Upanishad said in one line THAMASO MA JYOTHIRGA MAYA  KR IRS 101125

---------- Forwarded message ---------
From: Chittanandam V R <[email protected]>
Date: Mon, 10 Nov 2025 at 05:59
Subject: Fwd: Indira Priyadarshini - Knowledge
To:



*ஆகும் பொருளும் உறுதி உண்மையும்*

*இந்திரா ப்ரியதர்ஷிணி *

அமரர் பசி கெட உதவிய க்ருபை முகில் அகில புவனமும் அளவிடு குறியவன்
அளவு நெடியவன் அளவிட அரியவன் மருகோனே
அரவு புனைதரு புனிதரும் வழிபட மழலை மொழிகொடு தெளி தர
ஒளி திகழ் அறிவை அறிவது பொருள் என அருளிய பெருமாளே!

தேவர்கள் பசி நீங்க உதவிய கருணை நிறை திருமால், எல்லா உலகையும் அடியால் அளக்க
வல்ல குறு
வடிவுடை வாமன மூர்த்தி அளந்த போது நீண்ட (திரிவிக்கிரம) உருவம் கொண்டவன்,
மதித்து எண்ணுதற்கு
அரியவன் ஆகிய திருமால் மருகனே, பாம்பைப் பூண்ட தூய்மை  சிவபெருமானும்
துதிக்கும்படி, உனது
குதலைச் சொல்லால் அவர் தெளிவு பெறும்படி, ஒளி மயமான அறிவை அறிவது தான் பொருள்
ஆகும் என்று அவருக்கு உணர்த்தி அருளிய பெருமாளே.

தகப்பனுக்கு தனயன் உபதேசித்த பொருள் இதுவாகும். செவியில் தமக்கும்
மறைபொருளாகக் கூறியதை
அருணகிரிநாதர் அளவற்ற கருணையால் மக்குகள் நாமறியக் கூறுகிறார். அறிவு எது?
அறிவாளி யார்?
என்பதைப் பற்றி பலவகைத் தர்க்கங்கள் உடைய நடப்புலகில், தெளிந்த ஞானியர்
காட்டிய அறிவும்
பொருளும் இறையே இறை உணர்வில் நிறைதலே.

செயற்கை அறிவு, நுண்ணறிவு, ஆறாம் அறிவு எனக் கோடிக் கோடி அறிவு வகைகள் கொண்டு
மனிதம்
காட்டுகிறது தன் சிற்றறிவால். ஆனால் ஔி திகழ் அறிவு அவனை அறிதலே! திகழும்
விரவும் ஔி. இருளை
விழுங்கும் ஔி. மற்ற அறிவுக் குப்பை அந்த அறிவை அறியத் தடையாக மும்மலங்களை
நம்முள் நிறைத்த
வண்ணம் இருட்டை நிரப்பியபடி இருக்கிறது. இதைக் கண்டுதான் மணிவாசகப் பெருமான்
கல்வி எனும்
பல்கடல் பிழைத்து ஓடிவிட்டார்.

இதே கருத்தில் திருப்புகழில் பல வரிகள் உண்டு.
அறிவை அறிபவர் அறியும் இன்பம் தனை (அகரமுதலென) திருப்புகழ்.
அறிவால் அறிந்து உன்இருதாள் இறைஞ்சும்   --- (விறல்மாரன்) திருப்புகழ்.
அறிவை அறிவால் அறிந்து நிறைவாகி (சுருளளக) திருப்புகழ்.

இருதாள் இறைஞ்சுதல் தான் பேரறிவு என்று அறிவதே அறிவு.

எனக்கு மிகவும் பிடித்த சொல் பொருள். இந்தப் பொருள்தானே பெரிய ஸம்பத்து.
மற்றதெல்லாம் சல்லிப் பயனற்றது. எனவே வீண்தேடல் நிறுத்துக. அறிவை அறிவதே
சிறந்த பொருளாகும். வாழ்வின் இறுதிப்பயனாகும். அறிதல் கற்றலின் அப்பாற்பட்டது.
அதில் பட்டறிவு அனுபவம் இறையனுபூதி எல்லாம் அடங்கும். மற்றக் குப்பைப் பொருளை
தேடுவதை நிறுத்தி வேறு வித்தையை நாடுவதை நிறுத்தி உருப்பட வேண்டும் என்பதற்காக
அருணகிரிப் பெருமான் காட்டியது.

முன்பு இரஹஸ்யம் என்று காத்த ஒன்றை ஞானியர் நம் பொருட்டு மேளம் கொட்டி
அறிவிக்கின்றனர். யதிராஜர் போலே. இதில் அதிசயம் என்ன என்றால், பெருமான் தன்
மழலை மொழியில் தன்னை விடப் பெரிய தகப்பனுக்கு உரைத்ததுதான். மாமன், தகப்பன்,
பிரமன், அம்மை, மாமி எல்லாரும் வாயில் மூக்கில் விரல் வைத்து வியக்கின்றனர்.

அருணகிரிப் பெருமான் புகழை முருகன் அருளை  தாயுமானவ சுவாமி "அறிவை அறிவதுவே
ஆகும் பொருள்
என்று உறுதி சொன்ன உண்மையினை ஒருநாள் எந்நாளோ" என்கிறார். எங்கள்  கோவை
மாவட்டத்தில் ஆகாவளி
என்றால் "ஒண்ணுத்துக்கும் ஆக மாட்டான்" என்று அர்த்தம். ஆகும் பொருள் என்று
தாயுமானவ சுவாமி கூடவே ஒரு
அழுத்தம். அதே மாதிரி உறுதி சொன்ன உண்மை. உண்மை உறுதியானது. அசைவற்றது.
சாஸ்வதம்.  மற்றது மாயம்.   "இறுதி கண்டு உண்மையின் இயல்பு உணர்த்திய சங்கரன்
ஏற்றமும்" என்று பாரதி சொன்னதும் காண்க.

இறுதி, ஔி, தெளிவு, அறிவு, பொருள் எல்லாம் ஞானமயமான சொற்கள். ஆகும் பொருளும்
உறுதி உண்மையும் தேடா மனிதர் ஆயிரம் அறிவு காட்டினாலும் அறிவிலிகள். இதைச்
சொல்லும் ஞானியர் வரிசை அருணகிரிப் பெருமான், தாயுமானவ சுவாமி, ஆதி சங்கரன்,
கடைக்குட்டி பாரதி. எல்லாம் அறிந்த இறைவர், தேவர், ஞானியர், அறியா அறிவிலிகள்
யாவர்க்கும் ஆசானாய் புகலாய் இருக்கும் அப்பன் முருகனைக் காணும் நாள் எந்நாளோ?
இப்போதே திருஏரகம் செல்ல அவா எழுகிறது. முருகா வருக! நலமெலாம் தருக!

*இந்திரா ப்ரியதர்ஷிணி *
********************************************

*சித்தானந்தம் *

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoowXhFuzUvZVJyUEGV5ovxALZ1QwGazebELzpfUOwGcBA%40mail.gmail.com.

Reply via email to