---------- Forwarded message ---------
From: GOPAL Vis <[email protected]>
Date: Thu, 12 Mar, 2026, 10:44 am
Subject: Re: தேசிகரின் பூஸ்துதி தமிழாக்க முயற்சி (கோபால்)
To: <[email protected]>


மிக்க நன்றி.
கோபால்

On Thu, Mar 12, 2026 at 6:21 AM Govindaraju Arunachalam <[email protected]>
wrote:

> உரை இனிது. உரைக்கும் விதமும் இனிது.
>
> rgds,
>
> Dr. A. GOVINDARAJU,
> Retired Principal - National Awardee,
>
>
>
> On Wed, 11 Mar 2026 at 9:21 PM, GOPAL Vis <[email protected]> wrote:
>
>> மிக்க நன்றி, திரு யோகியார் அவர்களே.
>> கோபால்.
>>
>> On Wed, Mar 11, 2026 at 9:09 PM Kaviyogi Vedham <
>> [email protected]> wrote:
>>
>>> அபாரம் கோபால்.  அருமையாக வந்துளது. தொடர்க..உம் பணி,
>>>  யோகியார்
>>>
>>> On Wed, Mar 11, 2026 at 2:19 AM GOPAL Vis <[email protected]>
>>> wrote:
>>>
>>>> சந்த வசந்த அன்பர்களுக்குப் பணிவான வணக்கம். சுமார் 3 வாரங்களுக்கு முன்,
>>>> திருப்புல்லாணி திரு ரகுவீரதயாள் அவர்கள், உ வே *ஸ்ரீ வேதாந்த தேசிகர்*
>>>> இயற்றிய 33 விருத்தங்களைக் கொண்ட *பூஸ்துதி *என்ற வட்மொழி நூலைத்
>>>> தமிழ்க் கவிதை வடிவில் யாத்துத் தருமாறு பணித்தார். அது அடியேன் அறிந்திராத
>>>> நூலாதலினால் புத்தகத்திலிருந்து தமிழ்ப் பொழிப்புரையோடு கூடிய் pdf நகல்
>>>> ஒன்றையும் அனுப்பி வைத்தார். வடமொழி நூலின் தமிழாக்கமாக நான் இதுவரை
>>>> முயன்றதில்லை. அவர் பணித்ததால், இறைவன் சித்தம் என்று ஏற்றுக் கொண்டேன். அது
>>>> இன்று முழுமை அடைந்தது. தேவநாகரி வடிவில் பாடல்கள் தனித்தனியாக வலைத்தளத்தில்
>>>> கிட்டின. அவற்றை *அக்‌ஷரமுகா *துணை கொண்டு தமிழ் எழுத்து வடிவத்துக்கு
>>>> மாற்ற இயன்றது. பொழிப்புரைகள் புத்தக நகலாதலின் தனித்தனியே எடுக்க இயலவில்லை.
>>>> ஆகவே பொழிப்புரை, பதவுரைகளோடு கூடிய நகலை இங்கே
>>>> இணைப்பாகச் சேர்த்திருக்கிறேன். தமிழ் எழுத்தில் வடமொழி வடிவையும், அடியேன்
>>>> முயன்ற தமிழாக்கத்தையும் அறிஞர்களின் பார்வைக்காக இங்குப் பத்துப் பத்தாக இட
>>>> எண்ணி, இன்று தொடங்குகிறேன். பிழைகளைச் சுட்டி அருளுமாறு வேண்டுகிறேன்.
>>>> என் பாடல்கள் எண்சீர் விருத்தங்களால், பொதுவாக விள/விளாச் சீர்களாலும்,
>>>> சில (பெரும்பாலும் விளமாகத் தொனிக்கக் கூடிய) காய்ச் சீர்களாலும் ஆனவை.
>>>> சொல்லுக்குச் சொல் தமிழாக்கம் இல்லாமல் தேசிகர் சொல்ல வந்த கருத்துகளாக
>>>> எனக்குப் பட்டதை ஆதாரமக வைத்து என் உணர்ச்சிகளுக்கும் ஞானத்திற்கும் எட்டிய
>>>> சொற்களால் தமிழாக்கம் செய்ய முயன்றிருக்கிறேன் என்பதையும்
>>>> பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
>>>> நன்றி.
>>>>
>>>>
>>>> தேசிகன் திருவடிகள் சரணம்!
>>>>
>>>> *பூஸ்துதி தமிழாக்க முயற்சி! [பாடல்கள் 01 - 10]*
>>>> ஸ்ரீமான் வேங்கட நாதார்ய: கவிதார்கிக கேஸரீ |
>>>> வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||
>>>>
>>>>
>>>>
>>>>
>>>>
>>>> *வேதாந்த தேசிகனே சீமானே வேங்கட நாதாவெம் ஆசானே ஆசுகவி நாவலனே வாதத்தில்
>>>> பேரரியே வாழ்ந்திருப்ப தென்னெஞ்சில் நீதானே என்றும் நிலைத்து! ..(0.1)*
>>>>
>>>> *சமர்ப்பணம்*
>>>>
>>>>
>>>>
>>>> *மாவருளி மாலருள மாகவியாய் ஆனநின நாவருளும் பாவின் நகலாக்க - ஆவதிலை!
>>>> தேசிகனே நீயருளிச் சேர்த்துவிடு பூமிக்கே யாசித்தேன் யாப்பிதனை ஏற்று! (0.2)*
