ENDRU THANIYUM IN THE SUDAANTHIRA DHAGAM?  KR IRS 16325

On Sat, 15 Mar 2025 at 21:26, Narayanaswamy Sekar <[email protected]>
wrote:

>
> ---------- Forwarded message ---------
> From: N Sekar <[email protected]>
> Date: Sat, Mar 15, 2025, 7:29 PM
> Subject: Fwd - Silent heroes, God Bless these people
> To: Kerala Iyer <[email protected]>, Rangarajan T.N.C. <
> [email protected]>, Narayanaswamy Sekar <[email protected]>,
> Chittanandam V. R. <[email protected]>, Mathangi K. Kumar <
> [email protected]>, Srinivasan Sridharan <[email protected]>,
> Suryanarayana Ambadipudi <[email protected]>, Rama (Iyer 123 Group)
> <[email protected]>, Dr Sundar <[email protected]>, Mani APS <
> [email protected]>
>
>
> *465 நாட்கள் ✈️ HFN கதை 🌍 குழுவினரோடு.*
>
>
> ♥️ *கதை-406*♥️
>
> *“வாழ்க்கையில், நாம் வெற்றி மற்றும் தோல்வி என்கிற விளையாட்டில்,  பரபரப்பாக
> இருக்கிறோம்.    ஒரு கணம் இடை நிறுத்தம் செய்து,,, நினைத்துப் பார்க்கலாம்;
> உண்மையிலேயே நாம் வெற்றி பெற்று  இருக்கின்றோமா அல்லது நமது வெற்றியை இழந்து
> இருக்கின்றோமா?*
>
>
> *யார் வெற்றி பெற்றார்?*
>
>
> மாவட்டக் கல்வி அதிகாரியான பிறகு, நான்  ஒன்றைத் தெரிந்து கொண்டேன்; அதாவது
> இந்த மாவட்டம்  கல்வியில் மிகவும் பின் தங்கிய  நிலையில் இருக்கின்றது;  உயர்
> அதிகாரிகளும்  கூட என்னிடம் தெரிவித்தார்கள்;   நான் கிராமப் புறப்
> பகுதிகளில்  சற்று கூடுதலாக சிறப்புக் கவனம்  செலுத்தியாக வேண்டும்,
> என்பதையும்  வலியுறுத்திச் சொன்னார்கள்.
>
> ஆகவே, நான் ஒரு மாதத்தில் 8 முதல் 10 நாட்களுக்கு, கண்டிப்பாக கிராமப் புற
> பள்ளிகளைச் சென்று கவனித்தாக வேண்டும், என்று  நான் முடிவு செய்தேன்.
>
> விரைவிலேயே,  கிராமப் புறங்களுக்கு பல் வேறு கட்ட தொடர் பயணம் ஆரம்பிக்கப்
> பட்டது. அங்கே சில மலைப் பிரதேசங்களும்,  காடுகளும் அடந்த  பகுதியும் கூட
> அவற்றில் சேர்ந்து இருந்தன.
>
> ஒரு நாள், கீழ் நிலை ஊழியர் ஒருவர் என்னிடம்  கூறினார்; படேரி என்று
> அழைக்கப்படும்  கிராமம் அது! அது ஒரு குன்றில்  மேல் இருக்கின்றது! எந்த ஒரு
> கல்வி அதிகாரியும், இது காறும் அந்த பள்ளிக்கு சென்று பார்த்தது இல்லை. காரணம்
> என்னவெனில்,  அங்கே போவதற்கு, 2  அல்லது 3 கி.மீ.  தூரம் மரங்கள் அடர்ந்த,
> காட்டு சாலை வழியாக,  அதுவும் கால் நடையாக உள்ள பயணம் மேற்கொண்டாக வேண்டும்.
>
> அடுத்த நாளே,  நான் அங்கே போக வேண்டும் என்று தீர்மானித்தேன். யாரோ திரு.
> பி.கே. வியாஸ் என்பவர் அங்கே தலைமை ஆசிரியராக   இருக்கிறார். அவர் சில
> காரணங்களுக்காக அவர் அங்கேயே சிக்கி கொண்டு  விட்டார்.  எந்தவிதமான
> முன்னறிவிப்பு  தகவல் எதுவும்,  அவருக்குக் கொடுக்க வேண்டாம் என்று  சொல்லி
> விட்டேன். இது ஒரு எதிர்பாராத  வருகையாக இருக்கட்டும்.
