I like all kinds of poems especially the Kamban and valluvan tamil
sangakala poems, words worth Gibron, Pope etc etc
Priyadarsanin ekkapermuchin velippadu was wonderful; the expressions of his
emotional impacts of past forced me to release his poem without his
permission as recd to all who may similarly like as well as did half
justice in translation. Towards the end I did thank him too Nandri KR IRS
4323
 Kalamenum kalam TIME defined by TIME By Indra Priyadarsani

சட்டத்துள் இருந்தது தான் என் குட்டிக்காலம்

வட்டத்துள் இல்லாத அது ஒரு கனாக்காலம்

தட்ட முடியாத அன்பு நிறைந்த

அற்புதக் காலம்

கட்ட முடியாத சிறகுகள் மலிந்த

கற்பனைக் காலம்



பள்ளியும் படிப்பும் பிரம்பும் மிக மிரட்டிய காலம்

துள்ளி விளையாடிய தருணங்கள்

நிறைந்த காலம்

தள்ளி இரு என்றே அண்ட விடாத

ஆசாரக் காலம்

புள்ளியிட்ட கோலம் புதுக்காவி தினமிட்ட காலம்



நயம்பட பேசாமல் நறுக்கென்று

பேசிய காலம்

பயல்களுக்கு சளைக்காமல் பட்டம் விட்ட காலம்

மயங்காத மனிதரும் மயங்கும்

ஐஸ்புரூட் காலம்

தயங்காமல் கேள்வி கேட்ட துணிவுக் காலம்



எப்படி மயிலறகு குட்டி போடும் என வியந்த காலம்

தப்படி எடுத்து வைக்க இருளில்

அஞ்சிய காலம்

சொற்படி கேட்காமல் நற்பிரம்படி

பட்ட காலம்

விதிப்படி நடக்கும் என்பதறியா

உன்னதக்  காலம்



பாட்டும் கூத்துமாய் பொழுதுகள்

போன காலம்

நோட்டுப் புத்தக சுமையில் முதுகு

வளைந்த காலம்

எட்டும் கிளை வரை ஏறிப் பழம்

பறித்த காலம்

காட்டு என்றவுடன் மனதைக் காட்டிய காலம்



கண்ணை மூடித் தொழக் கவலை

மறந்த காலம்

பண்ணை இசையுடன் பாட மனம்

இனித்த காலம்

மண்ணை கணபதியாய் மனம்

போற்றிய காலம்

பெண்ணை ஏளனம்  செய்தால்

பொறுக்காத காலம்



நட்பில் நன்மையும் அன்பும் மட்டும்

கண்ட காலம்

கற்பதெல்லாம் மிகச் சுமை என்று

கருதிய காலம்

எட்பு நாசியுடன் எழிலான பருவம்

திளங்கிய காலம்

தப்பில்லா மனிதர் பலரும் சூழ

மகிழ்ந்த காலம்



மழையில் கப்பல் விட்டு அதோடு

கரைந்த காலம்

தாழை மலரில் சடையுடன் முடியும்

நீண்ட காலம்

ஏழை எளியவர் என எவரையும்

உணராத காலம்

ஊழையும் உட்பக்கம் காணத் துணிந்த  காலம்



பஞ்சு மிட்டாய் உதட்டு வண்ணம்

போட்ட காலம்

மஞ்சும் மழையும் மனதை வசீகரித்த காலம்

நஞ்சு உணவில் என்பதில்லா

நல்ல காலம்

வஞ்சம் என்பதன்றொறியா ஒரு வசந்த  காலம்



வானவில்லின் வர்ணக் கலவை

மயக்கிய காலம்

கான மயிலின் தோகை வர்ணம்

மனதை இழுத்த காலம்

ஞானியர் யாரென அம்மா இலேசாக சொன்ன காலம்

மோனத் தவமும் முழுமுதலும் பெரிதாய்ப் புரியாக் காலம்



போன காலம் மீண்டு திரும்பி வருமா தெரியலியே

காணாமல் மறைந்த மனிதர் வருவாரா தெரியலியே

மாணாத் துக்கம் நெஞ்சடைக்கும்

ஏனோ புரியலியே

வாணாள்  இன்னும் எத்தனை வச்சான் தெரியலியே

More or less non tamil may understand

My childhood was within the conditioned-law

It was a  Dreamy-kalam that was not in the circle

Full of unviable love

Wonderful time

The wings that cannot be tied are rotten

Fantasy period



School and studies teacher’ beatings were very scary times

Moments of play Full time

Always asked to  you to stay away  achara time