>>>> [மா = திருமகள்; நகல் (இற்றைய வழக்குச் சொல்) = பிரதி]
>>>>
>>>>
>>>> *முன்மொழி*
>>>>
>>>> *இருமறைத் தத்துவத்(து) இணையிலான் தேசிகன்*
>>>>
>>>> *……இமையடி விழியென இறைவனைக் கொண்டவன்*
>>>>
>>>> *கருவையும் கருத்தையும் கவினையும் கொண்டதாய்க்*
>>>>
>>>> *……கருணையால் தந்ததோர் காவியம் பூத்துதி!*
>>>>
>>>> *அருகதை இன்றியோர் ஆசையால் அதனையீங்(கு)*
>>>>
>>>> *……அமுதெனும் தமிழினில் ஆக்கிட முயன்றுளேன்!*
>>>>
>>>> *வருபிழை என்கவி வறுமையால், நிறைவுநான்*
>>>>
>>>> *……வணங்கிடும் தேசிகன் வாக்கினில் வந்ததே! (0.3)*
>>>>
>>>>
>>>> பூஸ்துதி*:*
>>>> வேதா³ந்ததே³ஶிகக்ருʼதா .
>>>> *வேதாந்த தேசிகர் இயற்றிய பூத்துதி*
>>>>
>>>> ஸங்கல்பகல்பலதிகாமவதி⁴ம்ʼ க்ஷமாயா꞉
>>>> ஸ்வேச்சா²வராஹமஹிஷீம்ʼ ஸுலபா⁴னுகம்பாம் .
>>>> விஶ்வஸ்ய மாதரமகிஞ்சனகாமதே⁴னும்ʼ
>>>> விஶ்வம்ப⁴ராமஶரண꞉ ஶரணம்ʼ ப்ரபத்³யே .. 1..
>>>>
>>>> *எண்ணிய எண்ணுமுன் ஈந்திடும் கற்பகம்!*
>>>>
>>>> *……எல்லையில் லாப்பிழை இயல்பினால் பொறுப்பவள்!*
>>>>
>>>> *அண்ணல்வ ராகனின் அன்புடை மனையவள்!*
>>>>
>>>> *……அருள்வதில் எளியவள் அகிலமிஃ(து) ஈன்றவள்!*
>>>>
>>>> *நண்ணிடும் கதியிலார் நலம்பெற அளிப்பவள்!*
>>>>
>>>> *……நங்கைதன் சுதந்திரம் நனிஉணர்ந் தவளவள்!*
>>>>
>>>> *மண்ணெனும் தாயவள் மகனென புகலவள்*
>>>>
>>>> *……மலரடி அன்றியோர் மறுபுகல் இல்லையே! ..(1)*
>>>>
>>>> [மகன் என = மகனாகிய என்னுடைய]
>>>>
>>>>
>>>> . . . . . . . .
>>>
>> --
>> You received this message because you are subscribed to the Google Groups
>> "சந்தவசந்தம்" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
>> email to [email protected].
>> To view this discussion visit
>> https://groups.google.com/d/msgid/santhavasantham/CALjGCttevUimmOh5%2BXLDd5KMtqG6SONajpuS%2BTcR1s5RzJpdgg%40mail.gmail.com
>> <https://groups.google.com/d/msgid/santhavasantham/CALjGCttevUimmOh5%2BXLDd5KMtqG6SONajpuS%2BTcR1s5RzJpdgg%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer>
>> .
>>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "சந்தவசந்தம்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion visit
> https://groups.google.com/d/msgid/santhavasantham/CAKHh4GsE-i%3DpNBqbBpUHXhwkdqqgyn7EZ2vFXWC_Pz3BjAeY5A%40mail.gmail.com
> <https://groups.google.com/d/msgid/santhavasantham/CAKHh4GsE-i%3DpNBqbBpUHXhwkdqqgyn7EZ2vFXWC_Pz3BjAeY5A%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer>
> .
>
-- 
You received this message because you are subscribed to the Google Groups
"சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an
email to [email protected].
To view this discussion visit
https://groups.google.com/d/msgid/santhavasantham/CALjGCtth5F%2Bt5CTugDKMsG6ege1vSLEU4Db9m0BuSMGVYXLd0w%40mail.gmail.com
<https://groups.google.com/d/msgid/santhavasantham/CALjGCtth5F%2Bt5CTugDKMsG6ege1vSLEU4Db9m0BuSMGVYXLd0w%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer>
.

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3Dduoef%2B9V1rqaiE8vS7LTA6EH7KSYuZxsq2Gfmct45HkUg%40mail.gmail.com.

Reply via email to