👍 On Tue, 20 Sept 2022 at 12:56, subra manian <[email protected]> wrote:
> > > *சுதந்திரம் பறிபோன கதை தொடர்ச்சி(11)* > > > > > * சுதேச சமஸ்தானங்கள் ஆங்கில ஆதிக்கத்தில் வருதல்* > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > *காரன்வாலீஸ் பிரபுவுக்குப்பின்னர சர் ஜான் ஷோர் என்பவர் 1763-ஆம் ஆண்டு > கவர்ணர் ஜெனரல் பொறுப்பு ஏற்று பாரதத்திற்கு வந்தார். > இவர் பொறுப்பிலிருந்த காலத்தில் பாரதத்தின் உள்நாட்டு விவகாரங்களில் அதிகமாகத் > தலையிடாமல், பாரதத்தில் ஆங்கில ஆட்சி நின்று நிலைக்கும் நடவடிக்கை > மேற்கொண்டார். சர் ஜான் ஷோருக்குப் பிறகு 1793-ஆம் ஆண்டில் வெல்லஸ்லி பிரபு > என்பவர் கவர்னர் ஜெனரல் பதவி ஏற்றார். அ ந்தச் சமயத்தில் பாரத நாட்டில் > துண்டு துண்டாக ஆட்சி நடத்திவந்த சுதேச மன்னர்களுக்கு, கொஞ்சம் கொஞ்சமாக > விரிவடைந்து வரும் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் போக்கு அச்சத்தை > அளித்தது. ஆங்கிலேயர்களை பாரத நாட்டைவிட்டு > விரட்டியடிக்காவிட்டால் தங்களுடைய எதிர்கால வாழ்வு நிர்மூலமாகிவிடும் என்று > அவர்கள் பயந்தனர். ஆகவே, ஆங்கிலேயர்களை எதிர்த்துப் > போரிடுவதற்காகத் தங்களைப் பலப்படுத்திக் கொள்ள அவ்ரகள் திட்டமிட்டனர். > தங்களுக்கு உதவுமாறு பிரெஞ்சுக்காரர்களின் உதவியை நாடினர். > பிரெஞ்சுக்காரகளின் உதவியுடன் தங்கள் படைகளுக்கு மேல்நாட்டு முறைப்படி பயிற்சி > அளித்தனர். வெல்லஸ்லி பிரபு, சுதேச மன்னர்களின் மன நிலையை உணர்ந்தார். > முரட்டு நடவடிக்கைகள் மூலம் அவர்களைச் சமாளிக்க முற்படக்கூடா > தென்று முடிவெடுத்தார். தந்திரமாக அவர்களை வழிக்குக் கொண்டுவர மறைமுகத் > திட்டமொன்றை வகுத்தார். சுதேசி மன்னர்கள் தங்கள் ஆட்சிப் பொறுப்பை > நிறைவேற்றுவது தொடர்பாக கிழக்கிந்தியக் கம்பெனி எந்தவித குறுக்கீடும் > செய்யாது எனவும், அவர்கள் சுதந்திரமாக செயல்படலாம் என்றும் வெல்லஸ்லி பிரபு > சுதேச மன்னர்களுக்கு உறுதியளித்தார். தங்கள் சொந்த நாட்டின் பாதுகாப்புக்கு > என சுதேச மன்னர்கள் தத்தம் நாடுகளில் ஆங்கிலேய துணைப்படை > ஒன்றினை வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், அந்தப் படைகளுக்கான செலவை அந்த > அந்த நாடுகளே தரவேண்டும் என்றும் கெட்டுக்கொண்டார். படைகளுக்கான செலவைப் > பொருளாகக் கொடுக்க வசதியற்றவர்கள் அச்செலவுக்கு ஈடாக தங்கள் பிரதேசத்தில் ஒரு > பகுதியை ஆங்கிலேயக் கம்பெனிக்குக் கொடுத்துவிட வேண்டும். ஆங்கிலேயர் > அனுமதியில்லாமல் சுதேச மன்னர்கள் தமக்குள் உறவு வைத்துக் கொள்ளக்கூடாது. > ஆங்கிலேயர்கள் அல்லாத