let illiterate gopalakrishnan first write the 30 meanings  of the sentence
and then cricise; later i shall prove again and again he is a .........KR

On Mon, 10 Nov 2025 at 07:46, 'gopala krishnan' via Thatha_Patty <
[email protected]> wrote:

> I think the wordings must be -THAMASOMS JYOTIR GAMAYA.
>
> for Mr.  Rajaram, chukkumo lakuthi ppali and not chukku, molaku,
> thippali.
>
> JYOTIRGA MAYA gives different beginning. I cannot remain with out
> responding, *since he calls me illiterate.*
>
> Gopalakrishnan former ITS 7024
>
> On Monday 10 November, 2025 at 07:15:31 am IST, Rajaram Krishnamurthy <
> [email protected]> wrote:
>
>
> Upanishad said in one line THAMASO MA JYOTHIRGA MAYA  KR IRS 101125
>
> ---------- Forwarded message ---------
> From: *Chittanandam V R* <[email protected]>
> Date: Mon, 10 Nov 2025 at 05:59
> Subject: Fwd: Indira Priyadarshini - Knowledge
> To:
>
>
>
> *ஆகும் பொருளும் உறுதி உண்மையும்*
>
> *இந்திரா ப்ரியதர்ஷிணி *
>
> அமரர் பசி கெட உதவிய க்ருபை முகில் அகில புவனமும் அளவிடு குறியவன்
> அளவு நெடியவன் அளவிட அரியவன் மருகோனே
> அரவு புனைதரு புனிதரும் வழிபட மழலை மொழிகொடு தெளி தர
> ஒளி திகழ் அறிவை அறிவது பொருள் என அருளிய பெருமாளே!
>
> தேவர்கள் பசி நீங்க உதவிய கருணை நிறை திருமால், எல்லா உலகையும் அடியால் அளக்க
> வல்ல குறு
> வடிவுடை வாமன மூர்த்தி அளந்த போது நீண்ட (திரிவிக்கிரம) உருவம் கொண்டவன்,
> மதித்து எண்ணுதற்கு
> அரியவன் ஆகிய திருமால் மருகனே, பாம்பைப் பூண்ட தூய்மை  சிவபெருமானும்
> துதிக்கும்படி, உனது
> குதலைச் சொல்லால் அவர் தெளிவு பெறும்படி, ஒளி மயமான அறிவை அறிவது தான் பொருள்
> ஆகும் என்று அவருக்கு உணர்த்தி அருளிய பெருமாளே.
>
> தகப்பனுக்கு தனயன் உபதேசித்த பொருள் இதுவாகும். செவியில் தமக்கும்
> மறைபொருளாகக் கூறியதை
> அருணகிரிநாதர் அளவற்ற கருணையால் மக்குகள் நாமறியக் கூறுகிறார். அறிவு எது?
> அறிவாளி யார்?
> என்பதைப் பற்றி பலவகைத் தர்க்கங்கள் உடைய நடப்புலகில், தெளிந்த ஞானியர்
> காட்டிய அறிவும்
> பொருளும் இறையே இறை உணர்வில் நிறைதலே.
>
> செயற்கை அறிவு, நுண்ணறிவு, ஆறாம் அறிவு எனக் கோடிக் கோடி அறிவு வகைகள் கொண்டு
> மனிதம்
> காட்டுகிறது தன் சிற்றறிவால். ஆனால் ஔி திகழ் அறிவு அவனை அறிதலே! திகழும்
> விரவும் ஔி. இருளை
> விழுங்கும் ஔி. மற்ற அறிவுக் குப்பை அந்த அறிவை அறியத் தடையாக மும்மலங்களை
> நம்முள் நிறைத்த
> வண்ணம் இருட்டை நிரப்பியபடி இருக்கிறது. இதைக் கண்டுதான் மணிவாசகப் பெருமான்
> கல்வி எனும்
> பல்கடல் பிழைத்து ஓடிவிட்டார்.
>
> இதே கருத்தில் திருப்புகழில் பல வரிகள் உண்டு.
> அறிவை அறிபவர் அறியும் இன்பம் தனை (அகரமுதலென) திருப்புகழ்.
> அறிவால் அறிந்து உன்இருதாள் இறைஞ்சும்   --- (விறல்மாரன்) திருப்புகழ்.
> அறிவை அறிவால் அறிந்து நிறைவாகி (சுருளளக) திருப்புகழ்.
>
> இருதாள் இறைஞ்சுதல் தான் பேரறிவு என்று அறிவதே அறிவு.
>
> எனக்கு மிகவும் பிடித்த சொல் பொருள். இந்தப் பொருள்தானே பெரிய ஸம்பத்து.
> மற்றதெல்லாம் சல்லிப் பயனற்றது. எனவே வீண்தேடல் நிறுத்துக. அறிவை அறிவதே
> சிறந்த பொருளாகும். வாழ்வின் இறுதிப்பயனாகும். அறிதல் கற்றலின் அப்பாற்பட்டது.