>
> அடுத்த நாள்  காலை, நாங்கள் கிளம்பினோம். பிற்பகல் 12  மணிக்கு அந்த டிரைவர்
> கூறினார்; “சார்,   இங்கே இருந்து அந்த இடம்  செல்ல நீங்கள்  2 அல்லது 3 கிமீ
> தூரம் காலால் நடந்தாக வேண்டும்”
>
> நாங்களும்  மற்றும் இரண்டு ஊழியர்களும்   நடக்கத் தொடங்கினோம்.    நாங்கள்,
> பாறைகள்,  காடுகள் நிறைந்த, ஒடுங்கிய  சாலைகள் வழியாக ஒன்றரை மணி  நேரம்
> நடந்து மலை உச்சியில்  இருக்கும், அந்த கிராமத்தை அடைந்தோம்.
>
> நல்ல தரமான கட்டமைப்பு  உள்ள நிலையான  கட்டிடம்; அதில் பள்ளி இருந்தது.
>  நிரந்தரமாக கட்டப் படாத நிலையில் உள்ள  குடிசை வீடுகள் இருந்தன. அந்த பள்ளிக்
> கூடம்  சுத்தமாகவும், மேலும்  நேர்த்தியான முறையில்  அழகாக வண்ணம்
> பூசப்பட்டும்  இருந்தது. அங்கே மூன்று  அறைகளும், மேலும் விசாலமான
> வராண்டாவும் கூட இருந்தன.
>
> நாங்கள் உள்ளே நுழைந்த போது, 125  குழந்தைகள்  மூன்று வகுப்புக்களில்
> தங்களுடைய படிப்பில் மூழ்கி  இருந்தார்கள். எனினும், அங்கே ஆசிரியர் யாரும்
> பிரசன்னமாக  இல்லை. வராண்டாவில்  இருந்த வயதான  நல்ல மனிதர்,  அனேகமாக அங்கே
> பியூனாக  வேலை பார்க்கின்ற நபராக இருக்கலாம்.
>
> அவர் கூறினார், “விரைவில், தலைமை ஆசிரியர், வந்து  விடுவார், சார்.”
>
> நாங்கள் அந்த  முகப்பில் அமர்ந்து இருந்தோம்.  விரைவில் 42 வயதான ஒரு நல்ல
> மனிதர் மேலிருந்து,   இரண்டு கைகளில், 2 பக்கெட்  தண்ணீரோடு  நடந்து , வந்து
> கொண்டு இருந்தார்.   முட்டு வரைக்கும் தொங்கிய பைஜாமாவும்,  மேலே காதி
> குர்தாவும், அவரது  ஆடையாக இருந்தது.
>
> அவர் வந்தவுடனேயே,  அவராகவே, தன்னைப் பற்றி  அறிமுகம் செய்து கொண்டார், நான்
> தான், பிரசாந்த் வியாஷ்,  தலைமை ஆசிரியராக  இங்கே இருக்கிறேன்.  சாலைக்கு கீழே
> இருக்கும்  கிணற்றில்  இருந்து  குழந்தைகளுக்கான தண்ணீரை நாங்கள் எல்லா
> நாட்களிலும்,  கொண்டு வந்தாக  வேண்டும். இங்கே இருக்கும்,  நமது பியூனுக்கு
> வயதாகி விட்டது.   அவரால்  இப்பொழுது இதனைச் செய்திட இயலாது.   ஆகவே நானே
> இதைக் கொண்டு  வருகின்றேன்; இது ஒரு நல்ல  உடற்பயிற்சியாகவும்  கூட
> இருக்கிறது.”   அவர் புன்முறுவல்  சிந்தினார்.
>
> அவருடைய முகமும், அந்த  பெயரும் கூட அந்த  அதிகாரிக்கு பரிச்சயம் ஆனது  போல
> தோன்றியது.
>
> நான்  அவரைப்பற்றிய பார்த்துக் கொண்டு கேட்டேன்,“ நீங்கள் பிரசாந்த்
> வியாஸ்,   இந்தூரில் குஜராத்திக் கல்லூரியில்   இருந்துதானே!”
>
> நான்  என்னுடைய தொப்பியை  அகற்றி விட்டேன்.    என்னை அடையாளம்  கண்டு,அவர்
> ஆச்சரியத்தோடு  கூறினார், நீங்கள்,  “அபினவ், அபினவ் ஸ்ரீ  வஸ்தா!” “நான்
> கூறினேன்.  “வேறு  யாராக இருக்க முடியும்  சகோதரரே!”