Dotted Kolam Pudukavi Day time



Curt answering time

Competed along with the grown up in kiting

A person who is not infatuated will also be infatuated Icebrut period

It was time to have the courage to ask questions without hesitation



It's time of exciting wonder how peacocks feather in the book  hatch

In the dark to take away step, in the period of dread

Disobedience was rewarded with the slaps and beatings time

Fate was disbelieved utterely,  Great time



Singing all  along time which was a past time

Notebooks on the Back making back a curve Curved period

Climbing trees and eating fruit periods

Time to reveal your mind as soon as you are asked to show



Without Worry to close the eyes and pray A forgotten era

A mind to sing along in  farm music,  Sweet time

Sand was the pillayaar imaginery times

If you mock a woman anger burst,A period of impatience

Only goodness and love in friendship period of time

Learning is a burden considered period

The season is bright with edbu nasi Brilliant time

Surrounded by many good  people who cannot escape A happy time



Making  the ship in the rain floated period

Finished with a plait in a bay leaf A long time

No distinction of poverty A period of insensibility

It was a time when anything was defied from within  dare time



Cotton candy lip stick colorworn  Time spent

It was a time when the rain and snow enchanted the mind

Poison was not the food, Good time

A spring without deception



The color combination of the rainbow Enchanted time

The dogai color of Kana Mayil Mind-blowing time

The time when mother said lightly who saints were

Ignorant of meditation and Brahmam but a pleasant time

I don't know if the past will come back

I don't know if the missing person will come back

Periods of grief will be heart-breaking

I don't understand anything of the future

I don't know how many more life is left out

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

KR     Time is unknown, Time is well known

Time is precious, Time is unprecedented

Time is Brahmam, time is unmoving

We all move according to the time

Time is cyclic time will never know when started

Time is man’s comprehension

Time is beyond the Physics and time.

Time is standstill when light becomes dark

காலம் என்ப அறியாதது; காலம் என்ப நன்கு புரிந்தது;

காலம் என்ப பொன்னின் நிகர்; காலம் என்ப தெளிவில்லாதது;

காலம் என்ப பரம்பொருள்; காலம் என்ப நிலைத்து நிற்பது;

நாம் காலத்தின் கையில் அதன் போக்கில் சித்தன் மனம்;

காலம் சுழலும் காலம்; தோன்றின காலம் காலறியாக்காலம்;

காலம் ஒவ்வொருவரின் மனக்கணக்கு ;,வித வித காலம் ;

காலத்தைக் காலமாற்றிய பௌதிகம்  ;

காலம் நகர்வதில்லை ஒளியின் நிறம் மங்கினால். ;

ப்ரியதர்சனி காலம் கூர்ந்து ரசித்த காலம்;

வியந்தேன் அதன் கோலவடிவம் கண்டு நன்றி.

