> > > *Subject:* அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! > அப்பாவும் அலைந்தார் அன்று பள்ளிக்காக மகனும் அலைந்தான் இன்று இல்லத்திற்காக > அவர் அலைச்சலில் அறிவு வளர்ந்தது இவன் அலைச்சலில் உறவு கலைந்தது > முகம் தெரியா கவிஞர் வர்ணித்தது தேடிப் படிக்கையில் மனம் வலித்தது அன்பன் > ஸ்ரீநிவாஸன் > * > * > *அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! > * > ** > * > * > *[image: Inline image 1] > > அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! > வசதியாகத்தான் இருக்கிறது மகனே… > நீ கொண்டு வந்து சேர்த்த > முதியோர் இல்லம் > பொறுப்பாய் என்னைஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ > வெளியேறிய போது, முன்பு நானும் > இது போல் உன்னை > வகுப்பறையில் விட்டு விட்டு > என் முதுகுக்குப் பின்னால் > நீ கதறக் கதறக் > கண்ணீரை மறைத்தபடி > புறப்பட்ட காட்சி > ஞாபகத்தில் எழுகிறது! > > முதல் தரமிக்க > இந்த இல்லத்தை > தேடித் திரிந்து > நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட > அன்று உனக்காக நானும் > பொருத்தமான பள்ளி > எதுவென்றே > ஓடி அலைந்ததை > ஒப்பீடு செய்கிறேன்! > > இதுவரையில் > ஒருமுறையேனும் > என் முகம் பார்க்க > நீ வராமல் போனாலும் > என் பராமரிப்பிற்கான > மாதத் தொகையை > மறக்காமல் > அனுப்பி வைப்பதற்காக > மனம் மகிழ்ச்சியடைகிறது > நீ விடுதியில் > தங்கிப் படித்த காலத்தில் > உன்னைப் பார்க்க வேண்டும் என்ற > ஆவல் இருந்தாலும் > படிப்பை நினைத்து > உன்னை சந்திக்க மறுத்ததன் > எதிர்வினையே இதுவென்று > இப்போது அறிகிறேன்! > > இளம் வயதினில் > நீ சிறுகச் சிறுக சேமித்த > அனுபவத்தை > என் முதுமைப் பருவத்தில் > மொத்தமாக எனக்கே > செலவு செய்கிறாய் > ஆயினும்… > உனக்கும் எனக்கும் > ஒரு சிறு வேறுபாடு > நான் கற்றுக்கொடுத்தேன் > உனக்கு… > வாழ்க்கை இதுதானென்று > நீ கற்றுக் கொடுக்கிறாய் > எனக்கு… > உறவுகள் இதுதானென்று! > > > -யாரோ !* > > > > **** >
--
* *
****
****
*V a n a k k a m S u b b u *
****
<http://groups.yahoo.com/group/sometimeonthenet/join>
**
*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
**வாழிய பாரதமணித் திருநாடு!
*<http://www.incredimail.com/?id=620786&did=10501&ppd=2743,201201221300,9,[TypeID],[IM_UPN2]&rui=115371018>
<<Parents_09.10.12.jpg>>
