை, ஏதோ காரணங்களால் தி.மு.க. அணி வெற்றி
> பெற்று ஆட்சி அமைக்குமேயானால் அது கூட்டணி ஆட்சியாகத்தான் இருக்க முடியும்.
>
>
> காங்கிரஸ் தான் கேட்ட 63 தொகுதிகளையும் பெற்றுக் கொண்டது. கூட்டணி ஆட்சி
> என்பதையும் உறுதி செய்துவிட்டது.
>
>
> ""என்ன சிக்கல் தீர்ந்ததா?'' என்று ஒரு மூத்த தி.மு.க. தலைவரிடம் கேட்டபோது
> அவர் தந்த பதில்- ""இல்லை. தி.மு.க. கூடாரத்தில் காங்கிரஸ் ஒட்டகம் மூக்கை
> நுழைத்திருக்கிறது. இனிமேல்தான் சிக்கலே தொடங்கப் போகிறது...'' என்று
> வருத்தத்துடன் சொன்னார். பெருவாரியான தி.மு.க. தொண்டர்களின் மனோநிலையும்
> அதுதான்!
>
>
>
> நன்றி தினமணி
>
>
> <http://savukku.net/index.php?option=com_content&view=article&id=506%3A2011-03-09-02-56-53&catid=10%3A2010-10-16-14-42-56&Itemid=2#>
>
>

Reply via email to