>
> சரியாக, 20 வருடங்களுக்கு முன்பாக, இந்தூரில்  தட்என்  கல்லூரி படிப்பில்,
> நாங்கள் இருவரும் சேர்ந்து  படித்தோம். அவன்  மிகவும் புத்திசாலி. மேலும்
> அறிவாளி எவ்வளவோ சிறப்பாக முயற்சிகள்  மேற்கொண்ட போதிலும், நான்  எப்போதாவது
> மிக  அரிதாகத்தான், அவரைக் காட்டிலும், அதிகமான மதிப்பெண்கள்,  வாங்குவேன்.
> எங்களிடையே, எப்போதும்  போட்டிகள், அங்கே இருந்து  கொண்டே இருக்கும்!
> அவர்தான், எப்போதும்  வெற்றி  அடைபவராக இருப்பார்.
>
> இன்றைக்கு  அவர் ஒரு தலைமை  ஆசிரியர்.  ஆனால், நானோ, ஒரு மாவட்டக் கல்வி
> அதிகாரி. ன முதன்  முதலாக  நான்  சிறப்பாக இருக்கின்றேன்,  என்ற உணர்வு  வந்து
> விட்டது. உண்மையைச் சொன்னால்,  வெற்றி அடைந்து விட்டோம், என்கிற உணர்வு மேலிட,
> அங்கே எனக்குக் கொஞ்சம்   மகிழ்ச்சி இருக்கிறது.
>
> நான்  சந்தோஷமாகக் கேட்டேன், “நீங்கள், எப்படி இங்கே இருக்கிறீர்கள்?
> வீட்டில் யார் யார் இருக்கிறார்கள்?”
>
> அவர் விவரிக்கத் தொடங்கினார், நான் எம்.காம்.  படித்துக் கொண்டு  இருந்த
> பொழுது,  அப்பாவுக்கு, மால்வா மில் வேலை  இல்லாமல் போய் விட்டது.    அப்போது,
> அவருக்கு, ஆஸ்த்மா  நோயும் சேர்ந்தே இருந்தது. குடும்பத்தை  நடத்துவது என்பதே,
> கஷ்டமாகி போய் விட்டது.   எப்படியோ,நான் என்னுடைய படிப்பை நிறைவு செய்தேன்.
> மேலும் நான்  நல்ல மதிப்பெண்கள்  பெற்று. இருந்ததால்,  ஒரு  ஒப்பந்த
> ஆசிரியராக  நியமனம் ஆனேன்.   இதனை விட்டு விட்டு, என்னால் போக முடியவில்லை.
> நான் மேலும் தொடர்ந்து  படிக்கின்ற சூழ்நிலைகள்  சரிவர கிடைக்க வில்லை.
>  என்னை இந்த  கிராமத்தில் ஆசிரியராக நியமித்தார்கள். நான் இங்கு  என்னுடைய
> பெற்றோர்களையும் கூடவே அழைத்து வந்தேன். குறைந்த அளவு  பணத்தை வைத்து இங்கே
> வாழுவது எளிதானதாக இருக்கும் என்று  நினைத்துக் கொண்டேன்.
>
> பிறகு சிரித்துக் கொண்டே கூறினார், “என்னுடைய  வேலை இந்த மாதிரியான தொலைவில்
> உள்ள கிராமம்  என்பதாலும், இன்னும், நோய்வாய்ப்பட்ட பெற்றோர்கள்  என்னோடு
> இருப்பதாலும்,  யாருமே, எனக்குத் திருமணம் செய்ய பெண் கொடுக்க முன் வரவில்லை.
> மேலும் இது  எனக்கும், சரியாகவே  பட்டது. எந்த ஒரு படித்த பெண்ணாவது  இங்கே
> வந்து இருக்கத்தான் முடியுமா?
>
> எனக்கு யாருடனும் எந்தவிதமான  தொடர்பும் இல்லாததால்  இங்கிருந்து எனக்கு
> மாற்றல் ஏதும், கிடைக்கவும் இல்லை. ஆகவே நான் இங்கே தங்கி விட்டேன். இங்கே
> வந்த சில  வருடங்களுக்காகவே, என்னுடைய  பெற்றோர்களும், விட்டுப் போய் சேர்ந்து
> விட்டார்கள். என்னால்  எவ்வளவு முடியுமோ, அவ்வளவு  சேவையை, நானும்
> அவர்களுக்கு செய்து முடித்தேன்.
