A GREAT WORK KR  280326

On Fri, 27 Mar 2026 at 21:30, Venkatachalam Subramanian <
[email protected]> wrote:

> ஶ்ரீராம காவியம்
> ~~~~~~~~~~~~~~~~
> 212 / 03-03-2026
>
> இநதிரஜித்...
>
> ★அரசே! அந்த குரங்கின் மிகுந்த  வலிமையை அறிந்த பின்பும் தாங்கள் அரக்கர்களை
> அந்த கொடிய குரங்கிடம் அனுப்பி, எமலோகத்திற்கு அவர்களை அனுப்புகிறீர்கள்.
> அப்படித்தான் கிங்கர அரக்கர்கள், ஐந்து சேனைத்தலைவர்கள், என் தம்பி அட்சய
> குமாரன் என ஒருவர் பின் ஒருவராக இறந்து போயினர். இவ்வளவு பேரையும் கொன்ற பிறகு
> அக்குரங்கை சும்மா விடுவது சரியல்ல. நான் சென்று அக்குரங்கை கணப்பொழுதில்
> பிடித்து வருகிறேன். தாங்கள் வருந்த வேண்டாம் என்றான்
> இந்திரஜித். ராவணன் அவனை கட்டித் தழுவிக் கொண்டு பேச ஆரம்பித்தான்.
>
> ★இந்திரனுக்கு சமமான வீரன்
> நீ ஆவாய். அனைத்து விதமான அஸ்திரங்களையும் நன்றாக பயின்று அதனை அடைந்து
> இருக்கிறாய். நம்மை எதிர்த்த தேவர்களையும் அசுரர்களையும் யுத்தத்தில்
> வென்றிருக்கிறாய். பிரம்மாவை, கடின தவம் செய்து பூஜித்து அவரிடமிருந்து
> உயர்ந்த பிரம்மாஸ்திரம் பெற்று வந்து இருக்கின்றாய். உன்னை எதிர்த்து யுத்தம்
> செய்யக் கூடிய வீரர்கள் இந்த உலகத்தில் யாரும் இல்லை. அறிவில் சிறந்த நீ
> காரியங்களை மிகச் சரியாக யோசனை செய்வதில் உனக்கு நிகர் யாருமில்லை.
>
> ★அசோக வனத்தில் ஒரு துஷ்ட வானரம் நம்மை எதிர்த்துக் கொண்டு இருக்கிறது. இது
> அந்த தேவர்களின் சூழ்ச்சியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். நான் அனுப்பிய
> கிங்கரர்கள், ஜம்புமாலி,  நம்முடைய , வீரமான சேனாதிபதிகள் 5 பேர், உனது அருமை
> தம்பி அட்சயகுமாரன் ஆகிய அத்தனை பேரும் அந்த வானரத்தால் கொல்லப்பட்டனர். நீ
> தான் அந்த துஷ்ட வானரத்தை வெல்லும் வல்லமை அதிகமாக கொண்டவன். அந்த வானரத்தை
> நமது சேனைகளின் பலத்தால் வெல்ல முடியாது. அந்த  கொடிய வானரத்தின்
> அறிவாற்றலையும், வல்லமையையும் அத்துடன் அதன் பராக்கிரமத்தையும், சிந்தித்து
> பார்த்து உன்னுடைய தவ பலத்தை உபயோகித்து, சிறந்த அஸ்திரத்தை பயன் படுத்தி,
> கைது செய்து இங்கே வெற்றியுடன் திரும்பி வா என்று சொல்லி இந்திரஜித்தை அனுப்பி
> வைத்தான் ராவணன்.
>
> ★இந்திரஜித், தந்தையை வலம் வந்து ஆசி பெற்றுக்கொண்டு நான்கு சிங்கங்கள்
> பூட்டிய தேரில் நின்று, வில்லின் நானை இழுத்து சப்தம் செய்து, அசோக வனத்தை
> நோக்கிச் சென்றான். அவன் பின்னே பெரும் ராட்சத சேனைகள் பெரும் கூட்டமாக
> வந்தார்கள். அனுமனுக்கு வெகு தூரத்தில் ஒரு கூட்டம் வருவது தெரிந்தது.
> மீண்டும் யுத்தம் செய்வதற்கு தயாரானான்.  இந்திரஜித்தின் அரக்கர் படைகள்
> அனுமனை சூழ்ந்துக் கொண்டன.
>
> ★அனுமன் தன் விஸ்வரூபத்தை எடுத்தான்.அனுமன் தன் அருகில் இருந்த ஆச்சா மரத்தை
> பிடுங்கி அரக்கர்களிடம் போரிட்டான். அரக்கர் படை  அனைத்தையும் கொன்றான். பிறகு
