வணக்கம்,

குறிப்பிட்ட தலைப்புகளேதும் இல்லையென்றாலும் இன்றைய கூட்டம் கலகலப்பாக இருந்தது.

கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்து கொண்டமை பற்றிய சுவையான கசப்பான 
விஷயங்களை நாகு, விக்னேஷ், அருளப்பன், ஆமாச்சு ஆகியோர் 
கலகலப்பாக பகிர்ந்து கொண்டனர். கண்காட்சியில் ஏற்பட்ட அனுபவங்களும் தமிழ் இணைய 
மாநாட்டு அனுபவங்களும் சுவாரஸ்யமாக இருந்தன. பார்க்காத பேசிராத 
பலரையும் ஒன்று கூட்டுவதே இத்தகைய நிகழ்வுகளின் சிறப்பாகையால் இத்தகைய நிகழ்வுகள் 
தொடர்ச்சியாக நடத்தப்படுவது நல்லது என பகிர்ந்து கொள்ளப்பட்டது. 

கலந்து கொண்டு பங்களித்தோர் விரைவில உபுண்டு குரு டி சட்டை பெற இருக்கிறார்கள். 

தொடர்ந்து ஐ லக்சி மடலாடற் குழுவில் தமிழ் மொழி மடல்கள் இடுவது தொடர்பாக தீடிரென 
பூதாகாரமாக கிளப்பப்பட்ட விஷயங்கள் பற்றியும் 
விவாதிக்கப்பட்டது. தீர்வாக தமிழகத்தை மையமாகக் கொண்ட மடலாடற் குழுவொன்று 
இருக்கலாம் என்ற எம் ஐ டி மாணவர்களின் விருப்பங்களும் அலசப்பட்டன. 
நிறைய பேர் தமிழில் தொடர்ச்சியாக ஆக்கபூர்வமாக மடலாட இருக்கிறார்கள் என்கிற போது 
தொடங்குவது நல்லது என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டது. அது ஐ 
லக்சியின் மடலாடற் குழுவாக இருக்காதாகையால் ஐ லக்சியில் தொடர்ந்து தமிழில் 
எழுதலாம் என்றும் கருத்து வெளியிடப்பட்டது.

அடுத்த மாதம் நடைபெற இருக்கும் கூட்டமானது காலத்தால் சற்றே கூடுதலாக அமைந்து 
தமிழ்க் கணிமைத் திட்டங்களுக்கான காலக்கோடொன்றினை ஏற்படுத்தலாம் என்று பகிர்ந்து 
கொள்ளப்பட்டது. பணித்திட்டங்களை செயற்படுத்த தேவைப்படும் நிதியை திரட்டும் பணியை 
யாவர்க்குமான் மென்பொருள் அறக்கட்டளை ஏற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

உபுண்டு தமிழ்க் குழுமத்தின் அங்கிகாரம் காலவாதியானது. அதனை புதுப்பிக்க வரும் 
வாரம் அதன் லோகோ குழுமக் கூடுதலில் விண்ணப்பிக்கப்பட இருப்பாக 
அக்குழுமத்தின் பொறுப்பாளர் நாகராஜா தெரிவித்தார். அக்கூடுதல் பற்றிய விவரங்களை 
அவர் பகிர்ந்து கொள்வார். அது சமயம் குழுமத்தில் பணிகளால் 
பயனடைந்தோரும் ஆதரவாளர்களும் #ubuntu-meeting இல் கலந்து கொண்டு தங்களது மேலான 
ஆதராவை நல்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

ஆக அடுத்த மாதம் மூன்றாவது சனிக்கிழமை மறுபடியும் சந்திப்போம். சற்று முன்னதாகவே!

--

ஆமாச்சு


_______________________________________________
ILUGC Mailing List:
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc

Reply via email to