*(திருவல்லிக்கேணி பெண்பிள்ளை ரகசியம்..)*

 *பத்மா கோபால்*

*இத்தனை நேரமாகக் காலக்ஷேபம், உபன்யாசம் என்று இடைவெளி இல்லாமல் செய்து*

*கொண்டிருந்ததில், மணவாள மாமுனிகள் ரொம்பவும் ஆயாசமாக உணர்ந்தார்...*

*சிறிது நாட்களாகவே அவரது உடல் சோர்வு அவரை ரொம்பவும் படுத்தி எடுத்தது...*

*இருந்தும் எதையும் பொருட்படுத்தாமல் "வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்
பசுவாய்" *

*சிஷ்யகோடிகளுக்குத் தாம் அறிந்ததை எல்லாம் சொல்லித் தந்து விட வேண்டும் என்று
தமது *

*சக்திக்கு மீறிக் கடும் முயற்சி செய்ததால், அவரறியாமலேயே அவரது தேகம் ஓய்வை
நாடியது..*

*சிஷ்ய கோடிகள் இப்போதைக்கு வரமாட்டார்கள்..*

*உணவு உண்ட பின்னர், அவர்கள் கற்றுக் கொண்டதை எல்லாம் பயிற்சி (அப்பியாசம்)
செய்தாக *

*வேண்டும்..*

*இதற்கு மேல் மாலையில் தான் மறுபடி உபன்யாசம் என்பதால், அருகிலிருந்த தூணில்,
சற்று *

*தலை **சாய்ந்தார்..*

*சிறிது நேரம்தான் சென்றிருக்கும்..*

*வாசலருகே ஏதோ சிறு அரவம்...*

* நிழல் ஆடவும், யாரோ வந்திருப்பதை உணர்ந்தார்...*

*"யாரப்பா அங்க நிக்கறது?.. உள்ள வாயேன்!.."*

*.....மாமுனிகள் ஆதாரத்தோடு குரல் கொடுத்தார்..*

*அவரே சற்றும் எதிர்பாராத வண்ணம் உள்ளே நுழைந்தாள் ஒரு  பெண்மணி...*

*வந்த வேகத்திலேயே மாமுனிகளின் பாதங்களில் விழுந்து வணங்கினாள்..*

*நிமிர்ந்து எழுந்தவளின் கண்களில் நீர் திரையிட்டிருந்தது...*

*"இவள் யாருன்னு தெரியலையே.." என்ற நினைவோடு, மாமுனிகள் அவளைச் சற்று உற்று *

*நோக்கினார்..*

*வந்தவளுக்குச் சுமார் அறுபது வயதிருக்கும்..*

*ஒடிசலான தேகம்..*

*ஆனால் தீக்ஷண்யமான (கண் பார்வையின் கூர்மை · உக்கிரம்) கண்கள்..*

*அந்தக் கண்களில் இருந்த பிரகாசம் (ஒளி), *

*"இவள் விஷய ஞானம் உள்ளவள்!.." என்பதைச் சந்தேகத்துக்கிடமில்லாமல் கூறியது..*

*"யாரம்மா நீ?.. உனக்கு என்ன வேணும்?.."*

*.....ஆதரவாய் மாமுனிகள் கேட்டதும் தான் தாமதம்..*

*...அந்தப் பெண், மாமுனிகளை வினயத்துடன் கைகூப்பித் தொழுதாள்..*

*"தேவரீருக்குக் கைங்கர்யம் செய்யற பாக்யத்தை இந்த அடியாளுக்குத் *

*தந்தருளணும்.."*

*"கை...ங்....கர்....யமா?... *

*....நீ யாரு மா?*

*உன்னோட ஊர் எது?.. *

*பேர் என்ன?..*

*உன்னோட பந்துக்கள்லாம் எங்க இருக்கா?.."*

*"ஸ்வாமி... அடியேன் திருவல்லிக்கேணியில பிறந்து வளர்ந்தவள்..*

*தற்சமயம் எனக்கு பிதா, மாதா, ஸகானு எல்லாமா இருக்கறவன் அந்தப் பார்த்தசாரதி
தான்!.."*

*....இதைக் கேட்டதும் பெரிய ஜீயருக்கு (மாமுனிகள்) முகத்தில் இலேசாகப் புன்னகை
அரும்பியது...*

