---------- Forwarded message ---------
From: p.v. narayanan
Date: Mon 23 Apr, 2018, 8:18 PM
Subject: Maha Periyava
To:




Subject: Maha Periyava


நன்றி கடன் பட்டு இருக்கேன் - பெரியவா

சங்கராச்சார்ய மஹாஸ்வாமிகள் அப்போது காஞ்சிபுரத்தில் இருந்தார்:
ஒரு முறை வாரியார் அவரை தரிசிக்க சென்ற போது, மஹாஸ்வாமிகள் பூஜையில்
இருந்ததால் . பூஜை முடிவதற்குள் காமாட்சியம்மனையும் , மற்ற கோயில்களையும்
தரிசித்து விட்டு வரலாமென்று கிளம்பினார் வாரியார் !
தரிசனம் முடிந்து திரும்பி வரும் வழியில் சேங்காலிபுரம் அனந்தராமதீட்ஷதரை
சந்தித்தார் வாரியார் ....
இருவரும் கோயிலின் ஒரு பக்கமாய் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது ...
..சுமார் எண்பது வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் கோல் ஊன்றியபடி மெதுவாக
நடந்து தீஷதரை வணங்கி ,
'' எனக்கு ஒரு ருத்ராட்ஷ மாலை கொடுங்களேன் !''
என்றார் :
'' என்னிடம் தற்போது ருத்ராத்ஷமாலை இல்லையே ''
என்றார் தீட்சதர்
: உடனே அந்த மூதாட்டி ,
'' அதனாலென்ன ?....காஞ்சி பெரியவரிடம் சொல்லி வாங்கி தாருங்கள் !''
என்றார் :
'' பெரியவாளிடம் என்ன சொல்லி ருத்ராத்ஷம் கேட்க வேண்டும் ?''
கேட்ட தீட்ஷதருக்கு தன் பெயரை கூறிய அந்த மூதாட்டி , பின் தொடர்ந்து ,
'' மஹா பெரியவரை அவர் தாயார் பிரசவித்த காலத்தில் , கூட இருந்து ஒத்தாசை செய்த
மருத்துவச்சி கேட்டதாக சொல்லுங்கள் !''
கூறிவிட்டு அந்த மூதாட்டி விடைபெற்று கிளம்ப...
வாரியாரும் , தீட்ஷதரும் மடத்தை அடைந்தனர் :
இரவு சுமார் ஒன்பது மணியளவில் வாரியாரும் , மஹா பெரியவரும்
உரையாடிக்கொண்டிருக்க ...
அப்போது அங்கே வந்தார் மடத்துசீடர் , அறையை சுத்தம் செய்யும் பொருட்டு :
அப்போது அங்கே ஒரு சால்வையும் , ஒரு ருத்ராட்ஷ மாலையும் இருந்தன :
அந்த சீடரை அழைத்த மஹா சுவாமிகள் ,
'' உடனே சேங்காலியை அழைத்து வா ! ( அனந்தராம தீஷதரை )''
என்றார் :
அடுத்தகணம் அங்கே வந்த தீஷதரிடம் ,
'' இந்த ருத்ராட்ஷ மாலையும் , சால்வையும் உனக்கு தான் !.....''
என்று கூற .....தீஷதரோ மவ்னமாக இருந்தார் !
'' நீ இவற்றை ( பெயரை சொல்லி ) அந்த கிழவியிடம் சேர்த்து விடு !.....இந்த
சரீரத்தை அடையாளம் காட்டினாளே , ...அவளுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்
!''
மஹா சுவாமிகள் கூற .....
சிலிர்த்து போனார்கள் வாரியாரும் , தீட்ஷதரும் !
கண்களில் நீர் மலக இருவரும் மஹா சுவாமிகளை நமஸ்கரித்தனர் !
பின்னர் , மடத்து பிரசாதங்களுடன் , ருத்ராட்ஷ மாலையையும் , சால்வையையும்
சீடனிடம் கொடுத்து , தீட்சதர் மூலம் அந்த மூதாட்டியிடம் கொடுக்க செய்தார் மஹா
சுவாமிகள் !!

Image may contain: 1 person


Sent from my iPhone



-- 
P.V.NARAYANAN

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to