From: Jeyaram. Iyer <[email protected] <https://groups.google.com/>>


*வாழவந்த வாழ்வுதனை வண்ணமுறச் செய்கின்றார்    !     *



*                       மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா*
*               மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்*
*                        மெல்பேண் .... ஆஸ்திரேலியா *


*கையில்லா பலருள்ளார் காலில்லா பலருள்ளார்*
*கண்ணில்லா பலருள்ளார் வாய்பேசா பலருள்ளார்*
*என்றாலும் இவர்கலெல்லாம் இவ்வுலகில் வாழுகிறார்*
*எவருக்கும் தீங்கிளைக்க இவரென்றும் எண்ணுகிலார் *

*குறையெது வுமில்லாமல் குவலயத்தில் பலருள்ளார்*
*குறைகாணும் வழியிலவர் நிதம்பயணப் படுகின்றார்*
*குறையின்றிப் பிறந்ததனை மனமதிலே இருத்தாமல்*
*நிறைகுறைவாய் இருப்பதனை நெஞ்சேற்க மறுக்கிறது *

*ஊனமுற்றோர் தினமென்று ஒருதினத்தை முன்னிறுத்தி*
*ஊனமுற்றோர் என்போரை  உயர்த்தியே பலவுரைப்பார்*
*உரைப்பவர்கள் அரங்குக்குள் வருவதற்கு முன்னாலே*
*குருடுடென்பார் செவிடென்பார் நொண்டியென்பார் கேலியுடன் *

*மேடைகளில் ஏறுவார் வீரவார்த்தை கொட்டிடுவார்*
*ஊனமென்னும் சொல்லதனை உரைத்திடலே தவறென்பார்*
*உள்ளுக்குள் அவர்மனமோ ஊனமாய் ஆகிருக்கும்*
*உடல்குறைவு உடையாரை ஊனமுற்றோர் எனவுரைப்பார் *

*கண்ணிருந்தும் கற்கமாட்டார் கையிருந்தும் உதவமாட்டார்*
*வாயிருந்தும் நல்வார்த்தை வரவழைக்க விரும்பமாட்டார்*
*உடற்குறைகள் எதுவுமுன்றி உலகிலவர் வாழ்ந்தாலும்*
*ஊனமுற்ற மனிதர்களாய் ஆக்கிடுவார் வாழ்க்கையினை *

*அவயவத்தில் குறைபாடு பெற்றாலும் அவரகத்தில்*
*துணிவென்னும் நம்பிக்கை துளிர்விட்டே எழுகிறது*
*துளிர்விட்ட நம்பிக்கை பலதுறையில் பயணப்பட*
*அவருடனே கூடவே அணைந்ததாய் அமைகிறது *

*ஊனமுற்றோர் வார்த்தையிப்போ உருமாறி வந்திருக்கு*
*மாற்றுத் திறனாளிகளாய் மாநிலத்தில் மிளிர்கின்றார் *
*ஆற்றலினைக் காட்டுகின்றார் அகிலமெங்கும் செல்லுகிறார்*
*ஆற்றலுடை மனிதர்களாய் ஆகியவர் துலங்குகிறார் *

*நிறையுடையார் பங்குபற்றும் நிகழ்ச்சியெலாம் வருகின்றார்*
*குறைகாணா வகையினிலே குதித்தோடி வெல்லுகிறார்*
*தங்கமொடு வெண்கலமும் தரமுயர்ந்த பரிசுகளும் *
*பொங்கிவரும் வாழ்த்தொலியில் இங்கிதமாய் ஆக்குகிறார் *

*பார்வையற்ற பலபேர்கள் பட்டம்பல குவிக்கின்றார்*
*பல்கலைக் கழகந்தன்னில் உயர்நிலையில் இருக்கின்றார்*
*நீதிமன்றம் ஏறுகின்றார் நியாமதை உரைக்கின்றார்*
*சாதிக்கும் நாயகராய் தலைநிமிர்ந்து நிற்கின்றார் *

*இசைத்துறையில் இருக்கின்றார் இயல்த்துறையில் இருக்கின்றார்*
*வெளிநாட்டுத் தூதுவராய் வியக்கவைத்து நிற்கின்றார்*
*ஓவியம் தீட்டுகிறார் உயர்மேடை ஏறுகிறார்*
*காவியத்து நாயகராய் கண்ணியமாய் எழுகின்றார் *

*ஊனமுற்றோர் எனம்நினைப்பை உளமிருத்து அகற்றுகிறார்*
*உலகமது அதிசயிக்க உயர்பணிகள் ஆற்றுகிறார்*
*வாழவந்த வாழ்வுதனை வண்ணமுறச் செய்கின்றார்*
*வாழ்வாங்கு வாழுவதை மனமுழுக்க நிறைக்கின்றார் *


   -

 வெ.சுப்பிரமணியன்  வேறுதளத்தில் வந்தது நன்றிஓம்

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdvuOMM%2BR%2B7_FjQDOngj2Vv0TGajL07M%2BeMzerJYcy7p9w%40mail.gmail.com.

Reply via email to