*"இருக்கட்டும் மா!.. ரொம்ப நல்ல விஷயம்தான்!..*


*ஆனா... அந்தத் திருவல்லிக்கேணி திவ்யதேசம்...*

*...கோவில் (ஸ்ரீரங்கம்), திருமலை (திருப்பதி), பெருமாள் கோவில்
(பார்த்தசாரதி)  *

*எம்பெருமான்கள் **மூணு பேருமே உவப்போடு வந்து **அருளும் திவ்யதேசமாச்சே!..*

*அது தானே ஜகத்துக்கே ஆச்சாரியரான நம்ம இராமானுஜரோட திருவவதாரத்துக்கு
வித்திட்ட திவ்ய *

*தேசம்!..*

*"ஒப்பாரில்லாத மாதர்கள் வாழும் திருவல்லிக்கேணி" னு ஆழ்வார்
கூடக் கொண்டாடியிருக்கற *

*திவ்யதேசமாச்சே அது!..*

*அங்க...*

*ஒருவர் இருக்கற எடத்துல, பலர் இருந்தாவது அந்த எம்பெருமானை மங்களாசாஸனம் *

*பண்ணணும்... *

*அதுதான் பெரும் பேறுன்னு சொல்வாளே!..*

*நீ அத விட்டுட்டு, இங்க வந்து நிக்கறியே!.."*

*.....மாமுனிகளின் கேள்விக்குப் பதில் சொல்ல, இப்பொழுது அம்மாதரசி மெல்ல வாய்
திறந்தாள்...*

*"ஸ்வாமி!.. க்ஷமிக்கணும்...*

*அந்த எம்பெருமானுக்குக் கைங்கர்யம் பண்றவாளுக்கு நடுவே வாழுற தகுதியும்
அடியேனுக்கு *

*இருக்கா?..*

*குணபூர்த்தி இருக்கும் அவா எல்லரும், அடியேனைப் போல ஒரு தகுதியும் இல்லாதவாள *

*சேர்த்துப்பாளா?..*

*தேவரீர் உலாவும் பெருமாள்!..*

*அதனால அடியேனோட குணக் கேடுகள் எல்லாம் பெரிது படுத்த மாட்டேள்!..*

*தேவரீர் திருவடி சம்பந்தத்துனால அடியேன் நிச்சயம் பாவனமாயிடுவேன்!..*

*அதனால தான் தேவரீர் கிட்ட கைங்கர்யத்தப் ப்ரார்த்திச்சுண்டு வந்து
நிக்கறேன்...*

*அத்தோட இல்லாம, தேவரீர் திருவடிக் கீழ வாழ்வுக்கு ஏது குறை?.."*

*அந்தப் பெண்மணி பேசிய விதத்திலிருந்தே, அவளது பாண்டித்யத்தையும் பண்பையும்
பெரிய *

*ஜீயரால் ஊகிக்க முடிந்தது..*



*அதனால், அவளைச் சமாதானப்படுத்தும் விதமாக, "சொல்லும்மா!.. ஒனக்குத் தகுதி
இல்லைனு நீ ஏன் நெனைக்கற?.. அந்தப் பார்த்தசாரதியோட *

*க்ருபை ஒனக்கு இல்லைனு யார் சொன்னா?.." என்று வினவினார்..*

*வார்த்தைகள் தழுதழுத்தன வந்தவளுக்கு....*

*...ஸ்வாமி!..அவனோட ப்ரேமைக்கு அடியேன்மட்டும் பாத்திரமாயிருந்தா
ஸ்வப்னத்துலயாவது *

*அடியேனக் கடாக்ஷித்திருப்பானே!.*.

*(வளரும்..)*

<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>



*Selections from Upanyasams Part 52 Thiruvallikeni PeN Rahasyam 2 by
VeLukkudi Sri Krishnan - YouTube
<https://www.youtube.com/watch?v=mfmBC5lsSe0&t=34s>*

*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*

*வணக்கம்* *சுப்பு*

 *Vanakkam Subbu*

 [image:
zGgbcCHwTas05D3TEGRzfeJitXMuFdleP8uz97cCm3eLcDguXidhEufGaerGn9hH.gif]

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAPC%3Dj%2Boh1jXzBmnbEJZpJN79V0DzRc%3Dg_p%2B7UObuScHgakhOqA%40mail.gmail.com.

Reply via email to