>
> இப்போது,   இந்தப் பள்ளி, மற்றும்  இங்குள்ள குழந்தைகளோடு  நான்
> மகிழ்ச்சியாக  இங்கே இருக்கின்றேன்.   விடுமுறை நாட்களில், நான் அவர்களை,
> பக்கத்தில் உள்ள  குன்றுகளுக்கு  அழைத்துச் சென்று,   மரங்களை நடச் செய்கிறேன்.
>
> மாலை   வேளைகளில்,  பள்ளி வரண்டாவில்  வைத்து முதியோர்களுக்குப் பாடம்
> கற்றுக் கொடுக்கிறேன்.   அநேகமாக, படிப்பறிவு  இல்லாதவர்கள், இந்தக்
> கிராமத்தில் இனிமேலும்,  இருக்கப் போவது இல்லை. நான்  ஒரு போதை  தடுப்பு
> பிராச்சாரத்தையும் கூட  இங்கே நடத்திக் கொண்டு  இருக்கின்றேன்.   நானாகவே,
> எனது  உணவை  சமைத்துக் கொள்கிறேன்; புத்தகங்களைப் படிக்கின்றேன்.
>
> என்னுடைய  லட்சியம்   என்னவென்றால்,   இந்தக் குழந்தைகளுக்கு சிறந்த கல்வி
> கிடைக்க வேண்டும்;   அவர்கள் சிறந்த  நன்னெறிகளைப் படிக்க வேண்டும்.
> மேலும்,  நல்லொழுக்கங்களில் அபிவிருத்தி  அடைய வேண்டும் என்பதுதான்.
> என்னால், C.A.  ஆக முடியாமல் போய் விட்டது.  ஆனால் என்னுடைய மாணவர்களில்
> இரண்டு பேர் C.A. முடித்து  விட்டார்கள். மேலும் சில பேர்  நல்ல வேலைகளில்
> சேர்ந்து, நன்றாக  இருக்கிறார்கள்.
>
> எனக்கு இங்கே பெரிய  செலவு  என்று ஏதுமில்லை.  என்னுடைய  வருமானத்தில்,
> மிகுதியான  அளவை இந்தத் குழந்தைகளின்,  கல்வி மற்றும் விளையாட்டு
> என்பனவற்றிற்காக செலவு  செய்கின்றேன்.  கல்லூரி நாட்களில்  இருந்தே எனக்குக்
> கிரிக்கெட் விளையாடுவதில்  ஆர்வம் உண்டு,  என்பது  உங்களுக்குத் தெரியும்.
> அந்த  பொழுது போக்கும் கூட,  இந்தக் குழந்தைகளோடு  விளையாடி நிறைவேறி
> வருகிறது.    எனக்கு போதுமான அளவுக்கு,  அமைதி இங்கே  கிடைக்கின்றது.
>
> நான் இடையே குறுக்கிட்டு, கூறினேன்,  “உங்கள் பெற்றோர்களின் மரணத்திற்குப்
> பிறகு, நீங்கள் ஏன்  திருமணம்  செய்து கொள்வதைப் பற்றி நினைத்திட வில்லை?
>
> அவர் புன்  சிரிப்போடு கூறினார், “ உலகத்தில் உள்ள  அனைத்து நல்ல
> விஷயங்களும்  எனக்காக  இல்லை. ஆகவே, என் முன்னே இருக்கும் எல்லாவற்றையும்
> நல்லதாக மாற்ற   முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்.
>
> அவருடைய எளிமையான சிரிப்பு, என்னுடைய அடி ஆழத்தையே  அதிர செய்ய வைத்து
> விட்டது.
>
> நான் திரும்பும் போது அவரிடம் கூறினேன், “ பிரசாந்த்! நீங்கள்  எப்போது
> விரும்புகின்றீர்களோ, நான்  உங்களை இட மாற்றம்  செய்கிறேன்; தலைமை இடத்திற்கோ
> அல்லது நீங்கள் விரும்புகின்ற இடம் எதுவோ, அந்த இடத்திற்கோ, மாற்றி தருகிறேன்.
>
> அவர் புன்சிரிப்போடு கூறினார்,“இது  இப்போது, மிகவும்  கால தாமதம் ஆகி
> விட்டது  சார்! இங்கே இப்பொழுது, இந்த மக்களோடு  நான் மகிழ்ச்சியாக
> இருக்கிறேன்.”    கைகளை கூப்பியவாறே அவர் கூறிக் கொண்டு இருந்தார்.