பிற ஐரோப்பியர் களுடனும் உறவு வைத்துக் > கொள்ளக்கூடாது. சுதேச மன்னர்களின் நாட்டை யாராவது தாக்கினால் ஆங்கிலக் > கம்பெனி அவ்ர்களுடைய உதவிக்குச் சென்று பாதுகாப்பளிக்கும். இந்தத் > திட்டங்களை ஏற்றுக்கொண்டால் சுதேச மன்னர்கள் நிம்மதியுடனும் பாதுகாப்புடனும் > வாழலாம் என வெல்லஸ்லிப் பிரபு அறிவித்தார். ஆங்கிலேயர்களின் திட்டத்தை > உடனடியாக ஹைதராபாத் நிஜாம் ஏற்றுக்கொண்டார். அவர் ஆங்கிலேயர்களின் > படைச் செலவுக்கென, கடப்பை, கர்நூல், அனந்தப்பூர் ஆகிய மாவட்டங்களை அளித்தார். > ‘கொடையாக அந்த மாவட்டங்களை அளிக்கப்பட்டதால் அவை கொடை மாவட்டங்கள் என்று > அழைக்கப்பட்டன. அயோத்தி நவாபும் ஆங்கிலேயரின் திட்டத்தை ஏற்றுக்கொண்டார். > அவர் படைச் செலவுக்கென ஆங்கிலேயர்களுக்கு கங்கை யமுனை பிரதேசங்களை அளித்தார். > பீஷ்வா, கெய்க்வார் ஆகிய மன்னர்களும் அந்தத் திட்டத்திற்கு ,ஒப்புதல் > அளித்தனர். ஆனால், திப்பு சுல்தானும் மற்ற மராத்தியத் தலைவர்களும் > வெல்லஸ்லியின் திட்டத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். ஆகவே, > வெல்லஸ்லி பிரபு திப்பு சுல்தானை ஒடுக்கிப் போடத் திட்டமிட்டாடார். 1799-ஆம் > ஆண்டு தனது படைகளுடன் திப்பு சுல்தானை ஸ்ரீரங்கப் பட்டனத்தில் எதிர்த்தார். > அந்தப் போர் திப்பு சுல்தானுடன் ஆங்கிலேயர்கள் நடத்திய நான்காவது போர் > ஆகும். திப்பு சுல்தான் வெள்ளையரை எதிர்த்துப் போர்புரிந்து போர் > களத்திலேயே வீர மரணம் அடைந்தார். திப்பு சுல்தான் வீர சுவர்க்கம் அடைந்த > பிறகு, மைசூர் ராஜ்ஜியத்தின் பெரும் பகுதியை ஆங்கிலேயர்கள் தன் வசப் > படுத்திக்கொண்டனர். ஒரு கணிசமான பகுதியை ஹைதராபாத் நிஜாம் > மேற்கொண்டுவிட்டார். இவ்வாறாக, தன்மானத்துடன் ஆங்கில ஏகாதி பத்தியவாதிகளை > எதிர்த்த ஒரு மாவீரனின் நாடு சின்னா பின்னமாக்கப்பட்டுவிட்டது. * > > -- > You received this message because you are subscribed to the Google Groups > "Thatha_Patty" group. > To unsubscribe from this group and stop receiving emails from it, send an > email to [email protected]. > To view this discussion on the web visit > https://groups.google.com/d/msgid/thatha_patty/368566205.201034.1663658784875%40mail.yahoo.com > <https://groups.google.com/d/msgid/thatha_patty/368566205.201034.1663658784875%40mail.yahoo.com?utm_medium=email&utm_source=footer> > . > -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZorahfVKVT4NWeEO-qNoM_zB%3Db_K%2BU9rFhg8Fn_XD9aMFw%40mail.gmail.com.
