அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?"



நியாயமான ஒரு கேள்வி



"ஏம்பா  இந்த  கம்ப்யூட்டர்  படிச்சவங்க  எல்லாம்  நிறைய  சம்பளம்

வாங்கிட்டு,  பந்தா  பண்ணிட்டு  ஒரு  தினுசாவே  அலையுறீங்களே?  அப்படி
என்னதான்  வேலை  பார்ப்பீங்க ?" –



நியாயமான  ஒரு  கேள்வியை  கேட்டார்  எனது  அப்பா.



நானும்  விவரிக்க  ஆரம்பிதேன்.



"வெள்ளைகாரனுக்கு  எல்லா  வேலையும்  சீக்கிரமா முடியனும்.

அதே  மாதிரி  எல்லா  வேலையும்  அவனோட வீட்டுல

இருந்தே  செய்யணும்.

இதுக்காக  எவ்வளவு  பணம்  வேணுமானாலும்  செலவு செய்ய

தயாரா  இருக்கான்."



"அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்".



"இந்த  மாதிரி  அமெரிக்கால்-ல,  இங்கிலாந்து-ல  இருக்குற Bank,

இல்ல எதாவது  கம்பெனி,  "நான்  செலவு  செய்ய  தயாரா இருக்கேன்.

எனக்கு இத  செய்து கொடுங்க  கேப்பாங்க.

இவங்கள  நாங்க  "Client"னு  சொல்லுவோம்.



"சரி"



இந்த  மாதிரி Client-அ  மோப்பம்  பிடிக்குறதுக்காகவே  எங்க

பங்காளிக  கொஞ்ச  பேர  அந்த  அந்த  ஊருல  உக்கார  வச்சி இருப்போம்.
இவங்க பேரு "Sales  Consultants, Pre-Sales Consultants....".



இவங்க போய் Client  கிட்ட பேச்சுவார்த்தை  நடத்துவாங்க.



காசு  கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்?



ஆயிரத்தெட்டு  கேள்வி கேப்பான். உங்களால  இத பண்ண  முடியுமா?



அத பண்ண முடியுமான்னு  அவங்க கேக்குற  எல்லாம்  கேள்விக்கும்,
"முடியும்"னு பதில்  சொல்றது  இவங்க வேலை.



"இவங்க  எல்லாம்  என்னப்பா  படிச்சுருபாங்க"?



"MBA, MSனு  பெரிய  பெரிய  படிபெல்லாம் படிச்சி  இருப்பாங்க."



"முடியும்னு ஒரே  வார்த்தைய திரும்ப  திரும்ப  சொல்றதுக்கு

எதுக்கு MBA  படிக்கணும்?" –



அப்பாவின் கேள்வியில்  நியாயம்  இருந்தது.



"சரி  இவங்க  போய்  பேசின  உடனே client project  கொடுத்துடுவானா?"



"அது எப்படி?  இந்த  மாதிரி  பங்காளிக  எல்லா கம்பெனிளையும்

இருப்பாங்க. 500  நாள்ல முடிக்க  வேண்டிய வேலைய 60  நாள்ள

முடிச்சு தரோம், 50  நாள்ல  முடிச்சு  தரோம்னு பேரம்  பேசுவாங்க.

இதுல யாரு  குறைஞ்ச  நாள  சொல்றாங்களோ  அவங்களுக்கு

ப்ராஜெக்ட் கிடைக்கும்"



"500  நாள்ல  முடிக்க வேண்டிய  வேலைய 50

நாள்ல எப்படி முடிக்க  முடியும்?  ராத்திரி பகலா வேலை பார்த்தாலும்

முடிக்க  முடியாதே?"



"இங்க தான்  நம்ம  புத்திசாலித்தனத்த நீங்க

புரிஞ்சிக்கணும். 50  நாள்னு சொன்ன  உடனே client  சரின்னு சொல்லிடுவான்.



ஆனா அந்த 50  நாள்ல  அவனுக்கு  என்ன வேணும்னு அவனுக்கும்

தெரியாது,  என்ன  செய்யனும்னு நமக்கும்  தெரியாது.

இருந்தாலும் 50 நாள்  முடிஞ்ச பிறகு  ப்ரோஜெக்ட்னு  ஒன்ன  நாங்க deliver
பண்ணுவோம்.

அத பாத்துட்டு "ஐய்யோ நாங்க  கேட்டது  இதுல்ல,

எங்களுக்கு இது  வேணும்,  அது  வேணும்னு" புலம்ப ஆரம்பிப்பான்.



"அப்புறம்?" -  அப்பா  ஆர்வமானார்..



"இப்போ தான் நாங்க  நம்பியார்  மாதிரி  கைய  பிசஞ்சிகிட்டே

"இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்"னு சொல்லுவோம்.



"CR-னா?"



"Change Request. இது வரைக்கும் நீ கொடுத்த  பணத்துக்கு  நாங்க

வேலை பார்த்துட்டோம்.

இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்"னு

சொல்லுவோம்.

இப்படியே 50  நாள்  வேலைய 500  நாள்  ஆக்கிடுவோம்."



அப்பாவின் முகத்தில்  லேசான பயம்  தெரிந்தது.



"இதுக்கு அவன்  ஒத்துபானா?"



"ஒத்துகிட்டு தான் ஆகணும்.



முடி வெட்ட போய்ட்டு,  பாதி  வெட்டிட்டு வர  முடியுமா?"



"சரி ப்ராஜெக்ட் உங்க  கைல வந்த உடனே என்ன  பண்ணுவீங்க?"



"முதல்ல ஒரு டீம்  உருவாக்குவோம்.

இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு.

இவரது தான் பெரிய  தலை.

ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான்  பொறுப்பு."



"அப்போ இவருக்கு  நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம்

தெரியும்னு சொல்லு."



 "அதான்  கிடையாது.



இவருக்கு நாங்க பண்ற  எதுவும்யே  தெரியாது."



"அப்போ இவருக்கு என்னதான் வேலை?" –



அப்பா  குழம்பினார்.



"நாங்க  என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து  கைய  நீட்டுவோம்



==========================






------------------------------
Thinking of ordering food? Find restaurant numbers on Yahoo! India
Local<http://in.rd.yahoo.com/tagline_local_3/*http://in.local.yahoo.com/>








<!--#yiv604876106 #yiv1683255856 DIV {margin:0px;}-->


------------------------------






-- 
"A strong positive attitude will create more miracles than any wonder drug"
- Patricia Neal

Vanakkam Subbu

Reply via email to