> அதில் பட்டறிவு அனுபவம் இறையனுபூதி எல்லாம் அடங்கும். மற்றக் குப்பைப் பொருளை
> தேடுவதை நிறுத்தி வேறு வித்தையை நாடுவதை நிறுத்தி உருப்பட வேண்டும் என்பதற்காக
> அருணகிரிப் பெருமான் காட்டியது.
>
> முன்பு இரஹஸ்யம் என்று காத்த ஒன்றை ஞானியர் நம் பொருட்டு மேளம் கொட்டி
> அறிவிக்கின்றனர். யதிராஜர் போலே. இதில் அதிசயம் என்ன என்றால், பெருமான் தன்
> மழலை மொழியில் தன்னை விடப் பெரிய தகப்பனுக்கு உரைத்ததுதான். மாமன், தகப்பன்,
> பிரமன், அம்மை, மாமி எல்லாரும் வாயில் மூக்கில் விரல் வைத்து வியக்கின்றனர்.
>
> அருணகிரிப் பெருமான் புகழை முருகன் அருளை  தாயுமானவ சுவாமி "அறிவை அறிவதுவே
> ஆகும் பொருள்
> என்று உறுதி சொன்ன உண்மையினை ஒருநாள் எந்நாளோ" என்கிறார். எங்கள்  கோவை
> மாவட்டத்தில் ஆகாவளி
> என்றால் "ஒண்ணுத்துக்கும் ஆக மாட்டான்" என்று அர்த்தம். ஆகும் பொருள் என்று
> தாயுமானவ சுவாமி கூடவே ஒரு
> அழுத்தம். அதே மாதிரி உறுதி சொன்ன உண்மை. உண்மை உறுதியானது. அசைவற்றது.
> சாஸ்வதம்.  மற்றது மாயம்.   "இறுதி கண்டு உண்மையின் இயல்பு உணர்த்திய சங்கரன்
> ஏற்றமும்" என்று பாரதி சொன்னதும் காண்க.
>
> இறுதி, ஔி, தெளிவு, அறிவு, பொருள் எல்லாம் ஞானமயமான சொற்கள். ஆகும் பொருளும்
> உறுதி உண்மையும் தேடா மனிதர் ஆயிரம் அறிவு காட்டினாலும் அறிவிலிகள். இதைச்
> சொல்லும் ஞானியர் வரிசை அருணகிரிப் பெருமான், தாயுமானவ சுவாமி, ஆதி சங்கரன்,
> கடைக்குட்டி பாரதி. எல்லாம் அறிந்த இறைவர், தேவர், ஞானியர், அறியா அறிவிலிகள்
> யாவர்க்கும் ஆசானாய் புகலாய் இருக்கும் அப்பன் முருகனைக் காணும் நாள் எந்நாளோ?
> இப்போதே திருஏரகம் செல்ல அவா எழுகிறது. முருகா வருக! நலமெலாம் தருக!
>
> *இந்திரா ப்ரியதர்ஷிணி *
> ********************************************
>
> *சித்தானந்தம் *
>
> --
> On Facebook, please join https://www.facebook.com/groups/keralaiyerstrust
>
> We are now on Telegram Mobile App also, please join
>
> Pattars/Kerala Iyers Discussions: https://t.me/PattarsGroup
>
> Kerala Iyers Trust Decisions only posts : https://t.me/KeralaIyersTrust
>
> Kerala Iyers Trust Group for Discussions:
> https://t.me/KeralaIyersTrustGroup
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "KeralaIyers" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion visit
> https://groups.google.com/d/msgid/keralaiyers/CAL5XZoowXhFuzUvZVJyUEGV5ovxALZ1QwGazebELzpfUOwGcBA%40mail.gmail.com
> <https://groups.google.com/d/msgid/keralaiyers/CAL5XZoowXhFuzUvZVJyUEGV5ovxALZ1QwGazebELzpfUOwGcBA%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer>
> .
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "Thatha_Patty" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion visit
> https://groups.google.com/d/msgid/thatha_patty/3858478.3749274.1762740878312%40mail.yahoo.com
> <https://groups.google.com/d/msgid/thatha_patty/3858478.3749274.1762740878312%40mail.yahoo.com?utm_medium=email&utm_source=footer>
> .
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopkGpQCKtv7jzFeR6NmkWVxN_ce3jKMJ%3Dvm_iUCg_MbiA%40mail.gmail.com.

Reply via email to