KR IRS 4523

On Wed, 3 May 2023 at 18:32, Rangarajan T.N.C. <[email protected]>
wrote:

> Wonderful playback
>
> On Wednesday, 3 May, 2023 at 06:59:40 pm IST, indirapriyadarsini m <
> [email protected]> wrote:
>
>
> சட்டத்துள் இருந்தது தான் என் குட்டிக்காலம்
> வட்டத்துள் இல்லாத அது ஒரு கனாக்காலம்
> தட்ட முடியாத அன்பு நிறைந்த
> அற்புதக் காலம்
> கட்ட முடியாத சிறகுகள் மலிந்த
> கற்பனைக் காலம்
>
> பள்ளியும் படிப்பும் பிரம்பும் மிக மிரட்டிய காலம்
> துள்ளி விளையாடிய தருணங்கள்
> நிறைந்த காலம்
> தள்ளி இரு என்றே அண்ட விடாத
> ஆசாரக் காலம்
> புள்ளியிட்ட கோலம் புதுக்காவி தினமிட்ட காலம்
>
> நயம்பட பேசாமல் நறுக்கென்று
> பேசிய காலம்
> பயல்களுக்கு சளைக்காமல் பட்டம் விட்ட காலம்
> மயங்காத மனிதரும் மயங்கும்
> ஐஸ்புரூட் காலம்
> தயங்காமல் கேள்வி கேட்ட துணிவுக் காலம்
>
> எப்படி மயிலறகு குட்டி போடும் என வியந்த காலம்
> தப்படி எடுத்து வைக்க இருளில்
> அஞ்சிய காலம்
> சொற்படி கேட்காமல் நற்பிரம்படி
> பட்ட காலம்
> விதிப்படி நடக்கும் என்பதறியா
> உன்னதக்  காலம்
>
> பாட்டும் கூத்துமாய் பொழுதுகள்
> போன காலம்
> நோட்டுப் புத்தக சுமையில் முதுகு
> வளைந்த காலம்
> எட்டும் கிளை வரை ஏறிப் பழம்
> பறித்த காலம்
> காட்டு என்றவுடன் மனதைக் காட்டிய காலம்
>
> கண்ணை மூடித் தொழக் கவலை
> மறந்த காலம்
> பண்ணை இசையுடன் பாட மனம்
> இனித்த காலம்
> மண்ணை கணபதியாய் மனம்
> போற்றிய காலம்
> பெண்ணை ஏளனம்  செய்தால்
> பொறுக்காத காலம்
>
> நட்பில் நன்மையும் அன்பும் மட்டும்
> கண்ட காலம்
> கற்பதெல்லாம் மிகச் சுமை என்று
> கருதிய காலம்
> எட்பு நாசியுடன் எழிலான பருவம்
> திளங்கிய காலம்
> தப்பில்லா மனிதர் பலரும் சூழ
> மகிழ்ந்த காலம்
>
> மழையில் கப்பல் விட்டு அதோடு
> கரைந்த காலம்
> தாழை மலரில் சடையுடன் முடியும்
> நீண்ட காலம்
> ஏழை எளியவர் என எவரையும்
> உணராத காலம்
> ஊழையும் உட்பக்கம் காணத் துணிந்த  காலம்
>
> பஞ்சு மிட்டாய் உதட்டு வண்ணம்
> போட்ட காலம்
> மஞ்சும் மழையும் மனதை வசீகரித்த காலம்
> நஞ்சு உணவில் என்பதில்லா
> நல்ல காலம்
> வஞ்சம் என்பதன்றொறியா ஒரு வசந்த  காலம்
>
> வானவில்லின் வர்ணக் கலவை
> மயக்கிய காலம்
> கான மயிலின் தோகை வர்ணம்
> மனதை இழுத்த காலம்
> ஞானியர் யாரென அம்மா இலேசாக சொன்ன காலம்
> மோனத் தவமும் முழுமுதலும் பெரிதாய்ப் புரியாக் காலம்
>
> போன காலம் மீண்டு திரும்பி வருமா தெரியலியே
> காணாமல் மறைந்த மனிதர் வருவாரா தெரியலியே
> மாணாத் துக்கம் நெஞ்சடைக்கும்
> ஏனோ புரியலியே
> வாணாள்  இன்னும் எத்தனை வச்சான் தெரியலியே
>
>
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZorB2XN3Rm_qPce%2B8HdsdircOXKn-f_7eNhvffCbDzs_7w%40mail.gmail.com.

Reply via email to