👃👃 Desikamani On Sun 17 May, 2026, 08:06 Rajaram Krishnamurthy, <[email protected]> wrote:
> Azhwar thoughts are different from truth where Vedas say Brahmam is > NIRGUNA KR 17526 > > ---------- Forwarded message --------- > From: Chittanandam V R <[email protected]> > Date: Sat, 16 May 2026 at 21:05 > Subject: Fwd: Tamilnayagam - Divya Prabandham > To: > > > > > > > நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருக்குறுந்தாண்டகம் - குணங்கொண்டு உள்ளம் கூறு நீ > கூறுமாறே > > *தமிழ்நாயகம் * > > > நாம் ஒருவரை நினைக்கிறோம் என்றால் எதை நினைப்போம்? அவருடைய உடை, உருவம் ஒரு > புறம் நினைவு வந்தாலும், பெரும்பாலும் அவருடைய குணங்களே நம் நினைவில் > நிற்கும். நல்லவர், பொல்லாதவர், கோபக்காரர், சிரிக்க சிரிக்க பேசுவார், > அறிவாளி என்றெல்லாம் அவரின் குணநலன்களே பெரும்பாலும் நம் மனதில் வந்து போகும். > > உடல் தோற்றம் மாறக் கூடியது. நம் இளவயது புகைப்படத்தைப் பார்த்தால் நமக்கே > சில சமயம் ஆச்சரியமாக இருக்கும். "நானா அது, அப்படியா இருந்தேன்" என்ற > எண்ணம் வரும். உடல் மாறும். குறுகிய காலத்தில் பெரிய அளவில் மாறும். குணம் > மாறுவது இல்லை. > > நாம் இறைவன் என்று நினைப்பது அவரின் அவதாரங்களையே. நீல வண்ணம், கறுப்பு > வண்ணம், குள்ள உருவம், சிங்கத் தலை என்றெல்லாம் நினைக்கிறோம். இறை என்பது நம் > சிந்தனையில் சிக்காத ஒன்று என்பது சமயக் கருத்து. > > உருவம்; அரு உருவம்; அருவம். பின் அதையும் தாண்டிய ஒன்று. அது என்ன என்று > நம் சிற்றறிவு அறியாது. "சிந்தையும் செல்லா சேச்சியன் காண்க" என்பார் > மணிவாசகர். இங்கே, ஆழ்வார் சொல்கிறார், > > "நீ அவனை எப்படி எல்லாம் நினைக்கிறாயோ நினை. ஒரு தவறும் இல்லை. உருவங்களைத் > தாண்டி, அவன் குணம் ஒன்று இருக்கிறது. அதையும் நினை" என்கிறார். > > பாடல்: > > *காற்றினைப் புனலைத் தீயைக் கடிமதிள் இலங்கை செற்ற* > > *ஏற்றினை, இமயம் மேய எழில் மணித் திரளை, இன்ப* > > *ஆற்றினை அமுதந் தன்னை அவுணன் ஆருயிரை யுண்ட* > > *கூற்றினை, குணங்கொண்டு உள்ளம் கூறு நீ கூறுமாறே. *(திருகுறுந்தாண்டகம் - > திருமங்கையாழ்வார்) > > > பொருள்: காற்றினை, நதியை, நீரை, தீயை காவல் பொருந்திய மதில்களை உடைய இலங்கையை > போரில் வென்ற ஏறு போன்றவனை, இமயம் போல் அழகிய மணி போன்றவனை, பேரின்ப > வெள்ளத்தினை, அமுதத்தை, அரக்கர்களின் அருமையான உயிரை மாய்த்த கூற்றுவனைக் > குணங்களைக் கொண்டு உள்ளமே நீ சொல், கூறுகின்ற வழி அதுதான். > > (ஏறு= ஆண் சிங்கம்,காளை) > > வழிபடும், நினைக்கும் ஒரு வழி இருக்கிறது. அந்த வழியில் வழிபடு என்கிறார். இந்தப் > பாசுரத்தை விரித்து பொருள் சொல்லுவார்கள். > > சீதை என்ற ஜீவ ஆத்மா பிறவி என்ற பெருங்கடலால் சூழப்பட்டு ஞானேந்திரியங்கள், > கன்மேந்த்ரியங்கள் என்ற பத்துத் தலை அரக்கனால் சிறை வைக்கப் பட்டு இருந்தது. > இராம நாமத்தின் மூலம் அது விடுபட்டு இறைவனை அடைந்தது என்று விரித்தும் > பொருள் சொல்லுவார்கள். ஆத்மா எவ்வளவுதான் முயன்றாலும், குரு/ஆச்சாரியன் > (அனுமன்) அருள் இன்றியும், இறை நாமம் இன்றியும், அவன் அருள் இன்றியும் > கடைந்தேற முடியாது என்றும் விரித்துச் சொல்லலாம். > > நம் அறிவும், அனுபவமும் விரிய விரிய இவற்றின் உட் பொருளும் விரிந்து கொண்டே > போகும். > > *தமிழ்நாயகம் * > > ***************************************** > > *சித்தானந்தம் * > > > -- > You received this message because you are subscribed to the Google Groups > "Thatha_Patty" group. > To unsubscribe from this group and stop receiving emails from it, send an > email to [email protected]. > To view this discussion visit > https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZooRDpbShtAtqHoQZ650hV770K_b7bD0q1yrotF7ND%2BCrw%40mail.gmail.com > <https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZooRDpbShtAtqHoQZ650hV770K_b7bD0q1yrotF7ND%2BCrw%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer> > . > -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJiWWoLuAQnK2dZS7RmZr-6kmV-UBUEv3sGTeM%2BF0%3DtADq_YOg%40mail.gmail.com.