> அனுமன் தன் தோள்களைத் தட்டி என்னிடம் போருக்கு வாருங்கள் என முழக்கமிட்டான்.
> அரக்கர்களுக்கு அழிவு வந்துவிட்டது என்றான். இதைக்கேட்ட இந்திரஜித், உன்
> எண்ணத்திற்கு நான் முடிவு கட்டுகிறேன் எனக்கூறி அனுமன் மீது அம்புகளை ஏவினான்.
> இந்திரஜித் தன்னுடைய வில்லை எடுத்து அம்புமழை பொழிந்தான். அனைத்து அம்புகளில்
> இருந்தும் அனுமன் லாவகமாக தப்பினான்.
>
> ★சில அம்புகள் அனுமன் மீது பட்டாலும் அந்த அம்புகளால் அனுமனின் வஜ்ரம் போன்ற
> உடம்பை துளைக்க சிறிதும் முடியவில்லை. இந்திரஜித் விட்ட அம்புகள் அனைத்தும்
> பயன் அற்றுப் போனது. ராட்சதர்கள் ஏற்படுத்திய பேரிகை, முரசு மற்றும்  நாணோசை
> ஆகிய பெரும் சத்தங்களுக்கு எதிராக அனுமனின் கர்ஜனை சத்தம் பெரிதாக இருந்தது.
> வீரர்கள் இருவருக்கிடையிலும் நடந்த யுத்தம் இருவரின் அபரிமிதமான
> சாமர்த்தியத்தையும், அற்புதமான வலிமையையும் காட்டியது. யுத்தம் நீண்டு கொண்டே
> சென்றது.
>
> ★அனுமன் தன் உடலை மிகவும் பெரிதாக்கிக் கொண்டே சென்றான். இந்திரஜித்தால்
> அனுமனை பாதிக்குமேல் காண முடியவில்லை. பிறகு அனுமன்,
> ஒரு மரத்தை வேரோடு பிடுங்கி இந்திரஜித் மீது எறிந்தான். இதனால்
> இந்திரஜித்தின் மணிமுடிகள் உடைந்து கீழே விழுந்தன. இதனால் மிகுந்த கோபங்கொண்ட
> இந்திரஜித் அனுமன் மீது ஆயிரக்கணக்கான  பாணங்களை ஏவினான். அனுமன்,
> இந்திரஜித்தை அவன் நின்றிருந்த தேரோடு தூக்கி எறிந்தான். தரையில் விழுந்த
> இந்திரஜித் எழுந்து வானில் சென்றான்.
>
> ★என்ன செய்வதென தெரியாத நிலையில் இந்திரஜித், மனதில்
> சிந்திக்கத் தொடங்கினான். எத்தனை அம்புகள் விட்டாலும் இந்த வானரத்தை ஒன்றும்
> செய்ய முடியவில்லை. தந்தை சொன்னது முற்றிலும் சரியே. நமது தவத்தினால் பெற்ற
> அஸ்திரத்தை உபயோகித்து இந்த வானரத்தை அடக்க வேண்டும் என்று ஓர் முடிவு
> செயதான். அனுமன் மீது திவ்ய பிரம்மாஸ்திரத்தை ஏவ மனதில் நினைத்தான். அதனால்
> அந்த பிரம்மாஸ்திரத்திற்கு விஷேச அர்ச்சனைகளும், பூஜைகளும், வழிபாடுகளும்,
> செய்து வணங்கி அந்த பிரம்மாஸ்திரத்தை தன் கையில் எடுத்துக் கொண்டான் ராவணன்
> மைந்தன் இந்திரஜித்.
>
> வணக்கத்துடன்
> நாக சுபராஜராவ்
> 9944110869.
>
> நாளை......................
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "Thatha_Patty" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion visit
> https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdvgpMRjM8x3fYC_CD7_8peb9N0gOpY1-Vyaaak2Ravrqg%40mail.gmail.com
> <https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdvgpMRjM8x3fYC_CD7_8peb9N0gOpY1-Vyaaak2Ravrqg%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer>
> .
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopOw3ye7aD8zakPTK0nGhrcAHZ%3DbHkmeKT2i6GSg72UqA%40mail.gmail.com.

Reply via email to