>
> என்னுடைய  சொந்த சாதனைகளை வைத்து, நான் அவரை விடவும் முன்னேறிச் சென்று
> விட்டேன்,  என்ற பெருமித  உணர்வும், வெற்றி  அடைந்து விட்டேன் என்று இருந்த
> மாயையும் இப்போது தகர்ந்து,  நொறுங்கிப் போய் விட்டது.
>
> அவருடைய வாழ்க்கையில் குறைபாடுகள்  உண்டு; இன்னும்   கஷ்டங்கள், வசதியின்மை
> இவை  அனைத்துமே இருக்கின்ற நிலையிலும்,  அவர் வசதியாகத்தான்  இருக்கிறார்.
> அவருடைய மன சாட்சியால், நான் மனம் தடுமாற்றம் அடைந்து விட்டேன்.
>
> அவருடைய வாழ்க்கையில், அவர் நடத்தையில்,  எந்த விதமான துன்பத்தின் அல்லது
> குறைபாட்டின்  அடையாளமே கிடைக்கவில்லை.   நாம் வசதிகள், சாதனைகள், பதவிகள்
> இவற்றின் அடிப்படையில்,  மக்களை மதிப்பீடு  செய்கிறோம். ஆனால் இவை எதுவுமே
> இல்லாமலேயே கூட, அவர் என்னை, தோற்கடித்து விட்டார்!
>
> திரும்பும் போது, உணர்ச்சிகளில்  மூழ்கிய என்னால் அவரிடம் ஒன்றே ஒன்றுதான்
> கூற முடிந்தது;  கைகளைக் கூப்பியவாறே, “உங்களுடைய இந்த புனிதமான தொண்டில்
> எப்போதாவது  நான் உங்களுக்குத் தேவைப் படுகிறேன் என்றால், அப்போது,
> கண்டிப்பாக என்னை ஞாபகத்தில்  வைத்துக் கொள்ளுங்கள்  நண்பரே!”
>
> நிர்வாக மட்டத்தில், நீங்கள் எப்படிப்பட்ட  பதவி வகித்தாலும் சரி,  வகித்துக்
> கொண்டிருந்தாலும்  சரி,  உண்மையில் அது ஒன்றுமே இல்லை.  விஷயம் என்னவென்றால்,
> நீங்கள் எப்படிப் பட்ட மனிதராக இருக்கிறீர்கள், என்பதுதான்  முக்கியம். மேலும்
> என்னவாக மாறிக் கொண்டு இருக்கிறீர்கள்  என்பதும் முக்கியம்!
>
>
> *தாஜி மகராஜ்:*
>
>
> *நம்மிடம் பணிவும், எளிமையும் இருக்கின்றது என்றால், நம்மிடம்  எல்லாமே
> இருக்கின்றன என்று நாம் நம்ப இயலும். வேறு எந்த ஒன்றுமே நமக்குத் தேவை இல்லை.
> பணிவு என்பதுடன், ஒரு பெரிய இதயமும்  இருக்கின்றது என்றால், நாம் மரியாதை
> என்பதையும் சம்பாதிப்பதோடு, மிகச் சிறப்பானதையும் சாதிக்கின்றோம்.*
>
>
> *ஹார்ட்ஃபுல்னெஸ்  தியானம்.*💌
> *HFN கதைக் குழு,  ஜோத்பூர்.*
>
> Yahoo Mail: Search, Organize, Conquer
> <https://mail.onelink.me/107872968?pid=nativeplacement&c=US_Acquisition_YMktg_315_SearchOrgConquer_EmailSignature&af_sub1=Acquisition&af_sub2=US_YMktg&af_sub3=&af_sub4=100002039&af_sub5=C01_Email_Static_&af_ios_store_cpp=0c38e4b0-a27e-40f9-a211-f4e2de32ab91&af_android_url=https://play.google.com/store/apps/details?id=com.yahoo.mobile.client.android.mail&listing=search_organize_conquer>
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "Thatha_Patty" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion visit
> https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81ZdGgsbotcy%2BYHgoNzgwZ26sUpggbyvF7PSffHSzcRniAw%40mail.gmail.com
> <https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81ZdGgsbotcy%2BYHgoNzgwZ26sUpggbyvF7PSffHSzcRniAw%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer>
> .
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoqLkVv7k%3Dpmy0DL%3D1cFStK51av33M%2BZGt69n30%2Bfzg3AA%40mail.gmail.com.

Reply via email to